அருணும் மதுவும் வேலைகளை முடித்துக்கொண்டு சைட் பார்க்க சென்றனர். இருவரும் ஒரே காரில் செல்லும்போது தனது மொபைலை கவனித்த அருண் , அந்த வாயாடி கு ரிப்ளை செய்ய தொடங்கினான்..
அருண் : நாங்க மட்டும் என்ன வெட்டியவா இருக்கோம் என்று அவன் கிளிக் செய்ய , மதுவின் மொபைலில் மெசேஜ் டோன் அடித்தது.
இப்போவே ரிப்ளை பண்ணுன கண்டுபிடிச்சுடுவானோ , என எண்ணிக்கொண்டு அவளது மொபைலின் மெசேஜ் டோனை சைலன்ட் மோடிற்கு மாத்தினாள் ..
சிறிது நேரம் கழித்து அவனுக்கு ரிப்ளை செய்தாள்.
மது : வெட்டியா இருக்கியா இல்ல பிஸியா இருக்கியான்னு என்னக்கு எப்படி தெரியும். நீங்களா கால் பண்ணிட்டே இருந்தீங்க..
இருவரும் சைட்டிற்கு சென்று அங்கே உள்ளவற்றை ஆராய்ந்து கொண்டு இருக்க , தீடிரென ஒரு கல் அருணின் தலையை பதம் பார்க்க வந்தது, அவனை தடுத்து மது நிற்க அந்த கல் அவள் மீது பட்டு ரத்தம் அங்கேயே மயங்கி விழுகிறாள்.
அவள் விழுவதற்கு முன் , அவளை தங்கி பிடித்துக்கொண்டு தனது கைக்குட்டையை எடுத்து ரத்தம் வரும் இடத்தில வைத்து முதலுதவிகளை செய்தான் அருண்..
அருண் மது இருவரும் வேலை விஷயமாக நேரில் பேசிக்கொள்வதால் , ஒரு நட்பு அவர்களுக்குள் இழையோடியது.
அதேபோல் அருண் - முகமறியா பெண் ( மது னு நமக்கு மட்டும் தான் தெரியும் ) அவர்களுக்குள்ளும் நட்பு மீறிய அன்பு வளர்ந்துகொண்டே போனது மதுவின் பிளான்படி..
இருவரும் ஒருவரை ஒருவர் வாரிக்கொள்ளவர்கள். சின்ன சின்ன சந்தோசங்கள் , இரவு அவன் வந்து மெசேஜ் அனுப்பும்வரை அவள் காத்துஇருப்பது , உரிமையாக அவனை திட்டுவது , உடம்பு சரி இல்லை என்றால் ஒரு மணிக்கு ஒருமுறை அழைத்து நலம் விசாரிப்பது என்று அவர்கள் அன்பு (காதல்) வளர்ந்துகொண்டே இருந்தது.
மறந்தும் இருவரும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை . ஏனோ அவர்களுக்கும் அது முக்கியமில்லை என்பது போல அவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர். ஒருநாள் அவள் பேசாமல் இருந்தால் , அவனால் எதையோ இழந்தது போல் தவித்துக்கொண்டு இருந்தான்.
அவனது தவிப்பை ஆஃபிஸில் பார்த்து திருப்திபட்டுக்கொள்வாள். அவனது இந்த நடவடிக்கைகள் யாருக்கும் தெரியாமல் இல்லை. வளர்மதி அவனிடம் எதோ மாற்றம் இருப்பதாய் உணர்ந்தார் . வேலை பளுவின் காரணமாக இருக்கும் என்று அவனிற்கு வரன் தேட ஆரம்பித்தார்.
கோவிலில் அமர்ந்து வளர்மதி தியானத்தில் இருக்க ,'எனக்கு நல்ல மருமகளை கொண்டு வந்து என்கிட்ட சேர்த்திடுப்பா .. அவளை என்னோட பொண்ணு மாறி நல்ல பாத்துக்குவேன். எனக்கு பிடிச்ச பெண்ணே அவனுக்கும் பிடிக்கணும். இப்போ வர அவன் யாரையும் காதலிக்கவில்லை . அவனுக்கு மனசுக்கு பிடிச்ச பொண்ணு யாராயிருந்தாலும் அவளை தான் அவனுக்கு கட்டிவைப்பேன். அவள் என்னோட பையன நல்ல பாத்துக்கணும் .இன்னொரு தாயை போல , அவள் இருக்கனும். அப்படி பட்ட மருமகளை எனக்கு கொண்டு வந்து சேர்த்துடு கடவுளே ' என்று மனமுருகி வேண்டிக்கொண்டு இருந்தார்.
வேண்டி முடித்துவிட்டு அவர் எழுந்துகொள்ள , அவரது மடியில் இருந்து ஒரு போட்டோ விழுந்தது.
அந்த பெண்ணை பார்த்ததும் அவருக்கு பிடித்துவிட்டது . தனது மகனிற்கு ஏற்ற சீதை இவள் என்று அருகில் பார்க்க , அங்கே தனசேகரும் மதுவும் பேசிக்கொண்டு இருந்தனர். தனசேகர் தான் அவரது மடியில் போட்டோவை போட்டுவிட்டு வந்து உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.
அந்த போட்டோவில் இருந்த பெண் வேறுயாருமில்லை நம்ம மதுவே தான்.
மது கோவில் பிரகாரம் சுத்தி வர, வளர்மதி நடந்ததை தனசேகரிடம் கூறி பொண்ணு கேட்டாள். அவருக்கோ பழம் நழுவி பாலில் விழுந்தது போல இருந்தது. பையனின் தகவல்களை வாங்கிக்கொண்டு நாளை இதே கோவிலில் வைத்து பார்ப்போம் . இருவருக்கும் பிடித்தால் மேற்கொண்டு பேசுவோம் என முடிவெடுத்துவிட்டு கிளம்பினார்கள்.
பாவம் அவர்களுக்கு தெரியவில்லை மதுவினால் தனது பையனின் வாழ்க்கையே நரகமாக போகிறதென்று. ஒருவேளை தெரிந்து இருந்தால் , அவர் இதற்கு சம்மதிக்காமல் இருந்துஇருப்பாரோ............
மதுவிடம் விஷயத்தை கூற அவள் சிரித்துவிட்டு , வழக்கம்போல அவனது புகைப்படத்துடன் (மது ஒரு போட்டோவை பார்த்து பேசுவானு சொல்லியிருக்கேன்ல அவன்தான் . அருண் இல்லை) கதைக்க தொடங்கிவிட்டாள்.
வழக்கம் போல அருணிற்கு மெசேஜ் செய்து , பேசிக்கொண்டு இருந்தாள்.
whatsapp ஸ்டேட்டஸ் மதுவது காதலில் தவிப்பது போலவும் ஸ்டேட்டஸ் வைத்து தன்னுடைய உணர்வுகளை அவனுக்கு தெரியப்படுத்தும் விதமாக முன்னேறிக்கொண்டு இருந்தாள்.
அவளது உணர்வுகளை புரிந்தவன் போல , அருணிற்கும் அவள் மீது காதல் முளைக்க தொடங்கியது.
மறுநாள் , காலை விடியலே அவனுக்கு அவளிடமிருந்து பெண் பார்க்க வருகிறார்கள் என்ற தகவல் அவனை முற்றிலுமாக சாய்த்தது.
அருண் : உனக்கு விருப்பமா ? என்று கேட்டுவிட்டு 'அவள் விரும்பக்கூடாது ' என அனைத்து தெய்வங்களையும் வேண்டிவிட்டு ரிப்ளைக்காக காத்துஇருந்தான்.
அவளோ ,அவன் வலையில் சிக்கியதை எண்ணி , மெதுவாக குளித்துவிட்டு , ஆஃபீசிற்கு லீவு சொல்லிவிட்டு , அருணிற்கு மெசேஜ் செய்தாள்.
மது : எனக்கு விருப்பமில்லை .நான் ஒருவரை காதலிக்கிறேன் அதுவும் ஒருமனதாக , அவர் சொல்லுவாருனு வெயிட் பண்ணுனேன் . இப்போ நானே சொல்லவேண்டியதா போச்சு'
ஒருமணிநேரம் காத்துஇருந்தவன், அவளது பதிலைக்கேட்டு உடைந்தான். அவள் காதலிக்கிறாள் இன்னொருவரை என்ற நினைப்பு கூட அவனை இதயத்தை கூறு போட்டது. ஒருவேளை எனக்கு இருப்பது போல அவளும் என்னை நினைத்து சொல்கிறாளோ என்று அவளுக்கு கால் செய்தான்.
மெசேஜ் மூலம் பேசவேண்டிய விடயம் அல்ல இது என்று நினைத்து , மேலும் அவளது பதிலிற்கு காத்திராமல் ,உடனே பதில் தெரியவரும் என்று கால் செய்தான்.
அருண் : யாரை காதலிக்குறாய் ? என்று எடுத்து கேட்டுவிட்டு அவள் பதிலும் கூறும் அந்த பத்து வினாடிகளுக்குள் நூறுமுறை அது தானாக இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டே தனது விரல்களை கிராஸ் வைத்துக்கொண்டான் .இதுவும் அவள் கூறியதே ..
மது: அது .. அது .. அத நானே எப்படி சொல்லுவேன் .. அந்த லூசு பக்கி சொல்லும்னு நான் வெயிட் பண்ணுனேன் ,அவன் என்ன லவ் பன்னுறானான்னு தெரியாம நானே எப்படி சொல்லுவேன்
அருண் : ப்ளீஸ் டி .. யாருன்னு சொல்லு அவன்கிட்ட நானே பேசுறேன் உனக்கு கல்யாணம் பண்ணிவைக்குறேன் . எனக்கு இப்போவே அது யாருனு தெரிஞ்சுக்கணும் சொல்லு .. என்று மனம் முழுக்க தவிப்புடன் மனதை கல் ஆக்கிக்கொண்டு கூறினான்.
மது : இவ்ளோ சொல்றேனே புரிஞ்சுக்க தெரியாத பக்கி .. என்று சிரித்துக்கொண்டே கூற , பக்கி என்ற வார்த்தைமூலம் அது தான் என்று உறுதிப்பட்டுவிட
அருண் : யாஹூஊஊஒ .. என்று கத்தி , பெட் மீது ஏறி குதித்துக்கொண்டு , அவளிடம் போனிலேயே , ' ஐ லவ் யு டி பொண்டாட்டி...' என்று அவளை கொஞ்சிக்கொண்டு இருந்தான்.
மது : லவ் யு டூ புருஷா .. நான் போய் ரெடி ஆகி அந்த மாப்பிளையை வேணான்னு சொல்லிடுறேன்.
அருண் : ஹேய் .. நீ ஒன்னும் அவன் முன்னாடி போய் நிக்க வேண்டாம் .. உங்க அப்பாகிட்ட பேசிட்டு சொல்லு
மது : ம்ம் சரி .. என்று போனை வைத்துவிட்டு அழுதுகொண்டே , அந்த போட்டோவிடம் சென்று , முதல் காரியம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது .. என்று கூறிவிட்டு கிளம்ப தொடங்கினாள்..
அருண் சந்தோசமாக கிளம்பிக்கொண்டு இருந்தான்.. எப்படியும் அவளை பார்த்துவிட வேண்டும் என்று .. வளர்மதி அவனது முகத்தில் உள்ள சந்தோசத்தை பார்த்து சிரித்துக்கொண்டே கோயிலிற்கு கிளம்ப சொன்னார்கள். அவனும் மகிழ்ச்சியாக கிளம்பிச்சென்றான்.
அங்கே சென்றதும் வளர்மதி , உனக்கு ஒரு சர்ப்ரைஸ் என்று பொண்ணு பார்க்க வந்துஇருக்கிறோம் என்று விஷயத்தை கூற , அவனோ அதிர்ச்சியடைந்து இருக்க , பெண்ணை பார்த்து பிடிக்கவில்லை என்று கூறிவிடுவோமென்று சமாதான படுத்திகொண்டு தன்னவளின் அழைப்புக்காக காத்துஇருந்தான்.
இளம் சிவப்பு நிற ஆடை உடுத்தி , பாந்தமாக நகை அணிந்து , அனைவரையும் கும்பிட்டு விட்டு அமர்ந்தாள் மது ..
அருணிற்கு மதுவை பார்த்ததும் , பிடித்துவிட்டது அதைவிட நிம்மதியாக இருந்தது. அவளிடம் சொல்லி கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என நினைத்து மனக்கோட்டை கட்டிக்கொண்டு இருந்தான்.
மதுவும் அருணை பார்த்து ஷாக் ஆவது போல் நடித்தாள். இருவரும் பேசவேண்டும் என்று தனியாக கோவிலை சுற்றி வர சென்றனர்..
அருண் , மது தான் அவன் காதலிக்கும் பெண் , அந்த குரலுக்கு சொந்தக்காரி என்று அறிந்துகொள்வானா ..
மது தன்னை வெளிப்படுத்துவாளா , இல்லை அவனை விட்டு விலகி வேதனை தருவாளா ..
அடுத்த பகுதியில் காண்போம்...........
💕💕நீயே என் இதயமடி -6💕💕
Reviewed by SaraThas
on
December 15, 2018
Rating:

No comments: