"அப்பா ,மணி எப்போ வர்ரான் ?அவன் இந்த வீக் வரேன்னு சொன்னான்.. வந்த உடனே நீங்க போய் அருண் வீட்டுல பேசுங்க" என்று அவரிடம் தகவலை சொல்லிவிட்டு அவளது ரூமில் அடைந்து கொண்டாள்..
என்ன இவ இப்படி சொல்லிட்டு போற என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவருக்கு மணியிடமிருந்து அழைப்பு வந்தது.. மது கூறியதை சொல்லிவிட்டு இன்றே வரும்படி கூறினார்.
வளர்மதிக்கு ( அருண் அம்மா ) போன் செய்து மணி இன்னிக்கே வந்துடுவான் , நீங்க எப்போ பொண்ணு பார்க்கவரீங்க என்று விசாரித்து விட்டு வைத்தார்..
மதுவிடம் சென்று " மணி மும்பைல தான் இருக்கான் .. சொன்னதும் இன்னிக்கே வந்துடுவான்.. அவங்க வீட்டிலேயும் சொல்லிட்டேன் .. அவங்க இன்னிக்கே வரேன்னு சொல்லிட்டாங்க.. ஆனால் . " என்று இழுக்க ,
"என்னப்பா ?"
" மணி 10 நாள்ல யூ .ஸ் போறான் .. அப்புறம் அவன் வருவதற்கு 2 வருஷம் ஆகிடும் .. இப்போ உடனே கல்யாணம் பண்ண அவங்க சம்மதிப்பாங்களா "
"கண்டிப்பா சம்மதிப்பாங்க .. இல்லேன்னா நீங்க சம்மதிக்க வைப்பீங்க 😈😈😈 ..
சீக்கிரம் அவன் வீட்டுக்குள்ள நான் போகணும் .. "
"சரிம்மா .." என்று மணியை அழைத்து விஷயத்தை கூறிவிட்டு சிரித்துக்கொண்டே ," நீ எவ்ளோ சீக்கிரம் அங்க போறியா அவ்ளோ நல்லது எங்களுக்கு.. பாவம் உனக்கு அவ்ளோ கெட்டது " என்று நினைத்துவிட்டு மாலை அவர்கள் வருவதற்க்கு தேவையான ஏற்பாடுகளை கவனிக்க தொடங்கனார்..
" அருண் ..."
"என்னமா "
"கிளம்பி இரு .. இன்னிக்கு நாம மது வீட்டுக்கு போய் எல்லாம் பேசிமுடிச்சுடலாம்.. போறப்போ நான் ஜோசியரையும் கூட்டிட்டு போலாம் .. இன்னிக்கே நல்ல நாளு பாத்துடுவோம் " என்று கூற , அவன் அவர்களை கட்டிப்பிடித்து முத்தம் குடுத்தான்..
"சூப்பர்மா 😘😘😘😘.. "
வேகமாக அவனது ரூமிற்கு சென்று , அவளது
புகைப்படத்தை பார்த்துக்கொண்டே ," செல்லம் இன்னும் கொஞ்சநாள் தான்.. அப்றம் நீ இங்க வந்துடுவ .. எப்பவும் என்கூடவே இருப்ப .. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடி ....."
அவளுக்கு அழைப்பு விடுக்க , முதல் ரிங்கிலியே எடுத்தவள் ,பேசாமல் அமைதியாய் இருக்க .
" பொண்டாட்டி .. வெக்கமா ?.. இப்போகூட உன்னோடதான் பேசிட்டு இருந்தேன் .. எனக்கு உன்ன இப்போவே பார்க்கனும்போல இருக்குடி ..என்னோட மனசு உனக்காக தவிக்குதுடி .. இவ்ளோ நாள் இந்த மாறி நான் இருந்ததில்ல .. சத்தியமா எனக்கு என்ன பேசுறதுனே தெர்லடி ...எதாவது பேசுடி "
அங்கே அவள் அழுதுகொண்டே ஏதும் பேசாமல் போனை வைத்துவிட்டு அவனுக்கு மெசேஜ் செய்தாள்.. " எனக்கும் அதே பீலிங் என்று ..
இருவரும் ஒருவாறு பேசிக்கொண்டே மாலைக்கு தேவையான உடைகளை தேர்ந்தெடுக்க அருணின் மனது மிக சந்தோசமாக இருந்தது..ஆனால் மதுவின் மனமோ அனல்போல கொதித்துக்கொண்டு இருந்தது..
இருவரது மனமும் அவர்கள் காதல்/மோதல் நினைவுகளை அசைபோட்டது ..( அத நாம அடுத்த பகுதியில பார்ப்போம் )
****************************************************************
"மதி ..மதிதி தி ..தீ தீ ..................." என்று அவனது தொண்டை கிளியும் வரை கத்தினான் ஆதி ..
"டேய் எரும ,. எதுக்குடா இப்படி கத்துற கழுதை மாறி "..
😂😂🤣🤣🤣🤣... உன்ன நீயே கழுதை னு சொல்லுறியே என்று மீண்டும் சிரிக்க தொடங்க .. மதி பத்ரகாளியாய் அவனை முறைக்க தொடங்கினாள்..
கையில் வைத்துஇருந்த பூரிக்கட்டையாலே அவனை அடிக்க கை ஓங்க , அவன் அதற்குள் எஸ்கேப் ஆகிவிட்டான்..
அவள் போய் சமையலறைக்கு சென்று உம்மென்று அவனுக்கு பூரியை தேய்க்க தொடங்கினாள்..
அவன் அருகே வந்து , "மதிமா ..🙄🙄🙄🙄🙄 " என்று அவளை தொட , அதை தட்டிவிட்டு வேலைகளை பார்க்க தொடங்கினாள்..
"ஹையோயோ கோவிச்சுக்கிட்டாலே .. எப்படி சமாதானப்படுத்துவேன் .. லைட்-ஆன கோபம்னா அவளே சமாதானம் ஆகிடுவா .. நாமளே போய் மாட்டிக்க வேணாம் .. கொஞ்சம் பொறுத்துஇருந்து பார்ப்போம் .."என்று நினைத்துக்கொண்டு பேசாமல் அமைதியாக உட்கார்ந்து அவளை சைட் அடிக்க தொடங்கினான்..
அவளோ 'எரும, கோவமா இருக்கேன்னு தெரியுதுல , வந்து சமாதானப்படுத்துறானான்னு பாரு .. எப்படி உட்கார்ந்து இருக்கான்..' என்று திட்டிக்கொண்டே வேலைகளை பார்க்க ,
அவனோ ,' எப்பவும் சமாதானப்படுத்துறவன் இப்போ பேசாம இருக்கானேனு கொஞ்சமாவது திரும்பி பாக்குறளால .. சரியான குறத்தி இவ ' என்று மீண்டும் அவனது வேலையை ஆரம்பித்தான்( அதாங்க சைட் அடிக்குறது )
சமையல் முடித்துவிட்டு அவளுக்கு மட்டும் தட்டில் போட்டுகொண்டு வந்து அவனது மடிமீது உட்கார்ந்து முறைத்துக்கொண்டு இருக்க , அவன் சிரித்துக்கொண்டே அவளுக்கு ஊட்ட தொடங்கினான். ஒவ்வொரு முறையும் அவன் ஊட்ட கோவத்தின் அளவை பொறுத்து அவன் கைகளை கடிப்பாள்.
"செல்லக்குட்டி .., முன்ன இருந்ததுக்கு இப்போ என்னோட விரல் ரொம்ப குட்டையா இருக்குடி ..இனிமேல் கடிக்காதடி .. ப்ளீஸ் டி அம்மு " என்று கொஞ்ச , அவள் மொறைத்துகொன்டே மீண்டும் நன்றாக கடித்துவைத்தாள்.
'நீ இப்படி கடிக்குறதுகூட எனக்கு பிடிச்சுயிருக்குடி .. பட் என்ன விரல் நீளம்தான் குறையுது ' என்று நினைத்துக்கொண்டு அவளது கோவம் தீர்ந்ததென எண்ணி அவளை தூக்கிக்கொண்டு அவனது ரூமிற்கு சென்று அவளை படுக்க வைக்க , இன்னுமும் கோவமா இருக்களோ என்று நினைத்து தனது வேலைகளை ஆரம்பித்தான் ..
அவளது இடையை மெதுவாக அழுத்த அவள் வேண்டுமென்றே தனது பல்லை கடித்துக்கொண்டு சிரிக்காமல் இருக்க ,'லேசான கோவம்னு நெனைச்சேனே ' என்று அவளை பார்த்து ," செல்லம் நீ இப்படி சிரிச்ச மாமா பாவம்டி .சிரிக்காத சிரிக்காத ' என்று அவளை கிச்சுகிச்சு மூட்ட , சிரித்துக்கொண்டே எழுந்து அவனை கட்டிக்கொண்டாள் .. விளக்கை அணைத்துவிட்டு இருவரும் ஒருவரில் மூழ்க ,அங்கே நிலவு மேகங்களினிடையே ஒளிந்து கொண்டு அவர்களது தனிமையை கெடுக்காமல் சென்றது.. ( நாமும் ஓடிபோய்ட்டு🙈🙈🙈 காலைல வருவோம்...
இரவினை தேடும் விடியல் போல... அவர்களது காதல் வளர்ந்துகொண்டே இருந்தது
💕💕 நீயே என் இதயமடி -4 💕💕
Reviewed by SaraThas
on
December 14, 2018
Rating:

No comments: