அருணும் மதுவும் தத்தமது நினைவில் மூழ்கியிருந்தனர் .. இருவரும் அவர்கள் சந்தித்த நிகழ்வை நினைத்து கொண்டு இருந்தனர் . நாமும் அங்கே சென்று அவர்களது காதல் கதையை காண்போம் ..
ஆறு மாதங்களுக்கு முன் ..
காலை நேரம் அந்த அலுவலகமே பரபரப்பாக இயங்கிகொண்டுஇருந்தது. மேனேஜிங் டைரக்டர் அறையினை மானேஜரை மீண்டும் ஒருமுறை செக் செய்துவிட்டு தனது புதிய முதலாளியை வரவேற்க ரெடியாகினார்.
தனது அழுத்தமான காலடிகள் மூலம் , அவன் வந்ததை உணர்த்த , மேனேஜர் மற்றும் அந்த அலுவலகத்தில் உள்ள அனைவரும் அவனுக்கு வாழ்த்து கூறி அவர்களது வேலையை பார்க்க சென்றனர்.
அவனுக்கு இந்த அலுவலகம் பற்றி அனைத்தும் தெரியும். அதனால் அன்றைய மீட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்று புதிய ப்ராஜெக்ட் பற்றி நடக்கும் டிஸ்கஷன் -இல் கலந்து கொண்டான். ( வேற யாரு நம்ம ஹீரோ தான் )...
அவனது போன் ஒலிக்க , புதிய நம்பரை பார்த்தவன் அட்டென்ட் செய்யாமல் இருக்க , மீண்டும் மீண்டும் அழைப்பு வந்தது.. யாரது என்று கடுப்புடன் எடுக்க , அவன் ஹலோ சொல்வதற்கு முன் ,ஒரு பெண்குரல் ," டேய் எருமைமாடு .. என்னடா பண்ணிட்டு இருக்க .. உனக்காக எவ்ளோ நேரம்டா வெயிட் பண்றது " என்று கத்திகொண்டே இருந்தாள் மது ( நம்ம ஹீரோயின் தான் )..
"யார .. உன்னோட பொண்டாட்டி .. எரும .. ஒழுங்கா காமெடி பண்ணாம வந்து சேறு .. எனக்கு ஆபீஸ்க்கு நேரம் ஆச்சு " என்று மீண்டும் திட்டிவிட்டு அவனுக்கு பேச இடம் கொடுக்காமல் செய்தாள்..
அவனும் எரிச்சலுற்று , வெளியே செல்ல , காலைவைத்து அவனை விழுக்காட்ட , மது அவனை தாங்கி பிடித்தாள்..
இருவரது கண்ணும் ஒருவரை ஒருவர் பார்க்க , அவனது வெயிட் தாங்காமல் அவள் கீழேவிட , அவள்மீதே அவன் விழுந்தான் .. விழுகும்போதே சுதாரித்து தன்னுடைய வெயிட் முழுவதும் அவள் விழாமல் இருக்க தனது கைகளை ஊண்டி அவளை பார்த்தான் . அவளும் அவனை பார்க்க , ஒருவாறு சுதாரித்து இருவரும் விலகினார்கள். வந்த முதல்நாளே இப்படி என்று நினைத்துக்கொண்டு அவனது அறைக்கு செல்ல , அவளும் சிரித்துக்கொண்டே தனது வேலைகளை பார்க்க தொடங்கினாள். அங்கே இருந்த அனைவருக்கும் இவர்கள் ஏற்கனவே சந்தித்தவர்கள் என்று நினைத்து தங்களது வேலைகளை கவனிக்க தொடங்கினர்.
அவனுக்கு கோவம் ஏற, மீண்டும் மீண்டும் அவளை அழைக்க ,அவனை ரொம்ப நேரம் காக்க வைத்து காலை அட்டென்ட் செய்தாள்..
