தன்னவளை தனது கைகளில் ஏந்திக்கொண்டு காரிற்கு கொண்டு சென்றான். அவளை அதில் கிடத்தி , புயல் வேகத்தில் சென்று கொண்டு இருந்தான். மனதிற்குள் ஆயிரம் எண்ணங்கள் , எதுக்கு இந்த நல்ல சந்தோஷமான தருணங்கள் இப்படி ஆகிடுச்சே.. நாங்கள் என்ன பாவம் செஞ்சோம். ஒருத்தரை ஒருத்தர் விரும்பினோம் , அம்மா வுக்கும் பிடித்து இருந்ததே .. அப்புறம் எப்படி இதெல்லாம் நடந்தது என்று தனது எண்ண ஓட்டத்துக்குள் நுழைய , கார் வேகமாக மற்றொரு கார் மீது மோத சென்றபோது, அவன் காரை வளைத்து நடக்கவிருந்த விபத்தை தடுத்தான்.
மறுபடியும் காரை ஸ்டார்ட் செய்து ஹாஸ்பிடல் சென்றான்.
அவளை உள்ளே அட்மிட் செய்துவிட்டு வெளியே தவித்துக்கொண்டு இருந்தான்.
'உனக்கு எதுவும் ஆகாது gapee .. என்னை விட்டுட்டு உன்னால எங்கேயும் போகமுடியாது..' என்று புலம்ப , டாக்டர் டிரீட்மென்ட் முடித்து வெளியே வந்தார்.
"டாக்டர் , அவளுக்கு ஒன்னும் ஆகலைதானே .. அவ நல்ல இருக்காதானே .எதாவது பேசுங்க டாக்டர்:"
"ரிலாக்ஸ் அருண் .. ஷி ஐஸ் பைன் நவ் .. நார்மல் வார்டு கு மாத்திட்டோம் "
"என்ன ஆச்சு டாக்டர் அவளுக்கு , எதுனால இப்படி ஆச்சு அவளுக்கு "
"அவங்க ஸ்லொவ் பாய்சன் கலந்த ஏதோ ஒன்ன சாப்பிட்டுஇருக்காங்க , அதுனால தான் இப்படி ஆகியிருக்கு.அவங்க டூ டேஸ் ரெஸ்ட் எடுத்த சரியாகிடும் .. டேக் கேர் அருண் " என்று டாக்டர் அவனிடம் கூறிவிட்டு சென்றார்.
அருண் , ஸ்லொவ் பாய்சன் ஆஹ் .? எப்படி என்று யோசித்துக்கொண்டு இருந்தான்.
காலையில் இருந்து நடந்த நிகழ்வுகளை நினைத்துக்கொண்டு இருக்க , அவனது அம்மா விரதம் என்று பால் குடுத்தது ஞாபகம் வர , அடுத்தடுத்த நிகழ்வுகள் எல்லாம் ஞாபகம் வந்தது. தீபத்தினால் புடவை எரிந்தது , அபசகுனம் என்று கூறியது எல்லாம் ஞாபகம் வர அவனுக்கு அம்மா ஏன் இப்படி பண்ணுனாங்க என்று குழம்பியிருந்தான்.
நர்ஸ் , அவனை அழைத்து உள்ளே சென்று பார்க்க பார்க்க சொல்ல , அவனும் உள்ளே சென்று அவளை பார்த்தான். அவள் கண்மூடி படுத்துயிருக்க , அவளது கைகளை பிடித்துக்கொண்டு ,
"gapee .. உனக்கு பாய்சன் குடுத்துஇருக்காங்க அப்படினு டாக்டர் சொன்னாங்க ..என்னால நம்பவே முடியல .. உனக்கு எதுக்கு விஷம் குடுக்கணும் எதுக்காக இப்படி பண்ணனும் யோசிச்சு ரொம்ப குழம்பிபோய்ட்டேன். இதெல்லாம் காரணம் அம்மா னு தோணுது .. ஆனால் என்னோட மனசு அம்மா இல்லேன்னு சொல்லுது .. எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியலடி . , நீ சீக்கிரம் குண்மாகிவா , அப்புறம் தான் எத இருந்தாலும் யோசிக்கமுடியும் , இப்போதைக்கு உனக்கு ஏதும் ஆகுல .. இனிமேல் உனக்கு எதுவும் நடக்க விடமாட்டேன் .. உன்ன என்கிட்ட இருந்து யாராலையுமே பிரிக்க முடியாது.. உன்ன என்னோட கைக்குள வச்சு பாத்துக்குவேன்.." என்று பேசிக்கொண்டே அவளது கைகளை முத்தமிட்டான்.
அவளது நெற்றியை வருடிவிட்டு ,முத்தமிட்டு அமர்ந்து அவளை பார்த்துக்கொண்டு இருந்தான்.
தீடிரென்று போன் கால் வர, அவனது அம்மா கால் செய்து இருந்தார். அவரிடம் விஷம் தவிர மற்ற விவரம் கூறிவிட்டு , மீண்டும் தனது வேலையை தொடங்கினான்.
அவள் கண்விழித்ததும் , அவளை அணைத்துக்கொண்டு நடந்ததை கூற, அவளோ ,'நான் பால் மட்டும் தான் குடிச்சேன் ' என்று கூறினாள். அவனது சந்தேகம் வலுப்பெற ,அமைதியாக இருந்தான். அவனது உணர்வுகளை முகத்தில் காட்டாமல் ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்தான்.
மதுவே சென்று அவனது தோளில் கைவைத்து அவனை திருப்பி ,'அம்மா இந்தமாறி செய்து இருப்பாங்கன்னு நினைக்காதீங்க .. இப்போ எதையுமே முடிவுபண்ணாதீங்க .. இன்னும் கொஞ்ச நாள் போன உண்மை தெரியவரும் . உண்மையை என்னைக்கும் மூடி மறைக்க முடியாது. எனக்கு எதுவும் ஆகாது.. உன்ன விட்டுட்டு எங்கேயும் போகமாட்டேன்.' என்று அவனை அணைத்துக்கொண்டு சொன்னாள்..
"தேங்க்ஸ் பேபி .. உன்னைப்போல ஒரு பொண்டாட்டி கிடைக்க நான் குடுத்துவச்சுஇருக்கணும்.. " என்று அவளை அழுத்திப்பிடித்துக்கொண்டு ,மனதில் ,'உனக்கு எதுவும் ஆகவிடமாட்டேன் டி ' என்று கூறிக்கொண்டான்.
மதுவும் மனதில் , ' இப்போ உன்னோட அம்மா மேல சந்தேகம்வந்துடுச்சு .. அது போதும் ' என்று வன்மமாக சிரித்துக்கொண்டு அவனை இறுக்கினாள்.
இருவரும் கிளம்பி வீட்டிற்கு வந்தனர். உறவினர்கள் களைந்து சென்று இருக்க , வீடே அமைதியாக இருந்தது. வளர்மதியும் சேரில் உட்கார்ந்தவாரே உறங்கிக்கொண்டு இருக்க , மது அவரை கை தாங்கலாக அவரது அறையில் படுக்க வைத்தார்.
இருவரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். மது அருணின் தோள்மீது சாய்ந்து , 'தயவு செஞ்சு அத்தையை தப்ப நினைக்காத .. இதெல்லாம் எதேர்ச்சையாக கூட நடந்துஇருக்கலாம். ஓகே ஆஹ் '
'நீ சொன்ன சரிதான் பேபி..என்னோட மனசும் அப்புடித்தான் சொல்லுது ..' என்று அவளை அணைத்துக்கொண்டான்.
அவளுக்கு தேவையான மருந்துகளை குடுத்து , அவளை தனது ரூமிற்கு அழைத்து சென்றான். அவள் அதை மறுத்து , இப்போ இந்த அறைக்குள் வரது சரியா இருக்காது. என்று மறுத்து அவள் பக்கத்தில் இருக்கும் அறையை எடுத்துக்கொண்டாள்.
அவனும் எதுவும் பேசாமல் அவளை படுக்க வைத்துவிட்டு அவனது அறைக்கு சென்றான்.. அங்கே இருந்த அலங்காரங்களை பார்த்துவிட்டு பெருமூச்சுவிட்டு , ஜன்னல் வழியே எட்டி பார்த்தான்.. தனதுமொபைலை எடுத்து அவளது புகைப்படத்தை வைத்துக்கொண்டு ,' ஐ அம் சாரி டி , எப்படி இருக்க வேண்டிய நாள் இப்படி ஆகிடுச்சே ..நீ ஒன்னும் பீல் பண்ணாதடி .. உனக்கு எப்பவும் துணையா நான் இருப்பேன்.எந்த ப்ரோப்லம் வந்தாலும் அத உனக்காக நான் பார்த்துக்குவேன்.' என்று பேசிக்கொண்டு அவளை நினைத்து உருகி கொண்டு இருந்தான்.
மதுவும் நைட் டிரஸ் ற்கு மாறிவிட்டு , வழக்கம் போல போட்டோ பிரேமை எடுத்துவைத்து அவனிடம் பேசிக்கொண்டு இருந்தான்.'நான் நெனச்ச மாறி நடந்துடுச்சு .. அவனுக்கு அவங்க அம்மா மேல சந்தேகம் லைட் ஆஹ் தான் வந்துச்சு .. நானே அத போக்கிட்டேன்.. இப்போ அவன் என்ன ரொம்ப நம்புறான்..அதுதான் எனக்கு வேணும்.. உன்ன என்கிட்ட இருந்து பிரிச்சுட்டான்ல அதுக்கு அவனுக்கு தண்டனை தரணும். இன்னைக்கு கொஞ்சம் ஓவர் தான் .. பாவம் வளர்மதி அம்மா ..' என்று பேசிக்கொண்டு இருந்தாள்..
போட்டோ பிரேமை கையில் எடுத்து அதை டேபிள் மீது வைப்பதற்காக திரும்ப , அங்கே அருண் நின்று கொண்டுஇருந்தான்....
அவன் எல்லாவற்றையும் கேட்டுஇருப்பானா ?.....மதுவின் நிலைமை என்ன ? அடுத்த பகுதியில் .பார்ப்போம் ...
💕💕நீயே என் இதயமடி -11💕💕
Reviewed by SaraThas
on
December 15, 2018
Rating:

No comments: