SaraThas Blog

தலை குனிந்து என்னை பார் ,தலை நிமிர வைக்கிறேன் - புத்தகம்

நினைவெல்லாம் நீயே - பகுதி 1


கதையின் நாயகி

"ஆஆஆ ..அ..ம் ..மா ..ஸ்ஸ்ஸ்ஸ் .... ஆஆஆ" என்று விழியிலிருந்து வழிந்த நீரை துடைக்க முடியாமல் தனது கைகளில் பட்ட காயத்திற்கு மருந்தும் போடமுடியாமல் அழுதுகொண்டு இருந்தாள் ஜோதி..
ஆம் இவள்தான் நம் கதையின் நாயகி.. தங்களது வாழ்வில் ஜோதியாக வந்தவள் என்று அவளது பெற்றோர் ஜோதி என பெயரிட்டனர்.. அவள் வாழ்வில் வெளிச்சத்தை பார்க்கமாட்டாள் அவளது வாழ்வு முழுக்க துன்பமே வந்து சேரும் என்று யாராவது அவளது அன்னையிடம் கூறியிருந்தால் , அவ்வளோதான் ..கூறியவர்கள் கயிற்றில் தொங்கிக்கொண்டு இருக்க அவளது அன்னை (மணிமேகலை ) அவர்களை துவைத்து காயபோட்டுஇருப்பாள்.. அவளது தந்தை (சிவரஞ்சன் ) அவர்களது தொழிலை கவனிக்க , குடும்பம் மீது பாசம் பற்று இல்லாமல் போனது.. மேகலையும் அவர் நமக்காக உழைக்கிறார் என்று குடும்ப பொறுப்பை கட்சிதமாக செய்து வந்தாள்..       
தனது காயத்தை ஆற்ற யாருமே இல்லையே என்று அவளது மனம் நினைவுகளில் இருந்து சிலவற்றை தட்டி பார்த்தது..
ஜோதி POV :
நேற்று நானும் அம்மாவும் ஜாலியா பீச்க்கு போனோம்..நான் ரொம்ப ஜாலியா மணல்கோட்டை கட்டி விளையாடிக்கொண்டு இருந்தேன். அம்மா எனக்கு ஐஸ் கிரீம் , மக்காசோளம் எல்லாமே வாங்கி தந்தாங்க ..என்ன குடை ராட்டினத்தில உட்கார வச்சு விளையாட வச்சாங்க ..அங்க இருந்த இன்னும் கொஞ்ச குழந்தை களோட நானும் அம்மாவும் எவ்ளோ ஜாலியா கண்ணாமூச்சி , தொட்டு பிடி விளையாடிட்டு இருந்தோம் .. எனக்கு கண்ணை கட்டுனாங்க , நான்  பயக்க அம்மாவே எனக்கு பதிலா அவுட் ஆகி விளையாட ஆரம்பிச்சுட்டாங்க ..ஹ்யஆ .. செமயா இருக்கு .. இந்தமாறி இரவு 10 மணிக்கு விளையாடிட்டு இருக்குறது.. அங்கே பக்கத்துல சில அண்ணா ,அக்கா எல்லாம் விளையாடிட்டு இருந்தாங்க .. அதைப்பார்த்து தான் நாங்களே விளையாட ஆரம்பிச்சோம்.. அம்மா மணி ஆகிடுச்சுனு என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து குளிக்க வச்சு சாப்பாடு குடுத்து படுக்க வச்சுட்டாங்க.. போட்ட ஆட்டத்துக்கெல்லாம் நானும் தூங்கிட்டேன்..      
அச்சச்சோ .. அம்மா கிட்ட போய் நேத்து அவங்ககிட்ட நான் குடுத்த பந்தை வாங்கணும் .. நானும் நிக்கியும் (பக்கத்து வீட்டு பையன் ) சேர்ந்து விளையாடணும் .. படுத்துட்டே நேத்து நடந்தை நினைத்துக்கொண்டு முழித்து பார்த்தேன்.. அம்மா பக்கத்துல இல்லை.. எப்பவும் நடக்குறதுதான் .. அம்மா எனக்கு முன்னாடியே எழுந்து குளிச்சுட்டு சாமி கும்பிட்டு காலை சமையல் செய்வாங்க .. செய்ததை எடுத்து கொஞ்சம் தட்டில் வைத்து சாமிக்கும் காகத்திற்கு படைத்துவிட்டு , அப்பாக்கு உதவி செய்வாங்க.. அப்பா இருப்பாரான்னு எனக்கு தெரியாது.. நான் தூங்கினதுக்கு அப்பறம் தான் வருவாரு .. நான் கண்ணை முழிச்சு பாக்குறதுக்குள்ள அவர் ஆபீஸ் போய்டுவாரு.. அவரை நான் பாத்து பேசி ஒரு மாசம் இருக்கும் .. எனக்கு அம்மா னா உயிர் .. அவங்கதான் எனக்கு கதை சொல்லுவாங்க , சாப்பாடு ஊட்டிவிடுவாங்க , ஸ்கூலுக்கு கூட்டிட்டு போவாங்க , என்ன திட்டவே மாட்டாங்க.. என்னோட பிரண்ட் நிக்கி அவனுக்கும் அவங்க அம்மாவைத்தான் பிடிக்கும் .. சுபிக்கு( இன்னொரு பிரண்ட் ) அப்பாவைதான் பிடிக்கும்.. நான் கேட்ட பொண்ணுங்க எல்லாத்துக்கும் அவங்க அப்பா தான் பிடிக்கும்... அதேமாறி அப்பாக்களுக்கு பொண்ணுங்க தான் பிடிக்கும் சொல்லுவா.. எனக்கு அதை எல்லாம் கேட்ட அழுகையா வரும் .. ஏன் என்னோட அப்பா இப்படி இருக்காரு , என்கிட்ட பேசுறதுகூட இல்ல , இதெல்லாம் அம்மாகிட்ட சொன்ன ,'யாரு சொன்ன அப்பா உன்மேல பாசமா இல்லைனு ..இங்க பாத்தியா உனக்கு பிடிச்ச ரெட் கலர் கரடி பொம்மை வாங்கிட்டு வந்தாரு.. உங்கிட்ட அவரே கொடுக்கணும்னு நினைச்சு வெயிட் பண்ணிட்டு இருந்தார்.. ஆபீஸ்ல மீட்டிங்ன்னு இப்போதான் கிளம்பினார் என்று அம்மா என்கிட்ட குடுத்தாங்க..
எனக்கு வருத்தம் தான் . ஆனா அந்த கரடி பொம்மையை பார்த்ததும் ,செமயாஇருந்துச்சு.. என்னோட உயரம் இருந்திச்சு .. நான் அதுமேல குதிச்சு வெளையாடிட்டு இருந்தேன்.. தூக்கிட்டு போய் என்னோட பெட் மேல வச்சுட்டேன்...இந்தமாறி அம்மா எனக்கு நிறைய அப்பா குடுத்ததுன்னு சொல்லி குடுப்பாங்க .., சாக்கி .., ஜாமுன் , ஐஸ் கிரீம் , பொம்மை ,.. அடுக்கிட்டே போகலாம்..
நான் பக்கத்துல இருந்த பாலுவை ( கரடி பொம்மையின் பெயர் ) முத்தம் குடுத்துட்டு , அம்மாவை பார்க்க எழுந்தேன்..
"அம்ம்மாஆ .... அம்மாஆஆஅ ..." கத்திகிட்டே வீடு முழுக்க தேடிட்டேன்.. யாரையும் காணோம் ..
அம்மா சொல்லாம எங்கேயும் போக மாட்டாங்களே .. ஒருவேளை வெளையாடுறாங்களோ ..
"அம்மாஆ ..என்னால உன்னை கண்டுபிடிக்க முடியல .. நான் அவுட் ஆகிட்டேன் ..எங்கமா போன ..அம்மாஆஆஆ .. பசிக்குதும்மா ..." என்று வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அறையாக கத்திகொண்டே பார்த்தேன்..
எங்கேயும் இல்லியே .. எங்க என என்னிடம் உள்ள சிறு மூளையை உபயோகப்படுத்தி , ஒரு வேலை கடைக்கு போயிருப்பாங்களோ என வீட்டின் கதவு அருகே வந்தேன்.. வெளியே அடைத்து இருந்தது..
அடச்சா .. அம்மா வெளில தான் போயிருக்காங்க .. நான் பாரு பயந்து எவ்ளோ கத்திட்டேன்.. அம்மா எப்பவுமே அறிவாளிதான்.. வீட்டுக்குள்ள திருடன் வர்றக்கூடாதுனு தாள் போட்டுட்டு போய்ட்டாங்க ..இப்போ எனக்கு பசிக்குதே..என்ன பண்றது.. என்று சமையல் அறைக்குள் நுழைந்தேன்.. அங்கே ஏதும் செய்யவில்லை.. எதுவும் இல்லைனு வாங்க போயிருக்கங்களோ ..அப்படியாதான் இருக்கும்.. அவங்க வரதுக்குள்ள நான் போய் பல் துலக்கிவிட்டு ,குளிச்சுட்டு அம்மா கு பிடிச்ச டிரஸ் போட்டுட்டு அவங்களுக்கு ஷாக் குடுப்போம் என்று நினைத்துக்கொண்டு உள்ளே சென்று தயாராகி வந்தேன்..
அப்போதும் கதவு அப்படியே இருந்தது.. நான் காத்துஇருக்க தொடங்கினேன்.. கதவு திறக்கும் ஓசை கேட்டு கதவிற்கு பின்னால் ஒளிந்து கொண்டேன்.. அம்மாவை பயமுறுத்தலாம் என்று ..
கதவு திறந்தது.. நான் .."பே..................." என்று கத்திகொண்டே இரண்டு கைகளையும் வைத்து பயம் காட்ட , அங்கே நின்று கொண்டுஇருந்தது என்னுடைய அப்பா.. எவ்ளோ நாள் ஆச்சு நான் அவரை பார்த்து.. ஓடி சென்று அவரது கால்களை கட்டிக்கொண்டு ," அப்பாஆஆ .. எவ்ளோ நாள் ஆச்சுப்பா உங்கள பாத்து .. நீங்க குடுத்த பாலு சூப்பர் ஆஹ் இருக்கு பா.. " என்று நான் பேசிக்கொண்டே போக , தீடிரென்று நான் அந்தரத்தில் பறந்து கீழே விழுவது போல இருந்தது..கையில் அடிபட்டது .. அழுதுகொண்டே அப்பாவை பார்க்க , அவர் கோபத்தில் இருப்பதாய் நினைத்துக்கொண்டு ,
" அப்பா சாரி ப்பா... கோவப்படாதீங்க ப்பா ..நீங்க உள்ள வரதுக்கு முன்னாடியே நான் பேசிடுஇருக்க கூடாதுனு அம்மா சொல்லியிருக்காங்க .. சாரி ப்பா " என்று மெதுவாக எழுந்து கொண்டே அவரிடம் சென்றேன்.. அவர் எனது கன்னத்தில் அறைய , எனக்கு ஒன்றுமே புரியவில்லை.. அழுகையாக வந்தது.. "போப்பா .. உன்னோட டூ ...இரு அம்மாகிட்ட சொல்லித்தரேன் .." என்று அழுதுகொண்டே உள்ளே செல்ல முயன்றேன்..
அப்போ ஒரு ஆண்ட்டி என்னை தூக்கி வைத்து ," அழுக கூடாது ...குட் கேர்ள் அழக்கூடாது " என்று எனக்கு சமாதானம் செய்தார்.. அவரது முகத்தை பார்க்க , ரொம்ப அழகா இருந்தாங்க..ஆனால் எனக்கு பிடிக்கவே இல்லை.."என்ன விடுங்க .. உங்கள எனக்கு பிடிக்கவே இல்லை " என்று கூற மீண்டும் ஒரு அடி விழுந்தது .. நான் அப்பாவை பார்க்க அவர் சோபா மீது இன்னொரு குழந்தையுடன் பேசிக்கொண்டு இருந்தார்..
என்னை அடித்தது வேறு யாருமில்லை அந்த ஆண்ட்டி தான்.. நான் பயந்து போய் அவர்களை பார்க்க ,அவர் இனிமேல் நான் தான் உன்னோட அம்மா .." என்று கூறினார்.. எனக்கு செமயா கோவம் வந்துடுச்சு .. "நீ ஒன்னும் என்னோட அம்மா கிடையாது .. எங்க அம்மா இப்போ வந்துடுவாங்க " என்று வாசலை பார்க்க , அந்த புது ஆண்ட்டி , என்னோட முடியை பிடித்து இழுத்து தள்ளிவிட்டாங்க.. 
நான் அழுதுகொண்டே இருக்க ,அப்பா என்கிட்ட வந்தாரு ..வந்து என்னோட கையை பிடிச்சுக்கிட்டு ," அழக்கூடாது .. இனிமேல் இவங்க இங்கதான் இருப்பாங்க.. உன்னோட அம்மா உன்னைவிட்டு போய்ட்டாங்க .. புரியுதா ..இவங்க தான் உன்னோட அம்மா இனிமேல் .. அப்புறம் இவன்தான் உனக்கு அண்ணன் இனிமேல் ..புரியுதா .. " என்று புதிதாக வந்த இருவரை பார்த்து கேட்க , எனக்கு ஒன்னுமே புரியாமல் ," அம்மா வேணும் , அம்மா வேணும் .. அம்மாகிட்ட கூட்டிட்டு போங்க .." என்று அழுக தொடங்கினேன் ..
எனது கதறலை கேட்டு கோபமடைந்த அப்பா , அவரது பெல்ட்டால் என்னை விளாசி தள்ளினார்.. அவங்க இனிமேல் அம்மா னு கூப்டு , அவனை அண்ணன்னு சொல்லு , புரியுதா .. இல்லேன்னா உன்னோட அம்மாவை நீ உயிரோட பார்க்க முடியாது.. என்று கத்திவிட்டு உள்ளே சென்றார்..
அந்த புது அம்மா என் அருகில் வந்து ," என்ன அம்மா ன்னு கூப்பிடாத .. மேடம் என்று மரியாதையா கூப்பிடு.. அப்புறம் ரோகன் ( அவங்க பையன் ) சார் னு கூப்டு , புரியுதா.. இனிமேல் நான் சொல்றத கேட்டு நடந்த , உனக்கு அடி விழுகாது .. திட்டு விழுகாது.. உங்க அம்மாவும் உயிரோட இருப்பாங்க.." என்று எனது தலையை தடவ , எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.. எப்படி தெரியும் 8 வயதான என்னிடம் இதை எல்லாம் கூறினால் எனக்கு என்ன புரியும்..எதோ புரிந்தும் புரியாமலும் இருந்ததது..அம்மாவிற்கு ஆபத்து என்று மட்டுமே புரிந்தது.. நானும் அமைதியாக தலை ஆட்டினேன்..
புது அம்மா ..எனக்கு பிடிக்கவே இல்லை அவங்கள அம்மான்னு கூப்பிடறது.. அதுக்கு மேடம் தேவலை என்று தோணியது.." மேடம் .. பசிக்குது " என்று அவர்களை கேட்க , என்னை பார்த்து ஒரு மாறி சிரித்துவிட்டு , போன் செய்து ஒருவனை வர சொன்னார்..
"நாதன் ..மெனு படி சமைங்க , உதவிக்கு இவளை வச்சுக்கோங்க .. அப்புறம் இங்க முதல்ல சாப்பாடு டேஸ்ட் பண்றது நான் , கடைசியா சாப்பிடறது இவள் .. புரியுதா " என்று சிரித்துக்கொண்டே புதிதாக வந்தவரிடம் ஆங்கிலத்தில் கூறிக்கொண்டு இருந்தார்..எனக்கு எதுவும் புரியவில்லை ..
"சரிங்க மேடம் " என்று என்னை அழைத்துக்கொண்டு சமையலறைக்கு சென்றார் நாதன்..
அவர் செய்து முடித்ததும் , நான் சாப்பிட கை வைத்தேன் ..பசி உயிர் போனது எனக்கு .. மேலும் அழுது அழுது என்னால் முடியவில்லை.. அம்மா இருந்த இந்நேரம் எனக்கு சாப்பாடு குடுத்துஇருப்பார்கள் என்று நினைத்து கண்ணீர் வந்தது.. நான் சாப்பாடை எடுத்து வாயில் வைக்க போனேன்.. தீடிரென்று யாரோ என்னை தட்டோடு சேர்த்து அமுத்தினார்கள்.. சாப்பாடு மூக்கின் வழியே சென்று புரை ஏறியது.. கைகளை வைத்து அவர்களை தடுக்க முயற்சித்தேன்..
அவர்கள் விட்டதும் , தண்ணீரை தேடி போனேன் , எனக்கு தண்ணீர் தர மறுத்து , நான் புரை ஏறி இருமி , சாப்பிட்ட ..மன்னிக்கவும் அவர்கள் அழுத்தியதால் உள்ளே சென்ற சில சோற்றுப்பருக்கைகள் வாந்தியாக வெளியே வரும் வரை எனக்கு காத்துகொண்டு இருந்தனர்..பிறகு எனக்கு தண்ணீர் தரப்பட்டது.. நான் அதை வாங்கி வேகமா குடித்து முகம் கழுவினேன்..எனது தொண்டை , மூக்கு , வாய் எல்லாமே எரிந்து கொண்டு இருந்தது.. நான் மேடம் த்தை பார்க்க , அவர்கள் எனது கையை நீட்ட சொன்னார்கள் ..,நான் நீட்டினேன் .நாதனை வைத்து என்னை பிடித்துக்கொள்ள சொன்னார்கள்.. எனக்கு பயம் வந்துவிட்டது .. நான் திமிறி வெளியே செல்ல முயற்சித்தேன்.. ஆனால் நாதன் பிடி இறுக்கமாக இருந்ததது.. நீட்டிய கையில் பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பி மூலம் சூடு வைத்தார்கள்.. நான் கண்களை மூடிக்கொண்டு அம்மாஆஆஆஆ என்று கத்தினேன்.. "கத்தினால் வாயில் வைப்பேன்"என்று கூற நான் எனக்கு கதறலை அடக்கிக்கொண்டு அவர்களை பார்க்க , அவர்கள் இன்னொரு கையிலும் சூடு வைத்தார்கள்..என்னையும் அறியாமல் நான் கத்த .. அவர்கள் கை எனது வாய் பக்கம் வந்தது..
நான் கண்ணை இறுக மூடிக்கொண்டு உதடுகளை உள்ளிழுத்து நின்று கொண்டு இருந்தேன்..
நாதன் பிடி இளகியது.. நான் கண்ணை திறக்க , மேடம் நின்றுகொண்டு இருந்தார்கள்..
"இனிமேல் நான் சொல்லாம நீ சாப்பாடு எடுக்க கூடாது புரிஞ்சுதா "
"சரி மேடம் "
"மரியாதையா கூப்பிடு, அப்புறம் நீ அழுதுகொண்டே இருக்க கூடாது.. இனிமேல் நாதனுக்கு நீதான் ஹெல்ப் பண்ணனும்.. எதாவது தப்பு நடந்துச்சு , அப்புறம் நான் பேசமாட்டேன்....சூட்டுக்கோல் தான் பேசும் " என்று கண்ணை உருட்டி என்னை மிரட்டி கொண்டு போனார்கள்..
"சரிங்க மேடம் " என்று நான் சமையல் அறையில் ஒரு ஓரமாக உட்கார்ந்து நடந்ததை நினைத்து பார்த்தேன்..
வெளியே டைனிங் டேபிள் மீது , மேடம் ,சார் ,அப்பா எல்லாரும் சந்தோசமாக சிரித்துக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்..
இனி இதுதான் என்னுடைய வாழ்க்கையா , என்ன செய்றது அம்மாவும் இல்லை , அப்பாவும் இல்லை. கடவுள் தான் காப்பாத்தணும் என்று வேண்டிக்கொண்டாள்..
கடவுள் காப்பாற்றுவாரா ? 


முதல் பாகம் ...படித்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிரவும் ..
******************************************************************************************
"ஆஆஆ ..அ..ம் ..மா ..ஸ்ஸ்ஸ்ஸ் .... ஆஆஆ" என்று விழியிலிருந்து வழிந்த நீரை துடைக்க முடியாமல் தனது கைகளில் பட்ட காயத்திற்கு மருந்தும் போடமுடியாமல் அழுதுகொண்டு இருந்தாள் ஜோதி..
ஆம் இவள்தான் நம் கதையின் நாயகி.. தங்களது வாழ்வில் ஜோதியாக வந்தவள் என்று அவளது பெற்றோர் ஜோதி என பெயரிட்டனர்.. அவள் வாழ்வில் வெளிச்சத்தை பார்க்கமாட்டாள் அவளது வாழ்வு முழுக்க துன்பமே வந்து சேரும் என்று யாராவது அவளது அன்னையிடம் கூறியிருந்தால் , அவ்வளோதான் ..கூறியவர்கள் கயிற்றில் தொங்கிக்கொண்டு இருக்க அவளது அன்னை (மணிமேகலை ) அவர்களை துவைத்து காயபோட்டுஇருப்பாள்.. அவளது தந்தை (சிவரஞ்சன் ) அவர்களது தொழிலை கவனிக்க , குடும்பம் மீது பாசம் பற்று இல்லாமல் போனது.. மேகலையும் அவர் நமக்காக உழைக்கிறார் என்று குடும்ப பொறுப்பை கட்சிதமாக செய்து வந்தாள்..       
தனது காயத்தை ஆற்ற யாருமே இல்லையே என்று அவளது மனம் நினைவுகளில் இருந்து சிலவற்றை தட்டி பார்த்தது..
ஜோதி POV :
நேற்று நானும் அம்மாவும் ஜாலியா பீச்க்கு போனோம்..நான் ரொம்ப ஜாலியா மணல்கோட்டை கட்டி விளையாடிக்கொண்டு இருந்தேன். அம்மா எனக்கு ஐஸ் கிரீம் , மக்காசோளம் எல்லாமே வாங்கி தந்தாங்க ..என்ன குடை ராட்டினத்தில உட்கார வச்சு விளையாட வச்சாங்க ..அங்க இருந்த இன்னும் கொஞ்ச குழந்தை களோட நானும் அம்மாவும் எவ்ளோ ஜாலியா கண்ணாமூச்சி , தொட்டு பிடி விளையாடிட்டு இருந்தோம் .. எனக்கு கண்ணை கட்டுனாங்க , நான்  பயக்க அம்மாவே எனக்கு பதிலா அவுட் ஆகி விளையாட ஆரம்பிச்சுட்டாங்க ..ஹ்யஆ .. செமயா இருக்கு .. இந்தமாறி இரவு 10 மணிக்கு விளையாடிட்டு இருக்குறது.. அங்கே பக்கத்துல சில அண்ணா ,அக்கா எல்லாம் விளையாடிட்டு இருந்தாங்க .. அதைப்பார்த்து தான் நாங்களே விளையாட ஆரம்பிச்சோம்.. அம்மா மணி ஆகிடுச்சுனு என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து குளிக்க வச்சு சாப்பாடு குடுத்து படுக்க வச்சுட்டாங்க.. போட்ட ஆட்டத்துக்கெல்லாம் நானும் தூங்கிட்டேன்..      
அச்சச்சோ .. அம்மா கிட்ட போய் நேத்து அவங்ககிட்ட நான் குடுத்த பந்தை வாங்கணும் .. நானும் நிக்கியும் (பக்கத்து வீட்டு பையன் ) சேர்ந்து விளையாடணும் .. படுத்துட்டே நேத்து நடந்தை நினைத்துக்கொண்டு முழித்து பார்த்தேன்.. அம்மா பக்கத்துல இல்லை.. எப்பவும் நடக்குறதுதான் .. அம்மா எனக்கு முன்னாடியே எழுந்து குளிச்சுட்டு சாமி கும்பிட்டு காலை சமையல் செய்வாங்க .. செய்ததை எடுத்து கொஞ்சம் தட்டில் வைத்து சாமிக்கும் காகத்திற்கு படைத்துவிட்டு , அப்பாக்கு உதவி செய்வாங்க.. அப்பா இருப்பாரான்னு எனக்கு தெரியாது.. நான் தூங்கினதுக்கு அப்பறம் தான் வருவாரு .. நான் கண்ணை முழிச்சு பாக்குறதுக்குள்ள அவர் ஆபீஸ் போய்டுவாரு.. அவரை நான் பாத்து பேசி ஒரு மாசம் இருக்கும் .. எனக்கு அம்மா னா உயிர் .. அவங்கதான் எனக்கு கதை சொல்லுவாங்க , சாப்பாடு ஊட்டிவிடுவாங்க , ஸ்கூலுக்கு கூட்டிட்டு போவாங்க , என்ன திட்டவே மாட்டாங்க.. என்னோட பிரண்ட் நிக்கி அவனுக்கும் அவங்க அம்மாவைத்தான் பிடிக்கும் .. சுபிக்கு( இன்னொரு பிரண்ட் ) அப்பாவைதான் பிடிக்கும்.. நான் கேட்ட பொண்ணுங்க எல்லாத்துக்கும் அவங்க அப்பா தான் பிடிக்கும்... அதேமாறி அப்பாக்களுக்கு பொண்ணுங்க தான் பிடிக்கும் சொல்லுவா.. எனக்கு அதை எல்லாம் கேட்ட அழுகையா வரும் .. ஏன் என்னோட அப்பா இப்படி இருக்காரு , என்கிட்ட பேசுறதுகூட இல்ல , இதெல்லாம் அம்மாகிட்ட சொன்ன ,'யாரு சொன்ன அப்பா உன்மேல பாசமா இல்லைனு ..இங்க பாத்தியா உனக்கு பிடிச்ச ரெட் கலர் கரடி பொம்மை வாங்கிட்டு வந்தாரு.. உங்கிட்ட அவரே கொடுக்கணும்னு நினைச்சு வெயிட் பண்ணிட்டு இருந்தார்.. ஆபீஸ்ல மீட்டிங்ன்னு இப்போதான் கிளம்பினார் என்று அம்மா என்கிட்ட குடுத்தாங்க..
எனக்கு வருத்தம் தான் . ஆனா அந்த கரடி பொம்மையை பார்த்ததும் ,செமயாஇருந்துச்சு.. என்னோட உயரம் இருந்திச்சு .. நான் அதுமேல குதிச்சு வெளையாடிட்டு இருந்தேன்.. தூக்கிட்டு போய் என்னோட பெட் மேல வச்சுட்டேன்...இந்தமாறி அம்மா எனக்கு நிறைய அப்பா குடுத்ததுன்னு சொல்லி குடுப்பாங்க .., சாக்கி .., ஜாமுன் , ஐஸ் கிரீம் , பொம்மை ,.. அடுக்கிட்டே போகலாம்..
நான் பக்கத்துல இருந்த பாலுவை ( கரடி பொம்மையின் பெயர் ) முத்தம் குடுத்துட்டு , அம்மாவை பார்க்க எழுந்தேன்..
"அம்ம்மாஆ .... அம்மாஆஆஅ ..." கத்திகிட்டே வீடு முழுக்க தேடிட்டேன்.. யாரையும் காணோம் ..
அம்மா சொல்லாம எங்கேயும் போக மாட்டாங்களே .. ஒருவேளை வெளையாடுறாங்களோ ..
"அம்மாஆ ..என்னால உன்னை கண்டுபிடிக்க முடியல .. நான் அவுட் ஆகிட்டேன் ..எங்கமா போன ..அம்மாஆஆஆ .. பசிக்குதும்மா ..." என்று வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அறையாக கத்திகொண்டே பார்த்தேன்..
எங்கேயும் இல்லியே .. எங்க என என்னிடம் உள்ள சிறு மூளையை உபயோகப்படுத்தி , ஒரு வேலை கடைக்கு போயிருப்பாங்களோ என வீட்டின் கதவு அருகே வந்தேன்.. வெளியே அடைத்து இருந்தது..
அடச்சா .. அம்மா வெளில தான் போயிருக்காங்க .. நான் பாரு பயந்து எவ்ளோ கத்திட்டேன்.. அம்மா எப்பவுமே அறிவாளிதான்.. வீட்டுக்குள்ள திருடன் வர்றக்கூடாதுனு தாள் போட்டுட்டு போய்ட்டாங்க ..இப்போ எனக்கு பசிக்குதே..என்ன பண்றது.. என்று சமையல் அறைக்குள் நுழைந்தேன்.. அங்கே ஏதும் செய்யவில்லை.. எதுவும் இல்லைனு வாங்க போயிருக்கங்களோ ..அப்படியாதான் இருக்கும்.. அவங்க வரதுக்குள்ள நான் போய் பல் துலக்கிவிட்டு ,குளிச்சுட்டு அம்மா கு பிடிச்ச டிரஸ் போட்டுட்டு அவங்களுக்கு ஷாக் குடுப்போம் என்று நினைத்துக்கொண்டு உள்ளே சென்று தயாராகி வந்தேன்..
அப்போதும் கதவு அப்படியே இருந்தது.. நான் காத்துஇருக்க தொடங்கினேன்.. கதவு திறக்கும் ஓசை கேட்டு கதவிற்கு பின்னால் ஒளிந்து கொண்டேன்.. அம்மாவை பயமுறுத்தலாம் என்று ..
கதவு திறந்தது.. நான் .."பே..................." என்று கத்திகொண்டே இரண்டு கைகளையும் வைத்து பயம் காட்ட , அங்கே நின்று கொண்டுஇருந்தது என்னுடைய அப்பா.. எவ்ளோ நாள் ஆச்சு நான் அவரை பார்த்து.. ஓடி சென்று அவரது கால்களை கட்டிக்கொண்டு ," அப்பாஆஆ .. எவ்ளோ நாள் ஆச்சுப்பா உங்கள பாத்து .. நீங்க குடுத்த பாலு சூப்பர் ஆஹ் இருக்கு பா.. " என்று நான் பேசிக்கொண்டே போக , தீடிரென்று நான் அந்தரத்தில் பறந்து கீழே விழுவது போல இருந்தது..கையில் அடிபட்டது .. அழுதுகொண்டே அப்பாவை பார்க்க , அவர் கோபத்தில் இருப்பதாய் நினைத்துக்கொண்டு ,
" அப்பா சாரி ப்பா... கோவப்படாதீங்க ப்பா ..நீங்க உள்ள வரதுக்கு முன்னாடியே நான் பேசிடுஇருக்க கூடாதுனு அம்மா சொல்லியிருக்காங்க .. சாரி ப்பா " என்று மெதுவாக எழுந்து கொண்டே அவரிடம் சென்றேன்.. அவர் எனது கன்னத்தில் அறைய , எனக்கு ஒன்றுமே புரியவில்லை.. அழுகையாக வந்தது.. "போப்பா .. உன்னோட டூ ...இரு அம்மாகிட்ட சொல்லித்தரேன் .." என்று அழுதுகொண்டே உள்ளே செல்ல முயன்றேன்..
அப்போ ஒரு ஆண்ட்டி என்னை தூக்கி வைத்து ," அழுக கூடாது ...குட் கேர்ள் அழக்கூடாது " என்று எனக்கு சமாதானம் செய்தார்.. அவரது முகத்தை பார்க்க , ரொம்ப அழகா இருந்தாங்க..ஆனால் எனக்கு பிடிக்கவே இல்லை.."என்ன விடுங்க .. உங்கள எனக்கு பிடிக்கவே இல்லை " என்று கூற மீண்டும் ஒரு அடி விழுந்தது .. நான் அப்பாவை பார்க்க அவர் சோபா மீது இன்னொரு குழந்தையுடன் பேசிக்கொண்டு இருந்தார்..
என்னை அடித்தது வேறு யாருமில்லை அந்த ஆண்ட்டி தான்.. நான் பயந்து போய் அவர்களை பார்க்க ,அவர் இனிமேல் நான் தான் உன்னோட அம்மா .." என்று கூறினார்.. எனக்கு செமயா கோவம் வந்துடுச்சு .. "நீ ஒன்னும் என்னோட அம்மா கிடையாது .. எங்க அம்மா இப்போ வந்துடுவாங்க " என்று வாசலை பார்க்க , அந்த புது ஆண்ட்டி , என்னோட முடியை பிடித்து இழுத்து தள்ளிவிட்டாங்க.. 
நான் அழுதுகொண்டே இருக்க ,அப்பா என்கிட்ட வந்தாரு ..வந்து என்னோட கையை பிடிச்சுக்கிட்டு ," அழக்கூடாது .. இனிமேல் இவங்க இங்கதான் இருப்பாங்க.. உன்னோட அம்மா உன்னைவிட்டு போய்ட்டாங்க .. புரியுதா ..இவங்க தான் உன்னோட அம்மா இனிமேல் .. அப்புறம் இவன்தான் உனக்கு அண்ணன் இனிமேல் ..புரியுதா .. " என்று புதிதாக வந்த இருவரை பார்த்து கேட்க , எனக்கு ஒன்னுமே புரியாமல் ," அம்மா வேணும் , அம்மா வேணும் .. அம்மாகிட்ட கூட்டிட்டு போங்க .." என்று அழுக தொடங்கினேன் ..
எனது கதறலை கேட்டு கோபமடைந்த அப்பா , அவரது பெல்ட்டால் என்னை விளாசி தள்ளினார்.. அவங்க இனிமேல் அம்மா னு கூப்டு , அவனை அண்ணன்னு சொல்லு , புரியுதா .. இல்லேன்னா உன்னோட அம்மாவை நீ உயிரோட பார்க்க முடியாது.. என்று கத்திவிட்டு உள்ளே சென்றார்..
அந்த புது அம்மா என் அருகில் வந்து ," என்ன அம்மா ன்னு கூப்பிடாத .. மேடம் என்று மரியாதையா கூப்பிடு.. அப்புறம் ரோகன் ( அவங்க பையன் ) சார் னு கூப்டு , புரியுதா.. இனிமேல் நான் சொல்றத கேட்டு நடந்த , உனக்கு அடி விழுகாது .. திட்டு விழுகாது.. உங்க அம்மாவும் உயிரோட இருப்பாங்க.." என்று எனது தலையை தடவ , எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.. எப்படி தெரியும் 8 வயதான என்னிடம் இதை எல்லாம் கூறினால் எனக்கு என்ன புரியும்..எதோ புரிந்தும் புரியாமலும் இருந்ததது..அம்மாவிற்கு ஆபத்து என்று மட்டுமே புரிந்தது.. நானும் அமைதியாக தலை ஆட்டினேன்..
புது அம்மா ..எனக்கு பிடிக்கவே இல்லை அவங்கள அம்மான்னு கூப்பிடறது.. அதுக்கு மேடம் தேவலை என்று தோணியது.." மேடம் .. பசிக்குது " என்று அவர்களை கேட்க , என்னை பார்த்து ஒரு மாறி சிரித்துவிட்டு , போன் செய்து ஒருவனை வர சொன்னார்..
"நாதன் ..மெனு படி சமைங்க , உதவிக்கு இவளை வச்சுக்கோங்க .. அப்புறம் இங்க முதல்ல சாப்பாடு டேஸ்ட் பண்றது நான் , கடைசியா சாப்பிடறது இவள் .. புரியுதா " என்று சிரித்துக்கொண்டே புதிதாக வந்தவரிடம் ஆங்கிலத்தில் கூறிக்கொண்டு இருந்தார்..எனக்கு எதுவும் புரியவில்லை ..
"சரிங்க மேடம் " என்று என்னை அழைத்துக்கொண்டு சமையலறைக்கு சென்றார் நாதன்..
அவர் செய்து முடித்ததும் , நான் சாப்பிட கை வைத்தேன் ..பசி உயிர் போனது எனக்கு .. மேலும் அழுது அழுது என்னால் முடியவில்லை.. அம்மா இருந்த இந்நேரம் எனக்கு சாப்பாடு குடுத்துஇருப்பார்கள் என்று நினைத்து கண்ணீர் வந்தது.. நான் சாப்பாடை எடுத்து வாயில் வைக்க போனேன்.. தீடிரென்று யாரோ என்னை தட்டோடு சேர்த்து அமுத்தினார்கள்.. சாப்பாடு மூக்கின் வழியே சென்று புரை ஏறியது.. கைகளை வைத்து அவர்களை தடுக்க முயற்சித்தேன்..
அவர்கள் விட்டதும் , தண்ணீரை தேடி போனேன் , எனக்கு தண்ணீர் தர மறுத்து , நான் புரை ஏறி இருமி , சாப்பிட்ட ..மன்னிக்கவும் அவர்கள் அழுத்தியதால் உள்ளே சென்ற சில சோற்றுப்பருக்கைகள் வாந்தியாக வெளியே வரும் வரை எனக்கு காத்துகொண்டு இருந்தனர்..பிறகு எனக்கு தண்ணீர் தரப்பட்டது.. நான் அதை வாங்கி வேகமா குடித்து முகம் கழுவினேன்..எனது தொண்டை , மூக்கு , வாய் எல்லாமே எரிந்து கொண்டு இருந்தது.. நான் மேடம் த்தை பார்க்க , அவர்கள் எனது கையை நீட்ட சொன்னார்கள் ..,நான் நீட்டினேன் .நாதனை வைத்து என்னை பிடித்துக்கொள்ள சொன்னார்கள்.. எனக்கு பயம் வந்துவிட்டது .. நான் திமிறி வெளியே செல்ல முயற்சித்தேன்.. ஆனால் நாதன் பிடி இறுக்கமாக இருந்ததது.. நீட்டிய கையில் பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பி மூலம் சூடு வைத்தார்கள்.. நான் கண்களை மூடிக்கொண்டு அம்மாஆஆஆஆ என்று கத்தினேன்.. "கத்தினால் வாயில் வைப்பேன்"என்று கூற நான் எனக்கு கதறலை அடக்கிக்கொண்டு அவர்களை பார்க்க , அவர்கள் இன்னொரு கையிலும் சூடு வைத்தார்கள்..என்னையும் அறியாமல் நான் கத்த .. அவர்கள் கை எனது வாய் பக்கம் வந்தது..
நான் கண்ணை இறுக மூடிக்கொண்டு உதடுகளை உள்ளிழுத்து நின்று கொண்டு இருந்தேன்..
நாதன் பிடி இளகியது.. நான் கண்ணை திறக்க , மேடம் நின்றுகொண்டு இருந்தார்கள்..
"இனிமேல் நான் சொல்லாம நீ சாப்பாடு எடுக்க கூடாது புரிஞ்சுதா "
"சரி மேடம் "
"மரியாதையா கூப்பிடு, அப்புறம் நீ அழுதுகொண்டே இருக்க கூடாது.. இனிமேல் நாதனுக்கு நீதான் ஹெல்ப் பண்ணனும்.. எதாவது தப்பு நடந்துச்சு , அப்புறம் நான் பேசமாட்டேன்....சூட்டுக்கோல் தான் பேசும் " என்று கண்ணை உருட்டி என்னை மிரட்டி கொண்டு போனார்கள்..
"சரிங்க மேடம் " என்று நான் சமையல் அறையில் ஒரு ஓரமாக உட்கார்ந்து நடந்ததை நினைத்து பார்த்தேன்..
வெளியே டைனிங் டேபிள் மீது , மேடம் ,சார் ,அப்பா எல்லாரும் சந்தோசமாக சிரித்துக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்..
இனி இதுதான் என்னுடைய வாழ்க்கையா , என்ன செய்றது அம்மாவும் இல்லை , அப்பாவும் இல்லை. கடவுள் தான் காப்பாத்தணும் என்று வேண்டிக்கொண்டாள்..
கடவுள் காப்பாற்றுவாரா ? 



நினைவெல்லாம் நீயே - பகுதி 1 நினைவெல்லாம் நீயே - பகுதி 1 Reviewed by SaraThas on December 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.