SaraThas Blog

தலை குனிந்து என்னை பார் ,தலை நிமிர வைக்கிறேன் - புத்தகம்

💕💕 நீயே என் இதயமடி-3 💕💕

" ஆதி எங்கடா இருக்க .., இதென்ன விளையாட்டு.. சின்ன புள்ள மாறி .." என்று தன்னுடைய கண்கட்டை அவிழ்க்காமல் அவனை தேடிக்கொண்டு இருந்தாள் மதி..
"கொஞ்சம் நேரம் அப்புடியே இருடி .." என்று அவளை சற்று முன்னாடி நடக்க வைத்து அவளது கண்களை அவிழ்த்துவிட்டான்..
அவள் கண்ணை திறந்ததும்😱😱 , ஆனந்த கண்ணீரில்😂😂😂 அவனை இருக்க கட்டிக்கொண்டாள்..
அவனை இருக்க கட்டிக்கொண்டு முத்தமழை பொழிந்தாள்😘😘😘😘😘😘😘😘😘..
ஆதியும் அவளது முத்தத்தில் திளைத்துஇருக்க , அவளை இறுக்கி கட்டிக்கொண்டான்..
ஒருவாறு இருவரும் ஒருவரது முகத்தை பார்க்க ," எப்படிடா இப்படியெல்லாம் எனக்கு பிடிச்சமாறி எல்லாமே பண்ணியிருக்க .."
"நீ என்கிட்ட எதையும் மறைக்க முடியாது , உனக்கு பிடிச்சது பிடிக்காதது இது எல்லாமே எனக்கு தெரியும்.. நீ சொல்லாவிட்டாலும் நான் உன்னோட முகத்தைப்பார்த்தே கண்டுபிடிச்சுடுவேன். ஏன்னா ஐயா அவ்ளோ ஜீனியஸ் "
"டேய் களிமண்ணு தலையா , என்மேல லவ் னு சொன்ன கூட நான் நம்பியிருப்பேன் .. இப்படி சொன்ன நான் நம்பணுமாக்கும்..உனக்கு தலைல மூளைன்னு ஒன்ன ஆண்டவன் வச்சு படைக்கவே இல்லை. இதுல நீ ஜீனியஸ் னு சொல்ற .. காலக்கொடுமை😧😧 ..ஈஸ்வர இதையெல்லாம் என்ன கேக்கவச்சுட்டியே😫😩😩😣." என்று புலம்பினாள் மதி ..
(அப்படி அவன் என்ன பண்ணியிருப்பானு நாம இன்னொரு பார்ட் ல பார்க்கலாம் ...)
அவன் முறைத்துக்கொண்டு, அவளை தூக்கி தட்டாமாலை சுத்தி கீழேஇறக்கிவிட , அவள் தலை சுற்றிக்கொண்டே அவனை பிடிக்க, " மதிம்மா .., எப்பவும் உன்னோட கஷ்டத்துல நீ என்னைத்தான் முதல்ல கூப்பிடனும். வேற யாரும் உன்ன கஷ்டப்படுத்தவிடமாட்டேன்.. பட் இந்தமாறி தலைசுத்தல் , வாமிட் ,பிபி ,சுகர் என எல்லா வியாதியும் உனக்கு வரும் .. அப்போ நான் அப்றம் என்னோட வைப் ரெண்டு பேரும் சேர்ந்து உன்ன கடைசிவரை பத்திரமா பாத்துக்குவோம்.. ஓகே ஆஹ் டி .." என்று கேட்க ..
" எனக்கு ஓகே தான் .. பட் உன்னோட வைப் பெட்ல படுத்துட்டா , யார்கூட வச்சு ஹெல்ப் பண்ணுவ " என்று அவனை பார்த்துக்கொண்டே கேட்க ..
"அதுக்கெல்லாம் ஆள் ரெடியா இருக்குடி ..நான் ம்ம் சொன்ன போதும் கியூ ல வந்து நிப்பாங்க .." என்று சட்டை காலரை தூக்கிவிட்டு மதியை பார்க்க அங்கே அவள் இல்லை..
*****************************************************************************
என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும்
நசுங்குற அளவுக்கு இறுக்கி நா புடிக்கணும்
நான் கண்ணா தொரக்கையில் உன் முகம் தெரியணும்
உசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும்
என்று பாடல் பாடிக்கொண்டு இருக்க , அருண் சோம்பல் முறித்து எழுந்தான்.. (அலாரம் டோன் தான் அது )...
எழுந்து மொபைலை எடுத்து அவளது வால்பபேரை பார்த்து சிரித்துக்கொண்டே மதுவிற்கு கால் பண்ணினான்.
"ஹ .. ஹலோ ..." என்று தூக்கத்தில் பதிலளிக்க ,
" 😘😘😘😘😘😘 பொண்டாட்டி , எழுந்திரிடி ... மணி என்னாச்சுன்னு பார்த்தியா "
"ம்ம்ம்ம்ம்ம்ம் ... பார்க்கல ..😴😴😴" என்று அவள் தூங்க
"மது , நாம ஒரு முக்கியமான இடத்திற்கு போகணும் .. கெளம்புடி செல்லம் " என்று அவளை கொஞ்சி எழுப்பி விட்டான் ..
முக்கியமான இடம் என்று சொன்னதும் மது வெடுக்கென்று எழுந்து அமர்ந்து " சரி , 10.30 க்கு வந்து பிக்கப்பண்ணிக்கோ " என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டு அவனது போட்டோவை வைத்து அழுதுகொண்டு இருந்தாள்..
"உன்ன கொன்னுட்டு , அதே இடத்திற்கு என்ன கூட்டிட்டு போறான் அவன் .. அவனை நான் சும்மா விடமாட்டேன்.. அவன் துடிக்கணும் .. நீ எப்படி என் கண் முன்னாடி துடிச்சு துடிச்சு உன்ன நீயே கொல்ல பார்த்தியோ .. அதே மாறி அவனும் துடிக்கணும்.. அவன் சாகவும் முடியாம வாழவும் முடியாம வாழ்க்கையே நரகம் ஆகணும்..நான் கண்டிப்பா இத பண்ணுவேன் ..இது உன்மேல சத்தியம் ' என்று அந்த போட்டோமேல் சத்தியம் செய்து கிளம்ப தொடங்கினாள்..
தனசேகர் ," அம்மாடி .. நீ கண்டிப்பா அங்க போகணுமா .. " என்று கவலையுடன் கேட்க ,
"ஆமாப்பா .. போயே ஆகணும்.. கவலைப்படாதீங்க .. எனக்கு ஒன்னும் ஆகாது " என்று கூறிக்கொண்டே கிளம்பி வெளியே சென்றாள்.. அங்கே அருண் காத்துகொண்டு இருந்தான்..
இருவரும் பைக்கில் ஏறி தனசேகருக்கு பை சொல்லிவிட்டு குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர்..
அங்கே சென்று இருவரும் கூடியிருந்த 1000கணக்கான மக்களுடன் மௌன அஞ்சலி செலுத்த , மது கண்ணீரில் அழுதுகொண்டே மயக்கம் போட்டு விழுந்தாள்.. அருண் அவளை தாங்கி பிடித்துக்கொண்டே அவளது கண்ணீரை துடைத்து அவளை மயக்கம் தெளிய வைத்தான்..
மயக்கம் தெளிந்தவள் , அருணை கட்டிக்கொண்டு அழுக ஆரம்பித்தாள்.. அவளது முதுகை தடவிட்டு ," விடுமா அவங்க விதி அவ்ளோதான் .." என்று அவளை சமாதானப்படுத்தினான்..
(மது மைண்ட் வாய்ஸ் : அவனை கொன்னதே நீ தானே டா .. உன்ன பழிவாங்க நான் என்ன வேணாலும் செய்வேன் 😡😡😡)
இருவரும் ஏதும் பேசாமல் இருக்க , மது தனது பையில் இருந்து வாட்டர் பாட்டிலை எடுத்து அவனிடம் குடுத்தாள்.. இன்னொரு பாட்டிலை எடுத்துக்கொண்டு
அவள் நீர் அருந்த ஆரம்பித்தாள்..
(மது மைண்ட் வாய்ஸ் : குடிடா .. என் கையால நீ குடிக்குற தண்ணி கூட விஷம் தான் உனக்கு😡😡 )
அவளை வீட்டில் விட்டுட்டு அவன் வேலை விஷயமாக வெளியே சென்றான்..
-----------------------------------------------------------------------------------------------------------------
மதியை காணாமல் ஆதி அங்கே தேடி அலைந்து கொண்டு இருந்தான்.. பின்னால் இருந்து மதி அவனை கட்டிப்பிடித்து முத்தம் தர , " நான் உன்னோட பொண்டாட்டி .. வேற எவளாவது வந்த அவள ஒன்னும் பண்ணமாட்டேன் .. உன்ன கொன்னுடுவேன் 😈😠 " என்று மீண்டும் முத்தம் தர ..
அவன் " உன்ன விட்டுட்டு வேற ஒருத்திய இந்த உடம்பும் சரி மனசும் சரி பார்க்காது டி " என்று அவளது முத்தத்திற்கு பதில் தர தொடங்கினான்..
ஒருவழியா அவர்களது முத்தச்சண்டை முடிந்ததும் ," எனக்காக எனக்கு பிடிச்சதெல்லாம் பண்ணிருக்க .. உன்னமாரி ஒருத்தன் எனக்கு புருஷனா வரதுக்கு நான் ரொம்ப குடுத்துவச்சுஇருக்கணும் " என்று கூற , அவன் " சேம் டிட்டோ போட்டுகோடி , திருப்பி எல்லாம் சொல்ல முடியாது என்னால " என்று அவளை அணைத்துக்கொண்டு அந்த அழகான காட்சியை பார்க்கத்தொடங்கினார்கள்..

💕💕 நீயே என் இதயமடி-3 💕💕 💕💕 நீயே என் இதயமடி-3 💕💕 Reviewed by SaraThas on December 12, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.