SaraThas Blog

தலை குனிந்து என்னை பார் ,தலை நிமிர வைக்கிறேன் - புத்தகம்

💕💕நீயே என் இதயமடி -10💕💕

நிச்சய வேலைகள் , வளர்மதியினுடைய வீட்டு தோட்டத்தில் நடைபெற்று கொண்டு இருந்தது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு , ரம்மியமாக காட்சியளித்து. வளர்மதியும் ரெடியாகிவிட்டு , அருணை சென்று பார்க்க , அவன் ரெடியாகி கீழே வந்தான். சந்தனநிறஷெர்வாணினியில் மிக அழகாக இருந்தான். அவனை வாழ்த்திவிட்டு மற்ற வேலைகளை கவனிக்க சென்றார்.
அருண் தனது மொபைலை எடுத்து சில போட்டோக்கள் எடுக்க , அதை மதுவிற்கு அனுப்பினான். அவளது போட்டோவை கேட்க ,
மது : நான் இன்னும் ரெடி ஆகவேயில்ல..😓😓😓😔😔😞
அருண் : ஏண்டி ..😠😠😞😞
மது : பார்லர் ல இருந்து யாரும் இன்னும் வரவில்லை. எனக்கு சேலை அதுவும் பட்டுசேலை கட்ட தெரியாதே.😓😓😓😓
அருண் : சேலை கூட கட்ட தெரியாத .. நீ எல்லாம் என்ன பொண்ணுடி😠😠 ..வேணும்ன்னா ....நான் கட்டிவிடட்டா ?😜😜😜😜
மது : நான் எல்லாம் பொண்ணுதான்.. எனக்கு நீட் ஆஹ் கட்டவராது. உனக்கு எப்படி தெரியும் இதெல்லாம்😡😡😡 .. என்று கோபத்துடன் கேட்க ,
அருண் : யூடூப் ல பாத்து நான் உனக்கு கட்டிவிடுறேண்டி..
மது: அது எங்களுக்கே பார்க்க தெரியும். பட் புடவை கசங்கிடும் அதுனாலதான் நான் அத ட்ரை பண்ணாம இருக்கேன்.
அருண் : பேசாம , நாம எடுத்த டிரஸ் ஆஹ் போட்டுட்டு வா. அம்மாகிட்ட நான் சொல்லிக்குறேன்.
மது : இல்லடா வேண்டாம்.. அத்தை எதாவது தப்ப நெனச்சுக்க போறாங்க.
அருண் : அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை .. நீ நான் சொன்னதை போட்டுட்டு வா. என்று அழைப்பை துண்டிக்க , மது சிரித்துக்கொண்டே தான் அணிந்து இருந்த ஆடையை ( அவள் தேர்வுசெய்த ஆடையை அணிந்து இருந்தாள் ) பார்த்துவிட்டு பார்லர் பெண்ணிடம் மேக்கப் செய்யுமாறு கூற , ஒருவழியாக அவர்கள் கிளம்பினார்கள்.
தனசேகர் : மது , இந்த கல்யாணம் வரை போகணுமம்மா .
மது : கண்டிப்பா போகணும்ப்பா.. நான் அங்க போய் அவனை தனிமையாக்கணும் .. முதலில் அவன் அம்மாவை அவன்கிட்ட இருந்து பிரிக்கணும். அப்புறம் அவனது நண்பர்கள் , பெருசா யாருமில்லை .அப்புறம் அவனுக்கு எல்லாமே நான் ஆஹ் இருக்கணும் . அப்போ அவனுக்கு என்னோட சுயத்தை வெளிப்படுத்துவேன். எப்படி எனக்கு எல்லாம இருந்த என்னோட உறவுகளை என்கிட்ட இருந்து பிரிச்சானோ , அதே மாறி அவன் என்ன, அவனோட அம்மாவை பிரிஞ்சு துடிக்கணும்.😡😡😡😡
தனசேகர், இதை எல்லாம் காரில் உள்ள மினி கேமரா மூலம் படம் எடுத்துக்கொண்டு இருக்க , மது தன்னுடைய ஆதங்கத்தை பொலம்பிவிட்டு கண்ணைமூடி படுத்துவிட்டாள்.
மனதிற்குள் ,' எனக்கு எல்லாம் நீதானேடா .. உன்ன அநியாயமா கொன்னுட்டு , அவன் சந்தோசமா வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கான். இனி அவன் வாழ்க்கைல சந்தோசம் அப்படினா என்னான்னு கேப்பான் . கேக்க வைப்பேன்😡😡😡😡 ' அவனது நினைவுகளுக்குள் மூழ்கிப்போனாள். அவளது கண்கள் கண்ணீரை சிந்தியது .
அனைவரும் அருண் வீட்டிற்கு செல்ல , அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துவந்தார் வளர்மதி. அப்போதுதான் மதுவை பார்க்க , அவள் தான் குடுத்த புடவை அணியாமல் அவள் எடுத்த ஆடை அணிந்து வர ,அவரது முகம் சோகமாகியது. அவளிடம் என்ன விசாரிப்பது என்று விட்டுட்டார்.
அனைவரும் வந்து மேடை அருகில் ஆஜராக , நிச்சய விழா இனிதே தொடங்கியது. ஐயர் பத்திரிகை வாசித்ததும் , இருவீட்டாரும் தாம்பூலம் மாற்றி கொண்டனர் . இதை எல்லாம் கவனிக்காமல் அருணும் மதுவும் கண்களால் கதை பேசிக்கொண்டு இருந்தனர்.
அருண் : செம்ம அழகா இருக்கடி ..😍😍😍
மது : நீயும் தான். என்று அவனை பார்த்து கண்ணடித்தாள்.
அனைவரும் எல்லாம் முடித்து ரிங் மாற்றுவதற்காக அருண் மதுவை பார்க்க , அவர்கள் இருவரும் கண்களால் பேசிக்கொள்வதை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தனர்.
யாரோ ரொம்ப நேரம் நம்மளை வாட்ச் பன்னுறமாறி இருக்கே என்று மது திரும்பி பார்க்க , அருண் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான் . அவள் சிரித்துக்கொண்டு அங்கே இருந்து நகர , அவளது கையை பிடித்து எங்க போற என்று கேட்க அவள் கண்களால் அந்த சைடு பார்க்க சொல்ல ,அங்கே பார்த்தவன் , இளித்துக்கொண்டே மதுவிடம் இருந்து நகர்ந்து நின்றான்.
பின்னர் இருவரும் மோதிரம் மாத்திக்கொண்டு , பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடினார்கள்.

