SaraThas Blog

தலை குனிந்து என்னை பார் ,தலை நிமிர வைக்கிறேன் - புத்தகம்

💕💕நீயே என் இதயமடி -12💕💕



மது போட்டோவை டேபிள் மீது வைக்க திரும்பும்போது அங்கே அருண் நின்று இருந்தான். மது சிரித்துவிட்டு , அவனை ஹக் செய்து போய் தூங்க சொன்னாள்.மனதிற்குள் ,' ஒரு வழிய தப்பிச்சுட்டோம் .. நல்லவேளை இந்த கண்ணாடி இங்க இருந்து அவன் வந்ததை காட்டிக்கொடுத்துவிட்டது. அதனால் நான் கொஞ்சம் பேச்சை மாற்றி ,போட்டோவையும் சரியாக வைத்துவிட்டேன்.' என்று நினைத்துக்கொண்டு தனது மொபலை எடுத்து தனசேகருக்கு கால் செய்து பேச தொடங்கினாள். பேசும்முன் எல்லா கதவையும் நன்றாக அடைத்து விட்டு பேசத்தொடங்கினாள்..
"அப்பா , நாம போட்ட பிளான் படி எல்லாமே நடந்துடுச்சு, அவனுக்கு அத்தை மேல சந்தேகம் வந்துடுச்சு"
"யாருக்கும் நம்மமேல சந்தேகம் வரலையே .."
"அதெல்லாம் இல்லப்பா .. நீங்க கரண்ட் கட் பண்ணுனது , நான் என்னோட புடவையை தீபத்துல வச்சது , அப்புறம் அந்த பால் .. எல்லாமே கரெக்ட் ஆஹ் ஒர்கவுட் ஆகிடுச்சு "..( இப்போ புரிஞ்சுஇருக்குமே இதெல்லாம் யாரு பண்ணுனான்னு ..பட் மது பாவம் .. சோ யாரும் அவளை திட்டாதீங்க )
"அப்படியா ..சூப்பர்மா ..சீக்கிரம் இந்த வேலையெல்லாம் முடிச்சுட்டு வாடா ..."
"இல்லப்பா .. கொஞ்ச நாள் ஆகணும் .. அப்போதான் அவனுக்கு என்மேல நம்பிக்கை வரும் .. அதுக்குள்ளஅத்தை என்ன பாடு பாடுபடப்போறாங்களோ.."
"பாவம் .."
"பாவம் இல்லப்பா .. தண்டனை .. ஒன்னும் தெரியாத உயிர்களை கொன்ற மகனை பெற்ற மகராசி .. அதுனால அவங்களும் கூட சேர்ந்து தண்டனை அனுபவிச்சுதான் ஆகணும் " என்று வெறி வந்தவள் போல் வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து கத்த தனசேகர் அவளை அமைதிப்படுத்தினார்..
"கோவம், பழிவாங்கறதுக்கு முதல் எதிரி .. நாம கோவப்படணும் .. அது எதிரியோட அழிவுக்கு காரணமாக இருக்கனும் .. புரியுதா .. நீ டென்ஷன் ஆகாதமா .."
"சரிப்பா " என்று இணைப்பை துண்டித்து விட்டு அவனது நினைவுகளில் முழ்கி அப்படியே உறங்கினாள்..  
---------------------------------------------------------------------------------------------------------
அருண் , அவளது போட்டோவை தனது கைகளில் வைத்துக்கொண்டு "ஹே குட்டி ... இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருந்தடி .. உன்கிட்ட மனைவியா நீ வந்ததுக்கு அப்புறம் நிறைய சொல்லணும்னு செய்யணும்னு ஆசைப்பட்டேன் .பட் எதுவும் பண்ணமுடியல .. பரவாயில்லை . நீ பொண்டாட்டியா என் பக்கத்துல ஆயுசுவரைக்கும் இருக்கனும் அதுவே எனக்கு போதும் .. இந்த பெட் ல நான் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் .. நீ இங்க வந்து என்னோட ரூம் ல ஸ்டே பண்ணுறவரைக்கும் நான் சோபால தான் படுப்பேன் .. " என்று தன்னுடைய தலையணை ,போர்வையை சோபாவிற்கு மாற்றினான்..
"செல்லம்மா .. எனக்கு தூக்கம் வரமாட்டேங்குது .. உங்கிட்ட வந்த நீயும் என்ன கொஞ்சிட்டு தூங்கபோய்ட்டே ..பாவம் ல நான் ..எதாவது ஐடியா குடுடி தூங்கறதுக்கு .." என்று புலம்பிக்கொண்டே உருண்டு பிறழ , தரையில் விழுந்தான். அப்போதும் அவனது ஆசைக்காதலி , ஆருயிர் மனைவியின் புகைப்படம் கீழேவிழாமல் நெஞ்சில் தாங்கிக்கொண்டு விழுந்தான்..
"இதேமாறி என்னைக்குமே உன்ன நான் கீழவிடமாட்டேண்டி .."என்று முத்தம் குடுத்து போட்டோவை கட்டிபிடித்துக்கொண்டே தரையில் உறங்கினான்..    
வளர்மதி , எதுவும் அறியாமல் தூக்கமாத்திரையின் விளைவால் தூங்கிக்கொண்டு இருந்தாள்..
--------------------------------------------------------------------------------------------------------------
மணி , தனசேகரிடம் ,'அப்பா , சீக்கிரம் மதுவை போட்டு தள்ளுங்கப்பா ..அப்புறம் எல்லா சொத்தும் நமக்கு வந்துடும் .. "
"அடேய் அவசரக்காரனே .. நான் எவ்ளோ அழகா பிளான் போட்டு நடத்திட்டு இருக்கேன் .. நீ அவசரப்படாதே .. ஒட்டுமொத்தமா நாம எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணிடலாம் .." என்று சிரித்துக்கொண்டே கூற ,
"அப்போ ஆல்ரெடி ஏதோ பிளான் போட்டுடீங்க போல " என்று அவனும் சிரித்துக்கொண்டே 'சியர்ஸ் ' சொல்லிக்கொண்டு மது அருந்தினார்கள்..
இவர்களது திட்டம் இப்படி இருக்க , அருண் -மது இருவரும் தூங்கிக்கொண்டு இருந்தனர் ..
---------------------------------------------------------------------------------------------------------------
ஆதி அண்ட் மதி தங்களது படுக்கையறைக்குள் நுழைய , ஆதி அவளை பின்னாலிருந்து அவள் இடையை அணைத்து தனது குறுகுறு மீசையால் அவளது கழுத்து வளைவில் முத்தமிட , மீசையின் குறுகுறுப்பில் நெளிந்தாள் ..
"ஆதி விடு .., நான் போய் குளிச்சுட்டு டிரஸ் மாத்தணும் "
முத்தமிட்டுக்கொண்டே ,"போய் குளி , டிரஸ் மாத்து .. யாரு வேணாம்னு சொன்னது " என்று அவனது தேடலை தொடங்க , அவனுக்கு விடையாகி போனாள் மதி ..
இருவரும் தேடலை முடித்து ,களைப்புற்று கிடக்க , மதி கடிகாரத்தை நோக்கினாள் .. கடிகாரம் அதிகாலை 4 என காட்டியது..
"ஆதி .. இதெல்லாம் தப்புயில்லையா ..கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி பண்ணுறது " என்று கவலையுடன் கேட்க
"தப்புயில்லமா .. ஏன்னா நான் தான் உன்னோட புருஷனாச்சே .. தாலி மட்டும் தான் கட்டுல .. மத்தபடி நீ என் பொண்டாட்டிடி ..புரியுதா மக்கு மதி "என்று அவளை கேலி செய்ய ,
மதியோ எதையும் கவனிக்காமல் ,"என்ன கல்யாணம் பண்ணிப்பியா ? ஏமாத்தமாட்டேலே ?" என்று அப்பாவியாய் கவலையுடன் அவனை பார்த்து கேட்க ,"இப்போ உன்ன கல்யாணம் பண்ணனும் அவ்ளோதானே ..காலைல நாம கோவிலுக்கு போறோம் கல்யாணம் பண்ணுறோம் .. ஓகே ஆஹ் " என்று கேட்க, அவளோ சந்தோச மிகுதியில் அவனது இதழ்களை சிறைபிடித்தாள்..
மதி மிகவும் சந்தோஷமான தருணங்களில் மட்டுமே , அவளாக வந்து இந்தமாறி பரிசினை அருளுவாள்.. மீண்டும் இருவரும் தங்களது கட்டிலில் யுத்தம் செய்ய , விடியலும் அவர்களுக்கு இரவாகி போனது..
காலை 10 மணிக்கு ஆதி எழுந்து , மதியை எழுப்ப , அவளோ சிணுங்கிக்கொண்டு அவனது மடிமீது படுத்தாள்.. அவன் தனது கைகளில் இருந்த மாங்கல்யத்தை எடுத்து , அவளது கழுத்திற்கு நேராக நீட்டிக்கொண்டு , "மதி .. இனிமேல் இந்த தாலி இல்லியேன்னு நீ பீல் பண்ணக்கூடாது , அதுனால நான் இப்போவே கட்டுறேன் .. " என்று அவளை பார்க்க ,
அவளோ விழுக்கென்று எழுந்து , அவனது கண்களை பார்க்க , அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது .
மொபைல் மூலம் 'மாங்கல்யம் ' பாட்டு ஒலிக்க , அவர்கள் காதல் அதிகமாகிய பெட் மீதே அவளுக்கு தாலி கட்டினான்.. முடிந்ததும் அவள் மீது மலர் தூவி , அவளை அணைத்துக்கொண்டான்..
"இப்போ ஓகே ஆஹ் டி செல்லம் "
"டபுள் ஓகே ஆஹ் டா .."
"இந்தமாறி கல்யாணம் யாருமே பண்ணியிருக்கமாட்டாங்க ..."
"ஆமா .. எனக்கு அதெல்லாம் கவலை இல்ல , உன்னோட கையால என்னோட கழுத்துல தாலி ஏறணும் னு ஆசைப்பட்டேன் .. அவ்ளோதான் "
"அவ்ளோதானா .." என்று கொஞ்சலுடன் கேட்க,
"இல்லை கோவிலுக்கு போகணும் .. இன்னிக்கு நமக்கு பர்ஸ்ட் நைட் "
"அது தினமும் நமக்கு பர்ஸ்ட் நைட் தானே " என்று தாபத்துடன் கேட்க , அவளது முகம் செவ்வண்ணமாய் சிவந்தது .. மீண்டும் அவர்களது தேடல் தொடங்கியது...
பின் இருவரும் குளித்து , உண்டுவிட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்றனர்.. அவர்களது வாழ்க்கையும் சந்தோசமாக போய்க்கொண்டு இருந்தது ..
ஒருநாள் , ஆதி வேகமாக அலுவலகத்திற்கு கிளம்பிக்கொண்டு இருக்க , மதி மயங்கி சரிந்தாள். அவளை எடுத்துக்கொண்டு ஹாஸ்பிடல் விரைந்தான்.. அங்கே .கூறப்பட்ட செய்தியால் , ஆதி கதிகலங்கி நின்றான்..
என்னவா இருக்கும் .. நெக்ஸ்ட் அப்டேட் ல பார்க்கலாம் ..   
---------------------------------------------------------------------------------------------------------------------
மறுநாள் பொழுதுவிடிய , மருமகளுக்கே உண்டான தனிப்பண்புடன் மது பூஜை அறையை சுத்தம் செய்து , விளக்கேற்றி , சாம்பிராணி போட்டு விட்டாள்.. வாசலில் கோலம் போட்டு , பால் காய்ச்சி வைத்துவிட்டு , காலை சமையலுக்கு தேவையான எல்லாவற்றையும் பார்க்க ஆரம்பித்தாள்..
அருண் , ரெடி ஆகி கீழே வர , அவனை வரவேற்றது சாம்பிராணியின் மணம் ..இட்லி சட்னி சாம்பார் என சமையலறை மணமும் அவனை தாக்கியது..
சாமி கும்பிட்டுவிட்டு சாப்பிட அமர்ந்தான்.. " மது .. அம்மா எங்கே "
" அத்தை தூங்கிட்டு இருக்காங்க .. நான் எழுப்பவில்லை "
"அம்மா இவ்ளோ நேரம் தூங்கிட்டு இருக்க மாட்டாங்க .. " என்று அறைக்கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றான்.. அவனுடைய அம்மா தூங்கிக்கொண்டு இருந்தார்..
"பாவம் அத்தை .. கல்யாண அலைச்சல் , நேத்து நடந்த விசயத்துல ரொம்ப டயர்ட் ஆகியிருப்பாங்க , விடு தூங்கட்டும் .. எழுந்ததும் நான் சாப்பாடு கொடுக்கறேன் "
" ம்ம் சரி..நீ இருக்கப்போ எனக்கு கவலையே இல்லை "
அவளும் சிரித்துக்கொண்டே மனதில்," நான் இருக்கறதுதான் உன்னோட கவலைக்கு எல்லாம் காரணமா அமையும் " என்று எண்ணிக்கொண்டாள்..
அருண் கிளம்பி ஆபீஸ் சென்று விட , மது அமர்ந்து யோசித்துக்கொண்டு இருந்தாள்.. என்ன செய்வது என்று ..' நைட் தூக்க மாத்திரை குடுத்து பேசவிடாம பண்ணியாச்சு ..கண்டிப்பா கொஞ்ச நேரம் கழிச்சு போன் பண்ணி அம்மாவை விசாரிப்பான் ...நேர்ல கூட வருவான் , என்ன பண்ணலாம் .. இன்னிக்கு வளர்மதி தான் நம்ம டார்கெட் .. எதாவது பண்ணணுமே .. என்ன பண்ணுன அருண் -வளர்மதி குள்ள சண்டை வரும் ..' என்று யோசித்துக்கொண்டே இருந்தாள்..
தனசேகர் , கால் செய்ய அவரிடம் வினவ அவர் குடுத்த ஐடியாவை செய்ய ஆரம்பித்தாள்..
வளர்மதி எழுந்ததும் , மது அறைக்கே சாப்பாடை எடுத்துக்கொண்டு சென்றாள்..
அவர் அப்போதுதான் குளித்துவிட்டு , வெளியே வந்தார் ..
"அத்தை சாப்பிடுங்க .." என்று உணவு பரிமாற , அவர் ஏதோ கூற வருவதற்குள் ," சாப்டுட்டு நிதானமா பேசலாம் அத்த்.. த் ..தை." என்று கூறினாள் மது..
சாப்பிட்டு முடித்ததும் , வளர்மதி முன்பு கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து ,பேசினாள் ...
முடிவில் , அவள் இடது காலை தூக்கி பெட் மீது வைத்து ," உங்களுக்கு ஓகே அப்படின்னா , என்னோட காலை அமுக்கி விடுங்க , ஓகே இல்லேன்னா ... உங்க பையனோட எதிர்காலத்துக்கு எதிரியா நில்லுங்க " என்று அவரை பார்த்து ஆணவத்துடன் கூற , 'தனது பையன் சந்தோசமே முக்கியம் என , அவளது காலை பிடித்துவிட தொடங்கினார் ..
"ஹையோ அத்தை .. என்ன இது ...இன்னும் நீங்க இந்த வீட்டுக்கு மகாராணின்னு நினைச்சுட்டு இருக்கீங்களா .."
அவர் குழப்பத்துடன் அவளை நோக்க , "நான் அப்புறம் நீங்க ரெண்டு பேரும் இருக்கப்போ , நான் சொன்னமாறி நீங்க கேட்கணும் , நான் சொல்றதை நீங்க செய்யணும் .."
"சரி மது "
"மதுவா .. நீங்க என்னோட அடிமை .. இனிமேல் என்ன எஜமானியம்மா என்று தான் கூப்பிடனும் ..அடிமை எப்பவும் எஜமானிக்கு கீழ தான் .. நீங்க பாட்டுக்கு சுகுசா மேல உட்கார்ந்து காலை அமுக்குறீங்க .." என்று நக்கலுடன் கேட்க
"மன்னிச்சுடுங்க எஜமானியம்மா " என்று கேவலுடன் கூற ,
"அழுகுறத நிறுத்து .. ஒழுங்கா காலை பிடிச்சு விடு .." என்று அவர் உட்கார்ந்ததும் அவர் மடிமீது காலை வைத்தாள் ..
அவரும் அழுதுகொண்டே , தனது மகனிற்காக தன்மானத்தை இழந்து அவள் இடும் வேலைகளை செய்துகொண்டு இருந்தார்..
அவரை பார்க்கவே , மதுவிற்கு பாவமாக இருந்தது.. இருந்தாலும் அவர்களுக்கு இந்த தண்டனை தேவைதான் என வன்மத்தை மீண்டும் மனதில் ஏற்றிக்கொண்டு , மற்றொரு காலையும் நீட்டினாள்..
வளர்மதி , என்னோட பொண்ணுக்கு பண்ணமாட்டேனா என நினைத்து மனதை தேற்றிக்கொண்டு அவளுக்கு பணிவிடை செய்தார்..
"போதும் .. உனக்கு என்ன பேர் வைக்குறது .. அடிமை அடிமை னு கூப்பிட முடியாதுல, "
"...."
"மரமண்டை .. எதுவும் பேசாம இருக்க , எதாவது வாயை தொறக்கணும்னு தெரியாத "
"எஜமானியம்மா " என்று அழுகையுடன் அவளை பார்க்க ..
"மரமண்டையே உனக்கு கரெக்ட் தான்.."
வளர்மதி உள்ளுக்குள் நொறுங்கி போனார்.. எந்த ஜென்மத்தில் செய்த பாவம் என்று நினைக்க ,
"எந்த ஜென்மத்தில் செய்த பாவமோன்னு நினைக்குறியா ? எல்லாம் இந்த ஜென்மம் தான் .. முடிஞ்சா கண்டுபிடி மரமண்டை ...." என்று ஏச , வளர்மதி புரியாத பார்வையுடன் அவளை பார்த்தார்..

"இப்போ இது போதும் .. மீதி கச்சேரியை அப்புறம் வச்சுக்கலாம் .,வெளில நான் உனக்கு மருமகள் , நீ எனக்கு அத்த்த்தை .. அத மறந்துடாத ..." என்று கூறிவிட்டு வெளியே சென்றாள்..
மருமகளுக்கு மாமியார் செய்யும் கொடுமைகள் போய் , மாமியாரை கொடுமைப்படுத்தும் மருமகள் ஆக மது மாறிவிட்டாள் .. பாவம் வளர்மதி .. மதுவினால் என்னென்ன கஷ்டப்படப்போகிறார்களோ ....
அடுத்த பகுதியில் பார்ப்போம் 
---------------------------------
(அப்படி மது வளர்மதியிடம் என்ன கூறியிருப்பாள் என்பதை நான் தங்களுக்கு கூறுகிறேன் ..
மது : " நேத்து நடந்ததை யோசிக்குறீங்களா ?"
வளர்மதி : " ஆமா மது .. சத்தியமா நான் உனக்கு எதுவும் கெடுதல் பண்ணவில்லை "
மது : " தெரியும் அத்தை .. ஏன்னா அது எல்லாத்தையும் பண்ணுனது நான் தான்.."
வளர்மதி , அதிர்ச்சியுடன் ,"நீயா ? எதுக்கு ?"
"உங்க பையனை உங்ககிட்ட இருந்து பிரிக்க தான் .. உங்க பையன் எனக்கு மட்டும்தான் .. நீங்க இருக்குறது எனக்கு பிடிக்கல .. அதுமட்டுமில்லை அவர்கிட்ட உரிமை எடுத்துகிறது பிடிக்கல ..சோ நீங்களாவே விலகி நான் சொன்ன மாறி செய்ங்க .. இல்லேன்னா .." என்று நிறுத்தி அவரை பார்க்க ,
"இல்லேன்னா .. என்ன பண்ணுவ .. நான் போய் அருண்கிட்ட சொன்ன அவன்உன்ன உடனே கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளிடுவான் " என்று ஆவேசத்துடன் பொரிய ..
"ஹாஹாஹா ஹ்ஹ்ஹா , அதெல்லாம் நடக்காது .. நீங்க போய் சொல்லமாட்டிங்க , சொன்னா உங்க பையன உயிரோட பார்க்க முடியாது .., சப்போஸ் உயிரை நீங்க காப்பாத்துனாலும் , நான் அவரை விட்டு பிரிஞ்சு வெளியே போய்டுவேன் .. அப்போ உங்க பையன் நடைப்பிணம் தான் .. ஏன்னா அவர் என்ன எவ்ளோ லவ் பண்ணுறார்னு உங்களுக்கு தெரியுமே ..அதுனால நல்ல பிள்ளையா நான் சொல்றத கேளுங்க .. உங்க பையனை உயிரோட கண் முன்னாடி சந்தோசமா பார்க்குற பாக்கியமாவது உங்களுக்கு கிடைக்கும் ..இல்லேன்னா உங்க பையன நடை பிணம் ஆக்கிடுவேன் .அதுக்கான பழியையும் உங்கமேல தான் போடுவேன் ..என்ன சொல்றீங்க " என்று கேட்க , அவர் அமைதியாக இருந்தார்   
பின் மது கால் அமுக்க சொல்ல , தனது சம்மதத்தை அதன் மூலம் தெரிவித்தார் ..)

💕💕நீயே என் இதயமடி -12💕💕 💕💕நீயே என் இதயமடி -12💕💕 Reviewed by SaraThas on December 15, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.