SaraThas Blog

தலை குனிந்து என்னை பார் ,தலை நிமிர வைக்கிறேன் - புத்தகம்

நினைவெல்லாம் நீயே - பகுதி 4


கவின்- ஜோதி

அவள் அருகிலேயே நான் படுத்து உறங்கிவிட்டேன்.. காலை எழுந்து அவளை பார்க்க பாவமாக இருந்தது .. மீண்டும் உடைகளை அணிவித்து விட்டு , அவளை எழுப்பினேன்..
அவள் மலங்க விழித்துவிட்டு , என்னை பார்த்து பயந்தாள் ..
"பயப்படாதே .. உன்னோட பேர் என்ன "
"ஜோ ..ஜோ...ஜோதி "...........
ஜோதி POV :
அவனை பார்க்கவே பயமாக இருந்தது .. எனக்கு யாரையுமே பார்க்க பிடிக்கவில்லை ..அழுகையாக வந்தது.. நான் எதுக்கு இந்த உலகத்துல இருக்கணும். சாக போனவளை காப்பாத்தி இங்க கூட்டிட்டுவந்து மறுபடியும் என்ன அணுவணுவா கொல்லுறாங்க..கடவுளே இன்னும் எவ்ளோ நாளைக்கு நான் இதெல்லாம் சகிச்சுக்கிட்டு வாழனும்.. நினைத்துக்கொண்டு இருக்கையில் அவனது குரல் என்னை தடுத்தது..
"நான் நைட் போதைல என்ன ஆச்சுன்னு தெரில தூங்கிட்டேன்.. இப்போ ஒன்னும் கெட்டுபோகுல , இன்னொரு தடவை கம்பெனி கொடு .. இருமடங்காக பணம் குடுக்க சொல்லுகிறேன்" என்று கூறி எனது முகத்தை பார்த்தான்..
எனக்கு அவன் பேச்சு அருவருப்பாக இருந்தது.. எதிர்த்து பேசவும் முடியாமல் எனது கண்கள் கண்ணீரை சுரந்தது..அது அவனுக்கு கோவத்தை கிளறியிருக்க வேண்டும் ..கையைஎடுத்துவிட்டு ,
"சும்மா அழுதுகிட்டு இருக்காதா , இஷ்டம் இல்லாத பொண்ணுகளை நான் தொடமாட்டேன் .. "
அவன் அவ்வாறு கூறியது , மனதிற்கு கொஞ்சம் இதமளித்தது..யாருடைய கருவையோ சுமந்துகொண்டு இருந்தவள் ,அவன் கூறிய வார்த்தைகள் என்னை மனம் நோக செய்தாலும் உண்மையை உணர்த்தியது..ஆனாலும் எனது கண்கள் கண்ணீரை குத்தகைக்கு எடுத்ததுபோல , அழுதுகொண்டே இருந்தேன்..
அவனுக்கு கோவம் வந்து , அருகில் உள்ள பூந்தொட்டியை எடுத்து உடைத்தான்.. எனக்கு இன்னும் பயம் அதிகம் ஆகி பெட் நுனி மீது இருந்த நான் பின்னால் நகர , கீழே விழப்போனேன்.. எனது கைகள் காற்றில் ஆட பிடிமானத்திற்கு எதையாவது தேட இருகைகள் என்னை விழாமல் பிடித்துக்கொண்டது..
அவனுக்கு நன்றி கூற வாய் முயற்சித்தது.. ஆனால் வார்த்தை வெளிவரவில்லை.. அவனே மீண்டும் ," ஜோதி .. யார் நீ ? எப்படி இங்க வந்த ?எதுக்கு இப்படி இருக்க எதாவது சொல்லு " என்று பொறுமையாக கேட்டான்..
அவன் பொறுமையாக பேச , எனக்கு இருந்த பயம் கொஞ்சம் குறைய ஆரம்பித்தது..
இதுவரை யாரும் என்னிடம் இவ்ளோ பொறுமையாக பேசியதில்லை.. வேலை செய்வதற்காக என்னை அழைப்பார்கள் .. திட்டுவார்கள்.. என்கிட்ட என்னை பத்தி முதல்முறையா ஒருத்தவங்க
கேக்குறாங்க அதுக்கு மகிழ்ச்சியடைவதா ? கேட்டதும் என்னை என்ன செய்வார் என்று பயப்படுவதா ? இப்படி யோசிச்சுட்டு, இதுவரைக்கும் யாரும் கேட்டதில்லை .. இவர் கேட்குறாரு சொல்லுவோம்.. எப்படியும் சாக போறோம் .. போறதுக்கு முன்னாடி இவர்கிட்ட எல்லாத்தையும் கொட்டிட்டு போவோம்.. என்று கூற தொடங்கினாள்.. சிறு வயதிலிருந்து தான் பட்ட கஷ்டங்களை சொல்ல தொடங்கினேன்..
தீடிரென்று , கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது.நான் திரும்ப , அதில் உள்ள ஒரு சிறுபாகம் எனது தலையை தாக்கியது .. ரத்தம் வர ,அதை பொருட்படுத்தாது அவரை பார்த்தேன்..
கவின் POV :
அவள் என்னை பார்த்து பயப்படுறா .. எதுக்கு நைட் என்ன நடந்துச்சுனு வேற தெரியலையே ..சரி நாமளே பேசுவோம் ..அவ முகத்தை என்னோட கைல பிடிச்சு அவளை நிமிர்த்தி ,
"நான் நைட் போதைல என்ன ஆச்சுன்னு தெரில தூங்கிட்டேன்.. இப்போ ஒன்னும் கெட்டுபோகுல , இன்னொரு தடவை கம்பெனி கொடு .. இருமடங்காக பணம் குடுக்க சொல்லுகிறேன்" என்று அவளை பார்க்க அவள் பார்த்த பார்வை , என்ன எதோ பண்ணுது ..
எப்படி விவரிக்கறதுன்னு தெரியல .. அவ பார்வைல ஒரு அருவருப்பு , என்ன அவ்ளோ மட்டமா நெனச்சுட்டியா , ஒரே செகண்ட்ல பயமா மாறிடுச்சு..
எனக்கு அதை பார்த்ததும் என்னோட நெஞ்சுல யாரோ அடிச்சமாறி இருந்துச்சு..
எவ்ளோ தடவை இந்த விக்கி கிட்ட சொல்லுறது .. எனக்கு இஷ்டமில்லாத பொண்ணுகளை கூட்டிட்டு வராதேன்னு ..அவன் கேக்குறதேயில்லை ..கோவத்துல அவகிட்ட ,
"சும்மா அழுதுகிட்டு இருக்காதா , இஷ்டம் இல்லாத பொண்ணுகளை நான் தொடமாட்டேன் .. "கத்திவிட்டு , பார்க்க , திருப்பியும் அழுதுகிட்டே இருக்க, பூந்தொட்டியை எடுத்து உடைத்துவிட்டு அவளை பார்த்தேன்.
அந்த சத்தம் கேட்டு பின்னால் விழ போனவளை பிடித்து உட்கார வைத்து பொறுமையாக அவளிடம் கேட்டேன் யாருன்னு .. அவளும் யோசிச்சுட்டு என்கிட்ட சொல்ல ஆரம்பிச்சா..
அவளோட சின்ன வயசிலேர்ந்து அவ சொன்னதை கேட்க கேட்க எனது இதயம் ரத்தக்கண்ணீர் வடித்தது..பணத்திற்காக இப்படி எல்லாம் கொடுமைப்படுத்துவங்களா .. இவளும் என்ன மாறி பணத்தால் பாதிக்கப்பட்டவள் என்று அவளுக்காக எனது மனம் ஊமையை அழத்தொடங்கியது.
அடிமை சின்னம் பொறித்ததை சொன்னதும் கோபத்தில் , அருகில் உள்ள கண்ணாடி டேபிளை உடைக்க , அவள் மீது கண்ணாடி பட்டு ரத்தம் வந்தது..
அவளை என்னை நோக்கி ஓடிவந்து , எனது கைகளுக்கு அவளிடமிருந்த துணிமூலம் கட்டுப்போட்டாள்.. அப்போதுதான் நான்உணர்ந்தேன் எனது கைகளில் இருந்து ரத்தம் சொட்டுவதை..
அவளுடைய காயத்திற்கு நான் மருந்து எடுத்துத்தர இருவருக்கும் போட்டுவிட்டாள்..
நான் பார்த்ததிலே மிகவும் வித்தியாசமான பெண்ணாக இருந்தாள்.. என்னை யாருன்னே தெரியாது , எனக்கு அடிபட்டதும் ஓடிவந்து மருந்து போட்டுவிட்டாள்..அவளுக்கு நான் என்ன செய்ய , என்னைப்போல் பாதிக்கப்பட்டவள் ஆச்சே.. என்னைப்போல அல்ல .. என்னைவிட அதிகமாக உடலாலும் மனதாலும் துன்பத்திற்கு தள்ளப்பட்டவள்..


அவளுக்கு எதாவது செய்யணும் என்று எண்ணி அவளிடமே கேட்க தொடங்கினேன்...

நினைவெல்லாம் நீயே - பகுதி 4 நினைவெல்லாம் நீயே - பகுதி 4 Reviewed by SaraThas on December 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.