பலவருடங்களுக்கு முன் , பஞ்சத்தால் வாடி இருந்த தமிழகம் , பசுங்குடியின் எழில் குறைந்து மழையில்லாமல் வாடி காணப்பட்டது. உணவுக்கு பஞ்சம் ஏற்பட்ட நிலையில், ஒரு குடிசையின் முன் இந்த மண்ணை தொடுவதற்காக ஒரு உயிர் மிக பிராயர்த்தனப்பட்டு கொண்டு இருந்தது. அதை வெளியில் எடுக்க , இன்னொரு தன்னுடைய உயிரை பணையம் வைத்து முயற்சித்துக்கொண்டு இருந்தது.
" ஆத்தா , மீனாட்சி அம்மா .. என்னோட மருமகளுக்கு நல்லபடியா பிரசவம் நடக்கணும். அந்த புள்ளையோட வந்து உன்னோட சன்னிதானத்துல முடி இறக்குறேன் ஆத்தா.." என்று வேண்டிக்கொண்டு இருந்தார் மீனாட்சி. அவரது வேண்டுதல் பலித்தது போல , அந்த ஜீவன் தன் தாயின் கருவறையில் இருந்து வெளியே வந்தது. தொப்புள்குடி அறுபடும் முன்னரே , அந்த ஜீவனை உலகிற்கு தந்த மகிழ்ச்சியில் அவளது உயிர் பிரிந்து அதன் இணையுடன் சேர்ந்துகொண்டது.இரண்டு வருடமாக மழையில்லாமல் காய்ந்து கிடந்த பூமி , அந்த ஜீவன் அழுகுரலை கேட்டு வானமே இருண்டு மழைபொழிய தொடங்கியது. அந்த ஜீவன் வந்த நேரம் , ஊரே சந்தோசமாக மழையில் ஆடிக்கொண்டு இருக்க , தாய் இறந்தது கூட தெரியாமல் அவளின் இதமான வெப்பம் இல்லாமல் குழந்தை அழுதுகொண்டு இருந்தது.
தன் மருமகளும் மகனும் தன்னை விட்டு சென்றுவிட ,தனக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள இருந்த ஜீவனை அணைத்து ' நீ யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம்.. ஆத்தா எனக்கே எனக்குன்னு அளித்த பொக்கிஷம் நீ.. ' என்று நினைத்து அவளது காதில் 'மரகதம் ..மரகதம் ..மரகதம் ' என்று பெயர் வைத்தார்.நாட்கள் நகர , மரகதமும் வளர்ந்து வந்தாள்."ஆத்தா .., பசிக்குது " என்று விளையாடிய மண்ணுடன் வந்து சாப்பிட உட்கார்ந்தவளை ,"போய் கை கால் அலம்பிட்டு வாடி , அப்புறம் வந்து கொட்டிக்கோ" "போ கிழவி , எனக்கு பசிக்குது .நீ ஊட்டிவிடு.." என்று வாய்யை திறக்க , பாட்டியும் அவளுக்கு ஊட்டிவிட்டார்.
சாப்பிட்டதும் , " சரி கிழவி , நான் போய் விளையாடுறேன்" என்று ஓடிவிட்டாள். அவளுக்கு கிடைப்பதே இந்த விடுமுறை நாட்கள் தான் , அப்போதாவது அவள் சந்தோசமாக பிள்ளைகளுடன் விளையாடிவிட்டு வரட்டும். என்று தனது வேலைக்கு சென்றுவிட்டார் .மரகதமும் தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்தாள். அவர்களுக்கு எல்லாம் கோடை விடுமுறை. அதனால் நிறைய பேர் இருந்தனர். எல்லாரும் சேர்ந்து தனி தனி குழுவாக பிரிந்து , தெரு போல் அமைத்து , ஒரு சிறிய குடும்பம் குடும்பமாக அமைத்து சோறு சமைத்து , தேங்காய் கொப்பரைகளை வைத்து பரிமாறி , சந்தோசமாக விளையாடிக்கொண்டு இருந்தனர்.விடுமுறை என்பதால் , நண்பர்களின் உறவினர்களும் வர , அந்த கூட்டம் இன்னும் பெரிதாகியது.
அவளது குடும்பத்தில் , அவள் சமைக்க , மாடசாமி வெளி வேலை பார்க்க , சின்னி அவளுக்கு குழந்தைபோல இணைந்து விளையாடிக்கொண்டு இருந்தனர்.
அங்கே வந்த சரசு ," அடியேய்,.. சின்னிக்கு பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆச்சு , அவளை அனுப்பு , என்னோட பொண்ணு மகா போற " என்று சின்னியை அழைத்து செல்ல ,மரகதம் ," அக்கா பள்ளிக்கூடத்துல என்ன நடக்கும் அக்கா "சரசு ," அங்கே போன நிறைய பேர் இருப்பாங்க , எல்லாரும் சேர்ந்து விளையாடுவாங்க .,மத்தியானம் சாப்பாடு கூட தருவாங்க " என்று தனக்கு தெரிந்ததை கூற , மரகதத்தின் மனதில் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை எழுந்தது.
இரவில் , பாட்டியின் அருகே படுத்துக்கொண்டு ," பாட்டி நானும் பள்ளிக்கூடத்துக்கு போறேன் பாட்டி .. என்னையும் சேத்திவிடு அங்க " என்று கெஞ்சிக்கொண்டு இருந்தாள்.
பாட்டி ," என்னால அந்த அளவுக்கு உனக்கு செலவு செய்ய முடியாது. நமக்கு இங்க கஞ்சிக்கே வழியில்லாம இருக்கோம். எதோ நீயும் கொஞ்சம் வேலை செய்யுறதுனால நமக்கு பெரிய வீட்டுல இருந்து வருமானம் வருது.. நீயும் பள்ளிக்கூடத்துக்கு போய்ட்டா , அந்த வருமானமும் இல்லாம நான் எப்படி உன்னை வளர்த்து ஒருத்தனுக்கு கட்டி கொடுக்கமுடியும்""போ கிழவி , எப்போ பார்த்தாலும் இப்படியே சொல்லு , நல்ல சாப்பாடு கேட்டாலும் நீ இதைத்தானே சொல்லுற.. " என்று மூக்குவிடைக்க அழுதுகொண்டு இருந்த பேத்தியை சமாதானப்படுத்தி " பள்ளிக்கூடம் இப்போ பூட்டியிருக்கு . அதை திறக்குறப்போ உன்னை சேத்துவிடுறேன், இப்போ தூங்குமா" என்று அவளை தூங்க வைத்தார்.
இப்படி பாட்டியும் பேத்தியுமாய் தங்களது வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருந்தார்கள்.
அவளும் சந்தோசத்துடன் தனது நண்பர்களிடம் இனிமேல் தானும் உங்களுடன் பள்ளிக்கு வருவேன் என்று கண்களில் சந்தோசம் மின்ன கூறிக்கொண்டு இருந்தாள்..
அதை இரு ஜோடி கண்கள் பார்த்து ரசித்தது. அவளது கண்ணில் உள்ள சந்தோசத்தை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தது ஒரு ஜோடி கண்கள். மற்றொரு ஜோடி கண்கள் அவளது இளமையை ரசித்துக்கொண்டு இருந்தது..
அவள் விளையாடுவதை முதல் நாளிலிருந்தே இருவரும் கவனித்து வந்தனர். பள்ளிக்கூடத்தை பற்றி பேசும்போதும் நல்ல உணவு வகைகளை பற்றி பேசும்போதும் அவள் கண்களில் உள்ள ஏக்கத்தை இரண்டு கண்களும் கவனித்தது.
வேண்டுமென்றே அவளை சீண்டி விளையாடுவதும் , ஆவலுடன் அவள் தரும் அந்த உணவை அடித்துக்கொண்டு வாங்குவதும் , கண்ணாமூச்சி விளையாடுவது , ஆலமர விழுதுகளில் தொங்கி அவளை பார்த்துக்கொண்டே இருப்பது , இப்படி கிராமத்திற்கே உண்டான எல்லாவிதமான விளையாட்டுகளையும் அவளை வெறுப்பேற்றி விளையாடிக்கொண்டு இருந்தான் முத்துச்செல்வம் .முத்துச்செல்வம் பெரிய வீட்டின் மூத்த வாரிசு. தனது அத்தைமகள் வள்ளியின் ஆசைக்கு இணங்கி , அங்கே விளையாடி கொண்டு இருந்தான். அவளது கண்களில் முதலில் பட்டது மரகதம் தான்.அவனையும் அறியாமல் , அவனுக்கு அவளை பிடித்து இருந்தது. அவள் கோவப்படும் அழகை , ரசித்துக்கொண்டு இருந்தான். தினமும் அவளுக்காகவே அத்தை மக்களை அழைத்துக்கொண்டு வந்தான். இதை எல்லாம் அறியாமல் மரகதம் தனது விளையாட்டில் மகிழ்ந்துஇருந்தாள்
ஒரு காதல் கதை - காதல் 2
Reviewed by SaraThas
on
December 08, 2018
Rating:

No comments: