SaraThas Blog

தலை குனிந்து என்னை பார் ,தலை நிமிர வைக்கிறேன் - புத்தகம்

💕💕நீயே என் இதயமடி -9💕💕

அருண் : உனக்கு ஒரு surprise வச்சுஇருக்கேன் ..
மது : என்ன அது ..
அருண் : பர்ஸ்ட் நாம சாப்பிடுவோம் ..என்று அவளை அமரச்செய்து தனது கைகளால் பரிமாறினான் ..
 இருவரும் பெயருக்கு எதோ சாப்பிட்டுவிட்டு , அங்கே இருந்த ஒரு ரூமிற்குள் அழைத்து சென்றான். அது வெளியே கார்டன் கு செல்லும் வழி .மது தயங்கியபடியே நிற்க , 'டிரஸ்ட் மீ ' என்று அவளை அழைத்து சென்றான். அங்கே அவளுக்கு பிடித்த படி டெகரேட் செய்து அவளை உள்ளே அழைத்து சென்றான். செயற்கையாக பனிமழை பொழிய , வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு , இருந்தது. ஒரு மரம் முழுக்க வண்ண விளக்குக்களால் அவளது போட்டோ , ஒரு புறமும் , அவனது போட்டோ மறுபுறமும் அமைந்து மின்னியது. அவள் உள்ளே வந்தது முதல் , இப்போதுவரை உள்ள உணர்ச்சிகளின் சங்கமமாக அது இருந்தது. புதிதாக வாங்கப்பட்ட பைக் இருக்க , இருவரும் ஏறி அமர்ந்து அந்த கார்டெனை ஒரு ரவுண்டு அடித்தனர். பின்னர் கதைகளை பேசியபடியே அவளை அவளது வீட்டில் ட்ராப் செய்தான்.
மது : போகணுமா ..
அருண் : இப்போ போ .. நான் போய் அம்மாகிட்ட சொல்லுறேன் ஓகே ஆஹ் . அப்புறம் உன்ன சீக்கிரம் கடத்திட்டு சாரி தூக்கிட்டு வந்து என்னோடவே வச்சுக்கப்போறேன்.
மது : இனிமேல் ஆபீஸ் ல தான் பாக்கமுடியுமா
அருண் : இந்த பைக் உனக்குத்தான்.. நான் உன்ன தினமும் பிக்கப் பண்ணிக்குறேன் ..ஓகே ஆஹ்
மது : ஓகே .......... என்று அவள் வீட்டில் செல்ல , அருணும் அவனது வீட்டிற்கு சென்றான்.
இருவரும் நடந்ததை அவர்களது கண்ணோட்டத்தில் கூற , அனைவர்க்கும் மகிழ்ச்சியே..
மணி(மது அண்ணன் ) இல்லாததால , அவர்கள் மீண்டும் வீட்டிற்கு வரும் வைபவம் தள்ளி வைக்கப்பட்டது. இவர்களது காதலும் வளர்ந்துகொண்டே இருந்தது. மது அருணின் மனதில் அவனது காதல் ராணியாக சிம்மாசனமிட்டு உட்கார்ந்து இருந்தாள்.
(பிளாஷ் பேக் ஓவர் .. ஹப்பாடா ஒருவழியா இந்த பிளாஷ் பேக் முடிச்சுட்டேன்.. இன்னும் நிறைய பிளாஷ் பேக் இருக்கு.. அதெல்லாம் பின்னாடி சொல்லுறேன் )
இன்று ..
இருவரும் அவர்களது நினைவில் இருந்து வெளிவந்து , மறுபடியும் இன்றைய நிகழ்விற்காக தங்களை தயார் செய்து கொண்டனர்.
இருவரது குடும்பமும் மறுபடியும் சந்தித்துக்கொள்ள , அவர்கள் இருவரும் சீக்கிரம் திருமணம் செய்ய வேண்டும் என்று வளர்மதி சொல்ல , " மணி இன்னும் 10நாள் தான் இருப்பான். அவன் வந்ததும் தான் திருமணம் செய்யணும். இப்போது விட்டால் அவன் வருவதற்கு எப்படியும் ஒருவருடம் ஆகிவிடும் " என்று தன்னுடைய பங்கை எடுத்துக்கூறினார் தனசேகர்.
வளர்மதி , அழைத்து வந்த ஜோசியர் , இன்னும் 7 நாட்களில் ஒரு நல்ல முகூர்த்தம் இருக்கிறது . அப்போது நிச்சயம் செய்துகொண்டு பின்னர் பொறுமையாக கல்யாணம் செய்து கொள்ளலாம் . ஆனால்  ஒருவருடம் கழித்து அவர்கள் திருமணம் செய்ய முடியாது, நிறைய தடைகள் ,பிரச்சனைகள் வரும். என்று கூறினார்.

என்ன செய்வதென்று முடிவு எடுக்கமுடியாமல் இருக்க , மணி " நான் என்னுடைய லீவை அதிகரித்து மேலும் 10 நாட்கள் எடுக்கிறேன். நாம் அனைவரும் சேர்ந்து நெருங்கிய உறவுகளை வைத்து திருமணத்தை நடத்துவோம். பின்னர் எல்லாருக்கும் அழைப்பு விடுத்து வரவேற்பு வைத்துவிடலாம் " என்று கூற அனைவருக்கும் அது சரி என்று பட்டது.
இன்றைய தினத்திலிருந்து 7ஆம் நாள் நிச்சயம் ,15ஆம் நாள் திருமணம் , அடுத்து ஒரு மாதம் கழித்து வரவேற்பு வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்தனர்.
நிச்சயத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய , மது அருண் இருவரும் வேலை தவிர மற்ற அனைத்து நேரமும் போனில் பிஸியாக இருந்தனர். தனா, மணி இருவரும் அவர்களது உறவு முறைக்கு அழைப்பு விடுக்க , வளர்மதி அவரது உறவுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
மது -அருண் இருவரும் நிச்சய மண்டபம் , டிரஸ் , சாப்பாடு என அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
மது , அருணிடம் சொல்லி ,தனக்கு பிடித்த நிறத்தில் சேலை , பிடித்த நகை எடுத்து கொண்டு அவளது வீட்டில் வைத்துவிட்டாள்.
வளர்மதி , பரம்பரையாக வரும் நகைகளுடன் , அவருக்கு பிடித்த நிறத்தில் சேலை எடுத்து மதுவிடம் தர , மது சங்கடமாக அருணை பார்த்துவிட்டு அதை வாங்கி வைத்துக்கொண்டாள்.
அருண் , 'அம்மா நாங்க ஆல்ரெடி டிரஸ் எடுத்துட்டோம் , மது இதைத்தான் போடப்போற ' என்று காமிக்க , ஒரு நிமிடம் அவரது முகம் சோகமாகியது. பின் , சமாளித்து சரிப்பா , இது ரொம்ப நல்லாயிருக்கு என்று அரைமனதாக கூற, மது 'பரவலா ஆண்ட்டி , நான் நீங்க குடுத்தத்தவே போட்டுக்கறேன் ' என்று மிக நல்லவள் போல காட்டிக்கொண்டாள்.
வளர்மதியும் அருணும் அவளது குணத்தை மெச்சிக்கொண்டனர் , தங்களது தேர்வு தவறு அல்ல என்று... பாவம் அவர்கள் அறியவில்லை , வளர்மதி பேசும்போது ஆடை பற்றி கூறியதால் அவள் வேண்டுமென்றே வேறு ட்ரெஸ் எடுத்து அதை அருண் வாயால் கூறவைத்தாள் என்று..
பரபரப்பாக நிச்சய வேலைகள் நடக்க , நாட்களும் நகர்ந்தது.. நிச்சயம் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம் ..

💕💕நீயே என் இதயமடி -9💕💕 💕💕நீயே என் இதயமடி -9💕💕 Reviewed by SaraThas on December 15, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.