இப்போதும் அவள் ஹலோ கூறுவதுற்கு முன்பே மீண்டும் அவன் மேல கூறியவற்றை கத்திச்சொல்ல , அவள் அமைதியாக ," பேசி முடிச்சாச்சா " என்று கூலாக கேட்டாள்..
" எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க .. இப்போ நீங்க சொன்ன இந்த அருமையான விஷயத்தை நீங்க இன்னொருத்தருக்கு சொல்லணும்.. அதுக்கு முதல்ல நீங்க பக்கத்துல தண்ணி இருந்த எடுத்துகுடிங்க " என்று சொல்ல , எதிர்த்து பேசாமல், அவளது குரலுக்கு மயங்கியபடி ," தண்ணீரை குடித்துவிட்டு அமைதியாக இருக்க ,அவளோ " தண்ணி குடிக்க சொன்ன, குடிச்சுட்டேன் னு சொல்லணும் , இங்க ஒருத்தி வெயிட் பண்ணுறேன்ல " என்று அதட்டி கூற , அவனோ ," ரொம்ப ஓவர் ஆஹ் பேசுற " ,
" நீங்க பேசுனத விடவா , சரி போய் கண்ணாடி முன்னாடி நில்லுங்க "
"எதுக்கு "
"உங்க கண்ணாடி வழியா பாத்து சைட் அடிக்கத்தான் , போய் நில்லுங்க " என்று மது கூற , அவனும் தனது பாத்ரூமில் உள்ள ஆளுயர கண்ணாடியின் முன் நின்று ," சொல்லு , அங்க கண்ணாடியில் ஒருத்தவங்க தெரிவாங்க , அவங்ககிட்ட நீங்க என்கிட்ட சொன்ன எல்லாத்தையும் சொல்லுங்க . எனக்கு வேலை இருக்கு " என்று கூறி கட் செய்து விட்டாள்..
அவனும் அதை சொல்லிப்பார்க்க, நம்ம பேசுனத நமக்கே திருப்பி பேசவச்சுட்டாளே வாயாடி .. என்று கண்ணாடியை பார்த்து சிரிக்க, கோவத்தோட இருந்தேன் .. நீ கோவத்தை காமிக்காம என்ன கூல் பண்ணிட்டா.. என சிரித்துக்கொண்டே அவனது வேலைகளை பார்க்க தொடங்கினான்..
ஏனோ அந்த முகம் தெரியாத பெண்ணின் மீது அவனுக்கு ஈர்ப்பு எழுந்தது..
மதுவோ , இந்நேரம் என்ன பத்திதான் நீ யோசிச்சுட்டு இருப்பனு எனக்கு தெரியும்.. உன்ன பத்தி எல்லா டேட்டாவையும் கலெக்ட் பண்ணிட்டுதான் நான் இங்க வந்தேன்.. இன்னும் 30 நாள் இருக்கு அதுக்குள்ள உன்னோட லவ் ஆஹ் சொல்லவைக்குறேன்..என நினைத்துக்கொண்டு அவளது வேலைகளை பார்க்க தொடங்கினாள் ..
யாரா இருக்கும் , ஒருவேளை நமக்கு தெரிஞ்சவங்க யாராவது கிண்டல் பண்ணுறாங்களோ என அவன் ஒருபுறம் யோசித்துக்கொண்டு இருக்க , மறுபுறம் அவனது வேலை அவனை அழைத்துக்கொண்டு இருந்தது. கடமை தான் முக்கியம் என அவன் வேலையை செய்ய ஆரம்பித்தான்..
அருண் வீட்டிற்கு சென்று பிரெஷ் ஆக , " பர்ஸ்ட் டே ஆபீஸ் எப்படி போச்சு "
" அத ஏம்மா கேக்குறீங்க " என்று நடந்தவற்றை கூற , வளர்மதிதேவி விழுந்து விழுந்து சிரித்தார்.. ரொம்ப நல்லப்பொண்ணு டா ,நீதான் புருஷன் சொல்லுற , ஒருவேளை எனக்கு தெரியாம கல்யாணம் பண்ணிகிட்டியோ " என்று சந்தேகமாக பார்வை பார்த்து கேட்க ,
"அம்மா நீங்களுமா " என்று கை எடுத்துகும்பிட்டுவிட்டு தனது ரூமிற்கு சென்றான். அவளது பேச்சு மீண்டும் ஞாபகம் வர , சிரித்துக்கொண்டே தூங்கினான்.
மறுநாள் , ஆஃபிஸில் அருண் வேலை பார்த்துக்கொண்டு இருக்க , மீண்டும் அதே நேரத்தில் போன் கால் வர , அட்டென்ட் செய்தவன் , அவள் பேசுவதை கேட்டு சிரிக்க தொடங்கினான்..
நேற்று பேசியதுபோல் அவளும் பேச , இவன் பேசுவதற்குள் கால் கட் ஆனது. மீண்டும் அதே எண்ணிற்கு அருண் அழைக்க ,மது அட்டென்ட் செய்தாள்.
எதுவும் தெரியாதது போல , "ஹலோ , யாரு "
"மேடம் நீங்கதான் கால் பண்ணி என்னை திட்டுனீங்க ,உங்க நம்பர்ல இருந்துதான் கால் வந்தது " என்று பொறுமையாக கூறினான்.
"விளையாடுறீங்களா , நான் யாருக்கும் கால் பண்ணுல , நேத்தும் இதேமாறி தான் என்கிட்ட பேசுறீங்க " என்று அவள் கத்த ( கோவமா பேசுறங்கலாம் )
அவனும் கோவமாக திட்ட தொடங்கிவிட்டான். மது காலை கட் செய்துவிட்டு வேலைபார்க்க தொடங்கினாள். அவன் திருப்பியும் கால் செய்வானென்று எதிர்பார்க்க , அவனிடமிருந்து கால் மெசேஜ் எதுவுமில்லை.
எப்படி அவனை தனக்கு மீண்டும் பேசவைக்க என்று யோசிக்க தொடங்கினாள்..
அவனுக்கு மெசேஜ் செய்து , 'நான் மீட்டிங்கில் இருக்கேன் .. எதுனாலும் மெசேஜ் பண்ணுங்க ' என்று அவளே கான்வெர்சஷனை ஆரம்பித்து வைத்தாள்.
அவன் வேலை மும்மரத்தில் , போனை கவனிக்காமல் விட , அரைமணிநேரம் ஆகியும் ரிப்ளை வராததால் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தாள்.
வேற எப்படி அவன்கிட்ட பேசுறது .. நானா கால் பண்ணக்கூடாது என்று யோசிக்க தொடங்கினாள்..
சரியான சமயத்தில் அவளுடைய மேனேஜர் ( பர்ஸ்ட் பார்ட்ல வர சொட்டைத்தலை தான் ) ஒரு பைலை சரிபார்த்து அருணிடம் ஒப்படைக்க வேண்டும் கூறினார் . அவளும் இது சரியான சந்தர்ப்பம் என்று அவசரமாக வேலையை முடித்துக்கொண்டு அவனிடம் சென்று தனது வேலை திறமையை காண்பித்தாள்.
அருணும் பாராட்டிவிட்டு , சில கேள்விகளை கேட்க தொடங்கினான். இருவரும் அந்த கட்டிடம் கட்டும் இடத்தை பார்க்க செல்லவேண்டும் என்று அவளையும் அழைத்தான்.
கடவுளே நான் உன்ன கஷ்டப்படுத்தணும்னும் நெனைக்குறாரு போல அதான் எனக்கு ஹெல்ப் பண்ணுறாரு என்று சந்தோசமாக கிளம்ப தொடங்கினாள்.
அப்புறம் என்ன நடக்கும்னு அடுத்த பார்ட்ல பார்க்கலாம்
💕💕நீயே என் இதயமடி-5 💕💕
Reviewed by SaraThas
on
December 14, 2018
Rating:

No comments: