மதியை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்துவிட்டு , ஆதி குறுக்காக நடந்துகொண்டுஇருந்தான்..
டாக்டர் அவளை செக் செய்துவிட்டு ஆதியை அவரது அறைக்கு வர செய்தார்.. அவன் பதற்றத்துடன் உள்ளே செல்ல , அவனை அமர சொல்லிவிட்டு தனது கணினி மூலம் , எதையோ பார்த்துக்கொண்டு இருந்தார்..
"டாக்டர் .. அவளுக்கு என்ன ஆச்சு "
"விஷயம் கொஞ்சம் சீரியஸ் தான்..நீங்க பதட்ட படமா கேக்கணும் .. உங்க மனைவிக்கு பிரைன் டியூமர் வந்துஇருக்கு .. இதுல என்ன விஷயம்ன , அவர்களுக்கு கட்டி மூளைல உள்ள நரம்புல இருக்கு ."
பிரைன் டியூமர் என்று கேட்டதும் நம்பிக்கை இழந்து கண்கலங்க அவர் மீண்டும் கூற தொடங்கினார்..
"இத குணப்படுத்தலாம் .. ஆனால் நிறைய செலவாகும் .. இங்கே அந்த ஆபரேஷன் பண்ண முடியாது.. லண்டன்ல தான் பண்ணனும். இதுல முக்கியமான விஷயம் என்னனா , இந்த ஆபரேஷன் பண்ணுனாலும் அவங்க நினைவுக்கு திரும்புறது கஷ்டம்.."
"ஆபரேஷன் பன்னுலென , ?"
"ஆபரேஷன் பன்னுலென , அவங்க இன்னும் கொஞ்ச நாள் உயிரோட இருப்பாங்க.. அவங்களுக்கு இந்த கட்டி கொஞ்சம் பெருசா இருக்கு , அடிக்கடி தலைவலி , வாந்தி ,மயக்கம் னு இருப்பாங்க .
அதிகபட்சம் 1 வருஷம் இருக்கலாம்.. அவங்கனால அந்த வலியை தாங்க முடியாது.."
"ஆபரேஷன் கு எவ்ளோ செலவாகும் "
"நீங்க லண்டன் ல போய் அங்க தங்குற செலவு , மெடிக்கல் செலவு எல்லாம் சேர்த்து 75 லட்சம் வரும்.."
"அவ்ளோவா.. "
"ஆமா .. இதுல இன்னொரு விஷயம் இருக்கு .. உங்க மனைவி ரெண்டு மாச கருவை சுமந்துட்டு இருகாங்க.. சோ எவ்ளோ சீக்கிரம் பணத்தை ஏற்பாடு பண்ணி ஆபரேஷன் அவ்ளோ சீக்கிரம் குழந்தையும் அம்மாவையும் காப்பாத்த முடியும்" என்று சந்தோச நிகழ்வை கடைசியாக கூற , ஆதியின் நிலைமை மோசமாகியது.. குழந்தை வரவை எண்ணி சந்தோசப்படுவதா அவளுக்கு பணத்தை புரட்டி ஆபரேஷன் செய்வதா என்று கதிகலங்கி நின்றான்.
*********************************************************************************
வளர்மதியை ஏசி வேலைவாங்கிவிட்டு , தனது அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்..
அவனது போட்டோவை எடுத்துக்கொண்டு , "சாரி டா ..இன்னிக்கு அவங்கள நான் ரொம்ப காயப்படுத்திட்டேன்.. நான் இப்படி இல்லேனு உனக்கு தெரியும்ல .. இருந்தாலும் அவங்க கஷ்டப்படுறத என்னால பாக்க முடியல ..அப்பா சொன்னமாறி பண்ணிட்டேன்.. ஆனால் அவங்கள நான் பேசுறப்போ எனக்கு கஷ்டமா இருக்குடா.. அதேசமயம் உன்ன என்கிட்ட இருந்து பிரிச்சாங்க, அதுக்கு தண்டனை தரணும்னு தோணுது.. எனக்கு என்ன பன்னுறதுனே தெர்ல டா ..
நீ எதுக்குடா என்ன இங்க தனியா விட்டுட்டு போன , நான் மட்டும் தனியா இந்த உலகத்துல இருந்து கஷ்டப்படுறேன்.. நானும் உன்னோடவே வந்துஇருப்பேன் .. ஆனால் உன்ன என்கிட்ட இருந்து பிரிச்சாங்களே அவங்கள பழிவாங்கணும் .. சீக்கிரமே இது நடக்கும் " என்று புலம்பிக்கொண்டு இருந்தாள்.
அருண் வீட்டிற்கு வர, வளர்மதியை சந்தித்துவிட்டு , மதுவை தேட அவளோ தூங்கிக்கொண்டு இருந்தாள்.. அவள போட்டோவை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டு இருந்தாள்.
அருண் உள்ளேவந்ததும் அவளை பார்த்துக்கொண்டே இருந்தான். அருண் மைண்ட்வாய்ஸ் : குழந்தைமாறி எவ்ளோ அழகா தூங்குறா.. ஹ்ம்ம் .. இன்னைக்கும்எனக்கு தூக்கம் போச்சு போல . எதுக்குடி என்ன இவ்ளோ லவ் பண்ற? உன்னோட இந்தக்கண்ணுல எப்பவும் எனக்குன்னு இருக்க காதலை பார்குறப்போ எனக்கு வானத்துல பறக்குறமாறி இருக்கு .. நீ சிரிக்குறப்போ , நான் என்னையவே மறந்து உன்ன பார்த்துட்டு நிற்க்குறேன்.. நீ எப்பவும் சிரிச்சிட்டே இருக்கனும் .
அருண் அவகிட்ட பேசிக்கிட்டே , அவள் பக்கத்துல போய், அவள் கன்னத்துல இருக்க முடியை அவளது காதோரம் ஒதுக்கிவிட்டு , அவளது கன்னத்தில் முத்தமிட்டான். குழந்தைபோல சிணுங்கி , அவனது (முத்தத்தை ) எச்சிலை துடைத்துவிட்டு தூங்கினாள். அவளது சிணுங்களில் தன்னை துளைத்தவன் , மீண்டும் அவளது கன்னத்தில் முத்தமிட , அது நீண்டு அவளது நெற்றி , கண்கள் என அவனது எல்லையும் நீண்டுகொண்டே சென்றது.
அவள் சிணுங்கிக்கொண்டே முழிக்க, அவனது முகம் மிக அருகில் இருக்க , வியந்து அவனை பார்த்தாள்.அருண் , அவளது மூக்கோடு உரசிக்கொண்டே,"என்னடி இப்படி பார்க்குற ?""ஓ ..ஒன்னுமில்லை..நீங்க எப்படி இங்க ?" என்று நழுவ முயற்சித்தாள். அவளது இடையை பிடித்து இறுக்கி , தன்மேல் விழச்செய்தான். பூக்குவியல் போல விழுந்த மதுவை அணைத்து ,"பொண்டாட்டி .. லவ் யு டி .." என்று அவள் இதழ் அருகில் செல்ல, அவளும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ,போட்டோவை மறைத்துவிட்டு , அவனது நெற்றியில் வேகமாக முட்டி,"புருஷா..இப்படி நாம ரொமான்ஸ் பண்ணுறதை அத்தை பார்த்தாங்கன்னா அவ்ளோதான் .. நல்லபிள்ளையாய், உன்னோட ரூம்கு போடா .." என்று எழுந்தாள் ..அவன் மீண்டும் அவளை இறுக்கி , "பொண்டாட்டி .. என்னடி நீயே இப்படி சொல்லுற ?" என்று அவளுள் புதைய , அருணை தள்ளிவிட்டு சிரித்துக்கொண்டே ஓட ,அவன் பின்னால் துரத்திக்கொண்டே வந்தான்.
திடீரென்று , மது வளர்மதிமேல் மோதி நிற்க, பின் வந்த அருண் அவனது அம்மாவை பார்த்து சிரித்துக்கொண்டே நகர , வளர்மதி ," மது கொஞ்சமாவது அடக்கஒடுக்கமா இரு . இது என்ன சின்ன பிள்ளைங்கமாறி விளையாடிட்டு இருக்கீங்க. இப்போ உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு .அதை மனசுல வச்சுக்கிட்டு நடந்த நல்லாயிருக்கும் " என்று திட்டிவிட்டு உள்ளே சென்றார் .
அருணிற்கோ இதைக்கேட்டதும் ஷாக் ஆகிவிட்டது.. மது அழுதுகொண்டே உள்ளே செல்ல , அருண் அவனது அம்மாவை தேடி , அவர்களது அறைக்கு சென்று கதவை தட்ட , அவர்கள் உள்ளே இருந்தே , "நான் பண்ணுனது தப்புயில்லை,போய் உன்னோட பொண்டாட்டிக்கு புரியவை .. ஐயர் நேரம் குறிச்சுதரவரைக்கும் அவகிட்ட இருந்து விலகியே இரு ..புரியுதா ? இது என்மேல சத்தியம் .. எனக்கு என்னோட புள்ளை உசிறுதான் முக்கியம் " என்று அழுக தொடங்கினார்..மதுவோ , போனில் அனைத்தும் கேட்டுவிட்டு , "குட் மாமியாரே ..இப்படியே மைண்டைன் பண்ணுங்க" என்று கூறிவிட்டு தனது அறையில் சோகமாக உட்கார்ந்துஇருந்தாள்..
அருண் உள்ளே வந்து அவளுக்கு அருகில் நின்று அவளது கண்ணீரை துடைக்க , அவளோ அவனை இறுக்க அணைத்து அழத்தொடங்கினாள். "அம்மா ஏன் இப்படி பண்ணுறாங்கனு தெரியலாமா..அம்மாக்காக நான் உங்கிட்ட சாரி கேட்டுக்குறேன்"
"டேய் . ச்சீ.. சாரி ல வேண்டாம் ..அம்மா பண்ணுனதுக்கு நீ என்ன பண்ணுவ.. விடு .. இனிமேல் நான் அத்தைக்கு பிடிச்சமாறி நடந்துக்கறேன் ..நீ பீல் பண்ணாத. ஓகே..""சரி டி .. இந்தமாறி புரிஞ்சுக்கற பொண்டாட்டி கிடைக்க குடுத்துவச்சுஇருக்கணும் ""ஆமா ஆமா " என்று நக்கலாக கூறினாள் மது .
இப்படியே சிலநாட்கள் மாமியார் -மருமகள் சண்டை நடந்து கொண்டுஇருக்க , அருணோ என்னசெய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தான்..
ஒருநாள் , மது அவனது போட்டோவை தவறுதலாக வெளியே வைக்க ,அருண் கூப்பிட்டான் என்று அவசரமாக வெளியே வந்தாள். கதவை அடைத்துவிட்டு வெளியே வந்தாள். ஆனால் அது அவளது ஆடையில் ஒட்டிக்கொண்டு , அவள் செல்லுமிடம் எல்லாம் கூடவே வந்தது. அருணிடம் பேசிவிட்டு திரும்பும் போது போட்டோ நழுவி அருண் ரூமில் உள்ள பெட் அடியில் தலைகீழாக விழுந்தது.
💕💕நீயே என் இதயமடி -13💕💕
Reviewed by SaraThas
on
December 15, 2018
Rating:
No comments: