கவின்- ஜோதி மாற்றம்
கவின் அவளது கையை பிடித்துக்கொண்டு , மெதுவாக தடவி கொடுத்தான்..அவன் கையை பிடித்ததும் , அவள் கையை உருவ பார்க்க , அவன் மெதுவாக தடவி குடுத்ததும் , அமைதியாக அவனை பார்த்தாள்..
"ஜோதி , இவ்ளோ நாள் நீ பட்ட கஷ்டம் எல்லாம் போதும்.. அதுக்கு ஒரு முடிவு வரணும்னுதான் கடவுள் என்கிட்ட உன்னை அனுப்பிவைச்சுஇருக்காரு.. நானும் பணத்தால் என்னோட பாசமான அத்தையை இழந்துட்டேன். என்னோட குடும்பமே அதற்கு காரணம்.. அதுனாலதான் நான் இப்படி இருக்கேன்.. என்ன விட நீ அதிகம் கஷ்டப்பட்டுஇருக்க .. இனிமேல் நீ கஷ்டப்படக்கூடாது .. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு தரவேண்டியது என்னோட பொறுப்பு..என்னை நம்பு ப்ளீஸ் .. என்னோட அத்தைக்காக நான் இதையெல்லம் உனக்கு செய்யுறேன்.."
"நான் வாழ்ந்து என்ன ஆகப்போகுது .. வேணாம் சார் "
"டோன்ட் கால் மீ சார் .. கால் மீ அஸ் கவின் , தென் இப்படி விரக்தியா பேசாத.. கடவுள்மேல உனக்கு நம்பிக்கை இருக்கா ?"
"இருக்கு . அவரைமட்டும்தான் நான் நம்புனேன் .. அவரும் என்னை கைவிட்டுட்டாரு " என்று அழ கவின் அவளை சமாதானப்படுத்தி ஒருவழியாக அவன் பேச்சை கேட்கும் அளவிற்கு தேற்றினான்.
" அங்க இருந்தவரை உன்ன அவங்க கஷ்டப்படுத்துனாங்க .. இப்போ கடவுள் உனக்கு ஒரு வாய்ப்பு என்மூலமா குடுத்துஇருக்காரு.. ஒருதடவை வாழ்ந்துபாரு .. உனக்கு பிடிச்சமாறி வாழ்ந்துபாரு ..உயிரை குடுத்துவனுக்கு அத எப்போ எடுக்கணும்னு தெரியும் .. இனிமேல் சாகறேன் அப்படினு சொல்லக்கூடாது " என்று சத்தியம் வாங்கிக்கொண்டான்..
கவின் சொல்லுறமாறி , கொஞ்சநாள் இருப்போம் கடவுள் மேல பாரத்தைப்போட்டுவிட்டு .. இனிமேல் நமக்கு அந்த சிறையில் இருக்க தேவையில்லை .. என்று நினைத்து அவள் முகம் சிறிது தெளிவடைந்தது.. அதை பார்த்ததும் கவினுக்கும் மகிழ்ச்சியே..
இருவரும் கிளம்ப எத்தனிக்க , ஜோதி ,அவனிடம் தண்ணீர் வேண்டுமென்று கேட்டாள்..
அவனும் பாட்டிலை தர , அவள் அதை முழுவதுமாக குடித்துவிட்டாள்..
அப்போதுதான் அவனுக்கு உரைத்தது அவள் காலையிலிருந்து சாப்பிடவில்லை என்று..
கோபத்துடன் அவளை அடிக்க கை ஓங்கி , பின் நின்றுவிட்டான் ," பசிக்குதா ஜோதி " என்று வலியுடன் அவன் கேட்க , அவள் ஆமாம் என்று தலையாட்டினாள்..
"இனிமேல் எதுவேணும்னாலும் என்கிட்ட தயங்காம கேளு ஜோதி .. உன்னோட அம்மாகிட்ட எப்படி கேட்பாயோ அதேமாறி என்கிட்ட கேளு " என்று அவள் தோள் தொட , ஜோதி அவனை அணைத்து " அம்ம்மாஆ " என்று கதறி அழத்தொடங்கினாள்.. அவன் ஆதரவாக முதுகை வருடிக்கொடுக்க , பின் இருவரும் கிளம்பி அவனை ஒட்டியபடியே வெளியே வர , ஹோட்டல் சென்று சாப்பிட ஆர்டர் செய்தான்..
அங்குள்ள அனைத்தையும் வேற்று கிரகத்திலிருந்து வந்தவள் போல வேடிக்கை பார்த்தாள்.
கவினும் அவளது நிலைமையை புரிந்துகொண்டான்.. அவளுக்காக நான் ஏன் இப்படி மாறினேன் என்று குழப்படைந்தாலும் , என்னைப்போல பாவம் என்ற இரக்க குணத்தால் பண்ணுகிறேன் என்று சமாதானம் செய்துகொண்டான்.
ஜோதி அங்கு வந்த சாப்பாடை பார்த்ததும் , அவளுக்கு பசி வேகமெடுத்தது.. கவின் எதாவது சொல்லுவானோ என்று அமைதியாக இருக்க ., அவன் சாப்பிட தொடங்கிவிட்டான் ..
எச்சில் ஊற அவன் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டு இருக்க , கவின் அதை பார்த்து ," சாப்பிடு ஜோதி " என்று கூறினான்.
பின் வேகவேகமாக அனைத்தையும் தட்டில் வைத்து , இரு கைகளாலும் சாப்பிட அழுதுகொண்டே தொடங்கினாள். எத்தனை வருடங்களுக்கு பிறகு நல்ல சாப்பாடு சாப்பிடுகிறாள்.. அழுத்தக்காரனான கவினுக்கு அதைப்பார்த்ததும் மனம் உருகியது.. அவளை மெதுவாக சாப்பிட சொல்லிவிட்டு ,அவனுள் சாப்பிட்டான்..
பின் அவளை ஒரு நல்ல பார்லர் க்கு அழைத்து சென்று , அவளுக்கு வேண்டியதை பண்ண சொன்னான்.. அதற்குள் அருகில் உள்ள ஷாப்பில் அவளுக்கு தேவையான துணி வாங்கிக்கொண்டு வந்தான்.. வந்து பார்த்தவனுக்கு அங்கே உள்ள எல்லோரும் அவனை முறைப்பதை கண்டு குழப்பமடைந்தான்.
உள்ளே எட்டி பார்க்க , ஜோதி நிம்மதியாக தூங்கிக்கொண்டு இருந்தாள்..
அங்கே வேலை செய்பவர்கள் , தலைக்கு குளிக்க வைத்ததும் அவங்க தூங்க ஆரம்பிச்சுட்டாங்க .. எவ்ளோ எழுப்பி பார்த்தோம் , எழுந்திருக்கவே இல்லை.. என்று கூற சிரித்துவிட்டு அவளை தூக்கிக்கொண்டு அவனது கெஸ்ட் ஹவுஸ் சென்றான்..
அவளை படுக்க வைத்துவிட்டு , அவனும் அருகிலேயே தூங்கிவிட்டான்..
கவின் எழுந்து பார்க்க , அவள் தூங்கிக்கொண்டு இருந்தாள்.. எத்தனை நாள் உறக்கம் இல்லாமல் இருந்துஇருப்பாளோ என்று நினைத்துவிட்டு அவளது தலையை கோதிவிட்டான்..
பின் அவள் எழுந்ததும் , அவளை குளித்துவிட்டு , வாங்கிக்கொண்டு வந்த ஆடையை அணியச்சொன்னான்..
அவளுக்கு அதை எப்படி அணிவது என்று தெரியவில்லை .. மாற்றி அணிந்து கொண்டு வர,கவின் அவளை பார்த்து சிரிக்க தொடங்கினான்.. பின் அவளிடம் கூறிவிட்டு , அவளும் அணிந்து வர , இருவரும் ஷாப்பிங் சென்று குர்தி , சூடி,அவளுக்கு தேவையான ஆடைகள் போன்றவற்றை வாங்கினார்கள் .
இருவரும் இரவு உணவை முடித்துவிட்டு , மீண்டும் கெஸ்ட் ஹவுஸ் சென்று உறங்க , கவின் ஒரு மருந்தை குடுத்து , காயத்தின் மீது தடவிட்டு படுக்குமாறு கூறினான்..
அவன் அடுத்த ரூமில் படுக்க , இருவரும் அவரது மாற்றத்தை எண்ணி தூக்கத்தை தொலைத்தனர்..
கவின் ,'எப்படி நான் இப்படி மாறினேன்னு எனக்கு ஆச்சர்யம்தான்.. இன்னிக்கு முழுவதும் நான் சிகரெட் பிடிக்கல , தண்ணி அடிக்கல , எதுவுமே பண்ணவில்லை .. அவ மட்டும் தான் என்னோட நினைப்புல இருக்கா .. என்னை மாறி பணத்தால் பாதிக்கப்பட்டு ரொம்ப கொடுமை அனுபவிச்சுஇருக்கா .. அவளுக்கு ஒரு நல்ல லைப் அமைச்சு தரணும் ..' என்று அவளை நினைத்தபடியே உறங்கிவிட்டான்..
ஜோதி ,' இன்னைக்குத்தான் நான் சுதந்திரமா உணருறேன்.. கவின் நல்லவனா கெட்டவனா , எதுவுமே தெரியாது.. எப்படி அவனை நான் நம்புனேன்.. அவன்கூட வெளில வந்துஇருக்கேன்.. இன்னிக்கு நான் நல்ல சாப்பிட்டு தூங்குனேன்.. ஒருவேளை அவன் சொல்லுறமாறி , கடவுள் எனக்கு மறுபடியும் வாழ வாய்ப்பு குடுத்துஇருக்காரோ ? ஒன்னும் புரியல ..இன்னும் கடவுள் என்ன எழுதியிருக்காரோ?எல்லாம் நன்மைக்கேனு நினைப்போம். ' என்று அவனது நினைப்பில் உருண்டு புரண்டு கொண்டு இருந்தாள்..
நினைவெல்லாம் நீயே - பகுதி 5
Reviewed by SaraThas
on
December 08, 2018
Rating:

No comments: