SaraThas Blog

தலை குனிந்து என்னை பார் ,தலை நிமிர வைக்கிறேன் - புத்தகம்

நினைவெல்லாம் நீயே -பகுதி 7

  என்னது அண்ணாவா?.. நான் உனக்கு அண்ணாவா?..
இல்ல எனக்கு எல்லாத்தையும் அண்ணானு தான் கூப்பிட்டு பழக்கம்..அதான்..
உனக்கு அண்ணனானு கூப்பிட ஒரு ஆள் வருவான் அவனை கூப்பிடு... என்ன அண்ணானு கூப்பிடாத.. கால் மீ கவின்.. தட்ஸ் எனப்.. என்று சாப்பிட்டுவிட்டு எழுந்தான்..
அண்ணா வாம்.. அண்ணா .. என்ன பாத்தஅவளுக்கு அண்ணா மாறிய இருக்கேன்.. என்று எல்லாத்தையும் போட்டுகலைக்க ஆரம்பித்தான்..
அண்ணன்னு தானே சொன்னேன் .. அதுக்கு எதுக்கு இவ்ளோ கோவம் என்று சமையல் அறையை கிளீன் செய்தாள்..
  அவள் தோட்டத்தை ரசித்துவிட்டு , சில வேலைகளை செய்தாள்.. வேலைசெய்து பழக்கப்பட்ட உடம்பு .. வேலைசெய்யாமல் இருக்க அவளுக்கே ஒரு மாறி இருந்தது.. அவளுக்கு என்று யாருமில்லை இதுவரை .. இந்த வாழ்க்கையை எனக்கு பிடித்தமாறிவாழ கடவுள் குடுத்த ஒரே வாய்ப்பு இதுதான் .. கவின் சொன்னமாறி வாழ்ந்து பாப்போம்.. இதுவரை கனவில் மட்டுமே கண்டுகளித்த ஜோதியை , இனி நிஜத்திலும் அதேபோல வாழவேண்டும்.. எதற்கும் பயப்படாம இருக்கனும்.. பேசுறவங்க கண்ணைபார்த்து பேசணும்.. எனக்கு மனசுல தோணுறத வெளிப்படையா பேசணும்.. தைரியமா இருக்கனும் .. உப்ப்.. கண்ணாடியை பார்த்து நமக்கு நாமே பேசுறதுக்கே இவ்ளோ கஷ்டப்படுறோமே, எப்படி எல்லாத்தையும் பார்த்து பேசப்போறோம்...ஜோதி தைரியமா இருடி... என்று தன்னை தானே சமாதானப்படுத்திக்கொண்டாள் .. தலையை நிமிர்த்தி ,நேராக நடந்து ஒத்திகை பார்க்க, இதையெல்லாம் வெளியே கதவின் அருகே நின்று கொண்டு பார்த்துக்கொண்டு இருந்த கவினுக்கு சிரிப்பாக வந்தது.. அவன் வந்த சுவடே தெரியாமல் வெளியேறி அவளுக்கு தேவையான இந்த உதவியை முதலில் செய்தான்.. 
  மாலை நேரம் , ஜோதியை அழைத்த கவின், ஹாலில் அமர்ந்து இருந்த இருவரை காண்பித்து அறிமுகப்படுத்தினான் .. அவளுக்கோ பயம் வந்து கவினின் நிழலில் பின்னாடியே மறைந்து வந்தாள்.. கவின் அவளை முன் இழுத்து , இது என்னுடைய நண்பன் 'விக்கி ', இது உனக்கு வந்துஇருக்க teacher.. என்று அறிமுகப்படுத்தினான்..
விக்கி ,முன்னால் வந்து 'ஜோதி , என்னுடைய பெயர் விக்கி என்னும் விக்னேஷ் , அப்புறம் அண்ணானு கூப்பிட ஆள் இல்லாம தவிச்சதா, எனக்கு உளவு துறையில் இருந்து ரிப்போர்ட் வந்துச்சு.. அந்த கவலையை தீர்க்க அடியேன் உள்ளேன் .. இப்போ இருந்து நீ தான் என்னுடைய தங்கை.. நான்தான் உனக்கு அண்ணா ..

  விக்கியின் பேச்சில் அவளது கலக்கம் குறைந்து , இயல்பாக பேசினாள் இருவருடனும்..
பின் டீச்சர் மூலம் சிறிது சிறிதாக நெறைய கற்றுக்கொண்டாள்.. நடை உடை பேச்சு எப்படி எண்ணங்களை வெளிப்படுத்துவது இப்படி எல்லாம் அவளுக்கு நன்றாக ட்ரைனிங் கொடுத்தார்கள்..நாட்கள் வேகமாக சென்றது .. எல்லாருடைய வாழ்விலும் மாற்றம் வந்தது..

மாற்றம் இல்லாத வாழ்க்கை ஏதடா ?
மாற்றமே நிலையானது ..  
  ஜோதி இப்போது நன்றாக பேச கற்றுக்கொண்டாள் .. அவள் இருக்கும் இடமே கலகலவென்று இருந்தது.. விக்கி , கவின் இருவருக்கும் மிக நல்ல தோழியாக மாறினாள்.. ஜோதி மட்டும் அந்த வீட்டில் தாங்கிக்கொள்ள , அவளுக்கு துணையாக அந்த வீட்டில் வள்ளி என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தினான்..
கவின் , கவின் கிட்ட இந்த மாற்றத்தை எதிர்பார்த்துஇருக்கவே முடியாது.. அவன் எல்லாம் கெட்டநடத்தைகளையும் விட்டுவிட்டு , ஒழுங்காக அலுவலகம் செல்ல தொடங்கியிருக்கிறான்..விக்கியும் கவினும் இணைந்து புதிதாக ஒரு தொழிலை ஆரம்பித்து உள்ளனர்.. கவின் வீட்டில் உள்ள எல்லாருக்கும் ரொம்ப சந்தோசம் .. வீட்டினரிடம் பேசாமல் அவர்களை ஒதுக்கியே வைத்துஇருந்தான்.. ஆனால் ஜோதி கூட அவ்வப்போது அங்கே தங்குவது அவர்களுக்கு பிடிக்கவில்லை .. அவனிடம் வெளிப்படையாக பேசவும் முடியாமல் மறைமுகமாக அவனை சொல்லிக்காட்டினார்கள்.. கவினோ, அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் , வேலை செய்து அதற்காக ஒரு சம்பளத்தை மட்டும் எடுத்துக்கொண்டான்.. ஜோதியும் , கவினும் அன்று நடந்த நிகழ்வுகளை மற்றவரிடம் கூறிவிட்டுத்தான் தூங்கவே செல்வார்கள்..

மாதத்திற்கு ஒருமுறை மூவரும் வெளியே சென்று சுற்றிவிட்டு ,ஜோதிக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கிவிட்டு வருவார்கள்..ஜோதிக்கு இப்போது சில நண்பர்கள் கிடைத்தாலும் , அவள் அதை 
  அவள் பயிலும் இடத்தோடு முடித்துக்கொள்ளுவாள்.. அவளை பற்றி அங்கே இருந்த யாருக்கும் தெரியாது..
  ஓகே இவ்ளோ ஹாப்பி ஆஹ் போய்ட்டு இருக்கே அவள் லைப் அப்புடின்னு ரொம்ப சந்தோசமா இருந்த எப்புடி .. ஆப்பு இஸ் ஆன் தி வே..

நினைவெல்லாம் நீயே -பகுதி 7 நினைவெல்லாம் நீயே -பகுதி  7 Reviewed by SaraThas on December 10, 2018 Rating: 5

Post Comments

No comments:

Powered by Blogger.