நெருங்கிய உறவுகள் விருந்து உண்டுவிட்டு கிளம்ப , மதுவினுடைய குடும்பமும் கிளம்பியது
நெருங்கிய உறவுகள் விருந்து உண்டுவிட்டு கிளம்ப , மதுவினுடைய குடும்பமும் கிளம்பியது.
மது கிளம்பும்முன் அவளை அழைத்து , அவளிடம் பேசிக்கொண்டு இருந்தான் அருண். அவன் பார்க்காத சமயத்தில் , அவனது கன்னத்தில் முத்தமிட்டு ஓடிவிட , பின்னால் அருண் தொரத்திக்கொண்டு வந்தான். அவள் கிளம்ப வேண்டும் என்று கூற, அவளை அனுப்பி வைத்துவிட்டு , மீதி வேலைகளை பார்க்க சென்றான்.
நாட்கள் நகர ,திருமண தினமும் வந்தது.
அதிகாலை திருமணம் என்று இருக்க இரவு நலுங்கு வைத்துவிட்டு , அருணும் மதுவும் தங்களது உணர்வுகளின் பிடியில் இருந்தனர். எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்று வளர்மதி வேண்டிக்கொண்டு இருந்தார்.

பட்டு வேஷ்டி சட்டையில் , ஆணழகனாக இருந்தான் அருண்     
பட்டு வேஷ்டி சட்டையில் , ஆணழகனாக இருந்தான் அருண். அவனுக்கு திருஷ்டி எடுத்துவிட்டு ,வளர்மதி அவனை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றார்.
மதுவும் சிவப்பு நிற புடவையில் மிக அழகாக இருந்தாள். தனாவும் மணியும் அவளை அழைத்துகொண்டு கோவிலுக்கு சென்றார்கள்.
இருவரும் ஹோமகுண்டத்தின் அருகே உட்கார்ந்து ஐயர் கூறுவதைப்போல செய்துகொண்டு இருந்தனர். அருண் மதுவை சீண்டி விளையாடிக்கொண்டு இருந்தான். மதுவோ பொறுமைகாத்து இருக்க , அந்த பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு போல அவனது தொடையை கிள்ளினாள்.
அவன் ஆவென்று கத்த , அதை மட்டும் பார்த்த வளர்மதி, மதுவை அதட்டினார். அவள் அருணை முறைத்துக்கொண்டு அமைதியாக உட்கார்ந்துகொண்டாள் 
மாங்கல்யம்
தந்துனானே மம ஜீவன
ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே
சஞ்சீவ சரத சதம்
என்று ஐயர் கூற, அவளது கழுத்தில் தனது கரங்களால் தாலி கட்டினான் அருண். பின் அக்னியை வலம் வர , அவர்களது திருமணம் வெற்றிகரமாக முடிந்தது. பலருக்கு இது சந்தோசமாக சிலருக்கு வேதனையாக .....

 பலருக்கு இது சந்தோசமாக சிலருக்கு வேதனையாக

காலை திருமணம் என்பதால் விரதம் வைத்துஇருந்த மதுவிற்கு தலை சுத்துவது போல் இருக்க , வளர்மதி அவளிடம் ஒரு பால்கிண்ணத்தை குடுத்து பருக சொன்னார். அருணும் நீ எதுக்கு விரதம் இருக்க லூசு , என்று அவளுக்கு பாலை புகட்டினான்.

அவள் பால் குடித்து முடித்ததும் உறவினர்கள் மணமக்களுடன் பேசிக்கொண்டு இருக்க , அனைவரும் வீட்டிற்கு கிளம்பிக்கொண்டு இருந்தனர். வளர்மதி முன்னே சென்று எல்லா ஏற்பாடுகளையும் கவனிக்க சென்றுவிட்டார்கள். தனாவும் மணியும் அவர்களை வழிஅனுப்பிவிட்டு , மணி அவர்களுடன் காரிலேயே பயணம் செய்தான்.
அருண் தங்களது காதல் கை கூடிய சந்தோஷத்தில் , மதுவை சீண்ட , மது மணிகூட பேசிக்கொண்டு இருந்தாள். அருணும் வேறு வழியில்லாமல் மணி கூட பேசிகொண்டுஇருந்தான்.
கல்யாணம் ஆகிடுச்சே, இப்போவாவது தனியா விடுவோம்னு தோணுதா😠😠 , என்று மணியை திட்ட அவனுக்கு புரை ஏறியது.
அருண் அருகில் இருந்த தண்ணீரை எடுத்துக்கொடுத்து , யாரோ திட்டுறாங்கபோல என்று கூறிவிட்டு மதுவை பார்க்க , அவளோ சிரித்துக்கொண்டு ,அருணின் காதில் ,'அந்த யாரோ நீங்கதானே '😂😂 என்று கூறிவிட்டு சிரித்தாள்.
மணியும் 😂😂, அருணை கேலி செய்துகொண்டு சந்தோசமாக அருணின் வீட்டிற்கு வந்தனர்.
மருமகளை ஆரத்தி எடுத்து அவளது வலது காலை வைத்து உள்ளே வரச்சொல்ல , மது காலை எடுத்து வைத்தது , கரண்ட் கட்டாகிவிட்டது.
வளர்மதி ,'ஏதோ அபசகுனமாக இருக்கே ' என்று மெதுவாக கூற , அருகில் இருந்த அருணின் காதில் தெளிவாக விழுந்தது. மதுவிற்கு கேட்டுவிடக்கூடாது என்று அவளை பார்க்க ,அவளோ அழுதுகொண்டு இருந்தாள்.
அருண் ,மதுவை சமாதானம் செய்ய , மதுவும் சிரித்துவிட்டு அவனது கையை இறுக பற்றிக்கொண்டாள்.
வளர்மதி மெழுகுவர்த்தி எடுத்துக்கொண்டு வந்து அங்கே வைக்க , அதன் ஒளியில் இருவரையும் பூஜை அறைக்கு அழைத்து சென்றார்.
சாமி படம் முன்பு மதுவை விளக்கேற்ற சொல்லிவிட்டு ,விழுந்து கும்பிட சொன்னார். இருவரும் அதேபோல் செய்ய ,அருண் தலையை உயர்த்தி மறுபடியும் கும்பிட ஒரு உருவம் , அங்கே உள்ள விளக்கில் தீபம் ஏற்றியது. நன்றாக திருப்பி பார்க்க அது அவனுடைய அம்மா தான். எதற்காக என்று யோசித்துக்கொண்டே எழும்போது , தீடிரெண்டு மதுவினுடைய புடவை தீப்பிடித்து எரிய தொடங்கியது. அவன் அதை தன் கைகளால் அணைக்க , அங்கே அவனது அம்மா ஏற்றிய தீபம் நன்றாக சுடர்விட்டு எரிந்து கொண்டு இருந்தது.. புடவையின் நெருப்பை அணைத்துவிட்டு வெளியே வர , அனைவரும் சகுனமே சரியில்லை , இந்த பொண்ணோட ராசி சரியில்லை ,கசமுசா வென்று பேசிக்கொள்ள , அவன் 'அம்மா ' என்று அழைக்க அவரிடம் போனான்.
வளர்மதியின் கெட்டநேரமோ தெரியவில்லை ,'ரொம்ப அபசகுனம் மாறி ஆகிடுச்சு , என்னோட புள்ளை உயிருக்கு ஏதும் ஆகக்கூடாது ' என்று கூறுவதை அரைகுறையாக கேட்டுவிட்டு மதுவிடம் வந்தான்.
மது சோகமாக இருப்பதை பார்த்து அவளது கண்ணீரை துடைத்துவிட்டு , அவளை அழுத்திப்பிடித்துக்கொள்கிறான். தனாவும் மணியும் மின்சார பிரச்சனையை பார்த்துக்கொண்டு இருந்தனர், அவர்கள் உள்ளே வர கரண்ட் வரவும் சரியாக இருந்தது.
இருவரும் உள்ளே வந்து மது மற்றும் அருணை பார்க்க முகம் சரியில்லை என்று அருணிடம் விசாரித்தனர். அவன் நடந்தவற்றை கூற , 'மன்னிச்சுடுங்க மாப்பிளை , எங்களுக்கு கொஞ்சம் பயமாயிருக்கு .நீங்கதான் மதுக்கு இனி எல்லாமே ..இந்த வீடு தான் மதுவிற்கு ..அவ உங்கமேல உயிரையே வச்சுஇருக்கா ..அவளை நீங்கதான் பாத்துக்கணும் .. எந்த சூழ்நிலையிலும் கைவிடக்கூடாது.. மணி இன்று அமெரிக்கா போறான், அவன்கூட நானும் போகப்போறேன். இதெல்லாம் உங்களுக்கு தெரியும் .. இருந்தாலும் நான் மறுபடியும் சொல்றேன்.. இனி மது உங்கவீட்டு சொத்து , இதுக்கு மேல நீங்கதான் பாத்துக்கணும் ..'என்று கூறிவிட்டு மதுவிடம் சில அறிவுரைகளை சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பினார்கள். உறவினர்களுக்கு வெறும் வாயில் அவுல் கிடைத்ததை போல இதைபோட்டு மென்று கொண்டு இருந்தனர்.
அருணிற்கோ தலைவெடித்துவிடும் போல இருந்ததது. மது அருணிடம் சென்று அவனது கைகளை இறுக பற்றிக்கொண்டு , அவன்மீது சாய்ந்து நிற்க , வளர்மதி வந்ததும் 'இவ இப்படி இருக்காளே ' என்ற அக்கறையில் , மது இங்க வந்து உட்காருமா , அருண் வெளில போயிட்டு வரட்டும் என்று கூற அருணிற்கோ அம்மாவா இப்படி என்று குழப்பம் அடைந்தான்.

அவன் வெளியே செல்வதற்கு முன்னாடியே , அவள் மயங்கி அவன்மீது விழ , வாயிலிருந்து நுரையுடன் ரத்தமும் வெளிப்பட்டது. அவன் பதறி அடித்துக்கொண்டு அவளை ஹாஸ்பிடல் தூக்கி சென்றான் ...

💕💕நீயே என் இதயமடி -10💕💕 💕💕நீயே என் இதயமடி -10💕💕 Reviewed by SaraThas on December 15, 2018 Rating: 5

Post Comments

No comments:

Powered by Blogger.