அருணும் மதுவும் கோவிலின் பிரகாரத்தை சுற்றியபடியே , பேசிக்கொண்டு வந்தனர்..
அருண் : நீ தான் பொண்ணு அப்படினு எனக்கு தெரியாது. ஒரு வகையில இதுவும் எனக்கு சந்தோசம் தான்..
மது : எனக்கும் அதேதான் தோணுது.. நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் ..
அருண் : நானும் சொல்லணும் , எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை .. உன்னோட மனச நோகடிக்கணும்னு சொல்லுல .. நான் வேற ஒரு பொண்ண லவ் பண்றேன் . என்று அவளிடம் கூற ,மதுவும் நானும் ஒரு பையன லவ் பண்றேன் .. உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு யோசிச்சிட்டுஇருந்தேன் , நல்லவேளை நீங்களே சொல்லிடீங்க என்று இருவரும் சாதாரணமாக பேசிக்கொண்டு அங்கே வந்து அமர்ந்து கொண்டனர். அருண் அவனது அம்மாவிடம் வீட்டிற்கு சென்று முடிவு சொல்லலாம் என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டான். அவரும் அதே போல் கூறிவிட்டு , தத்தமது வீட்டிற்கு சென்றனர்.
தன்னவளின் அழைப்புக்காக காத்துஇருக்க , அவள் அழைத்தவுடன் என்ன நடந்தது (மதுவின் பிளான்படி , அவள் வேண்டாம் என்று கூறியதாக மட்டுமே கூறினாள் ),எங்கே சந்திப்பது என்று இருவரும் முடிவு எடுத்துக்கொண்டனர்.
அருண் வீட்டிற்கு சென்றதும் ,தனது அன்னையிடம் தன் காதலை பற்றி கூற , அவரோ நாளை போய் பார், அவளுடன் பேசு . பிறகு முடிவு செய்துகொள்ளலாம். எனக்கு உன்னுடைய சந்தோசம் தான் முக்கியம் என்று கூறிவிட்டு இறைவனை பிரார்த்திக்க சென்றார்.
அவனது காதல் கை கூடவேண்டும் , அவள் இந்த வீட்டிற்கு மகாலக்ஷ்மியாக வரவேண்டும் என்று வழக்கம்போல் வேண்டிக்கொண்டார்.
அருணும் சில ஏற்பாடுகளை அவர்கள் சந்திக்கும் இடத்தில் செய்துவிட்டு , நாளை அவளை சந்தித்தவுடன் எனது காதலை முறையாக தெரிவிக்க வேண்டும் அவளது ஆசைப்படியே நான் அவளுக்கு ப்ரொபோஸ் செய்ய வேண்டும் என்று அவள் கூறியதை நினைத்து பார்த்தான்.
(conversation starts
மது : லவ் பத்தி என்ன நினைக்குற ?
அருண் : அது ஒரு உணர்வு. அன்பு கூட சொல்லலாம் . அம்மாக்கு பிள்ளைகள் மேல லவ் , பிள்ளைகளுக்கு பெற்றோர் மீது இருப்பதும் லவ் தான் . பிரண்ட்ஸ்க்குள் இருப்பதும் லவ் , உறவுகளுக்குள் இருப்பதும் ஒருவகையான அன்பு தான். மனிதர்கள் மட்டுமில்லாமல் வேற உயிரனத்துக்கிட்டேயும் நாம அன்பு வைக்குறோம் . உயிரற்ற பொருள் மீது கூட நாம அன்பு வைக்குறோம் ., இப்படி சொல்லிட்டே போகலாம் .. gappe லைன்ல இருக்கியா ?
மது: ..........😴😴😴😴
அருண் : gappee............ என்று கத்த தூக்கத்தில் இருந்து எழுவதுபோல ,
மது: ம்ம் .. முடிச்சுட்டியா .. உங்கிட்ட தெரியாம கேட்டுட்டேன் .. ப்ளீஸ் ,நான் தூக்கம் வராதபோ சொல்றேன் .. அப்போ இதே மாறி பேசு , நல்ல தூக்கம் வருது.. பேசாம ,நீ ஏன் இத ஒரு சென்டர் மாறி வச்சு நடத்தக்கூடாது எதிர்காலத்துல ..ரொம்ப நல்ல வருமானம் வரும் ..
அருண் : சொல்லுவடி .. உனக்கு வர வர வாய்க்கொழுப்பு அதிகாமபோய்டுச்சு. நான் என்ன மொக்கையா போட்டுட்டுஇருக்கேன் .. நீ பாட்டுக்கு தூங்குற , இங்க நான் பாட்டுக்கு பேசிகிட்டு இருக்கேன்..
மது : ஆமா, ஆமா .. என்னோட சீக்ஸ் எல்லாம் chubby ஆஹ் மாறிடுச்சு கொழுப்பு அதிகமானதுனால .. இன்னொருவிசயம் என்னன்னா .. நீ போடுறது அசல் நம்பர் ஒன் மொக்க .. சந்தோசப்படு , நான் தூங்கமட்டும் தான் செஞ்சேன் .. வேறுயாராவது கேட்டுஇருந்த இந்நேரம் தக்காளி செடியில் தூக்குபோட்டு தொங்கியிருப்பாங்க ..
அருண் : அப்படியா டி .. சரி, நீ சொல்லு லவ் பத்தி உன்னோட ஒப்பீனியன் என்ன ?
மது : லவ் .. அது சூப்பர் பீல் .. நீ சொல்றமாறி நாம எல்லாத்துமேலயும் லவ் அதாவது அன்பு காட்டலாம். ஆனால் , நமக்கே நமக்குன்னு ஒருத்தவங்க மேல அதாவது நான் ஒரு பையன் மேல எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாம , அவங்க சந்தோசமா இருக்கனும் னு நினைக்குறது , அவங்களுக்கு ஒரு சின்ன கஷ்டம் வந்தாலும் நம்மளால அத தாங்கமுடியாம அந்த கஷ்டத்தை தன்மேல் சுமத்திக்கறது , நம்மளோட எல்லா வரத்திலேயும் அவங்கள முன் நிறுத்தி , நமக்கு கிடைக்குற எல்லா சந்தோஷமும் அவங்களுக்கு கிடைக்கும்னு வேண்டிக்கிட்டு , அவங்க நம்மள மதிக்கவே இல்லேன்னாலும் நம்ம மனசு அவங்கள சுத்தியே வரும். காதல்னு வந்துட்டா கண் இல்லைனு சொல்லுவாங்க .. உண்மைதான் .. அவங்க எவ்ளோ தப்பு பண்ணுனாலும் நமக்கு தெரியாது . அவங்க நம்மகிட்ட காமிக்குற சின்ன அக்கறை , கரிசனம் ,ஒரு பார்வை அதுக்காக நாம தவம் கிடப்போம் .. ஒரு தடவை பார்க்கமாட்டார்களா .. என்கிட்ட ஒரு வார்த்தை பேசாமடங்களா இப்படி எல்லாம் என்ன தோணும்.. லூசு மாறி அவங்க சொல்ற எல்லாத்துக்கும் சிரிச்சுட்டு , பொய்யா கோவிச்சுக்கிட்டு , வேற பொண்ண பார்த்த முறைச்சுக்கிட்டு இப்படி எல்லாம் சிரிப்பு , கோவம் , சின்ன சண்டை னு இருக்கும்..
அருண் : ஹாப்பா ... எவ்ளோ பெரிய விளக்கம்.. எல்லாமே சரிதான்.. என்று மனதிற்குள் உன்கிட்டேயும் எனக்கு இந்தமாறி பீல் ஆகுது அதுக்கு பேர் லவ் ஆஹ் னு தெர்லயே சொல்லிக்கொண்டான்.
மது : இதுமட்டுமில்லை ..இன்னும் இருக்கு .. இப்போதைக்கு இவ்ளோ போதும். இதெல்லாம் சொல்றதைவிட அனுபவிச்சு பாக்கணும் .. அந்த உணர்வுகளை அப்புடியே நெஞ்சுல நிறுத்தி , அவனுக்காக என்னோட எல்லாத்தையும் இழக்க தயாரா இருக்கனும்..எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவனுக்கு மட்டுமே நான் சொந்தமாகணும் . இப்படி மது அடிக்கிட்டே போக .. அருண் அவளை நிறுத்திவிட்டு ,
அருண் : போதும் போதும் .. லவ் பத்தின விளக்கம் .. லவ்வர் அதாவது உன்னோட புருஷன் எப்படி இருக்கணும்னு சொல்லு ..
மது : அது எப்படி சொல்லமுடியும் .. உனக்கு தெரிஞ்சுக்கனும்னா நீ 4 டைரி படிக்கணும் .. அப்போது தான் தெரிஞ்சுக்க முடியும்.
அருண் : என்னது 4 டைரி ஆஹ்.. சூப்பர் ... உன்னைப்போல எனக்கு வரப்போறவளும் இருந்துட்டா நான் என்ன பண்ணுவேன் ..
மது : கண்டிப்பா .. எல்லா பொண்ணுகளுக்கும் தனக்கு வரப்போறவர் பத்தி நெறைய கனவு ஆசை னு இருக்கும். அவன் எப்படி ப்ரொபோஸ் பண்ணனும் , எப்படி கோவம் வந்த சமாளிக்கணும் இப்படி நிறைய இருக்கும் .
அருண் : லவ்வர் எப்படி இருக்கணும்னு சொல்லமாட்டேனு சொல்லிட்டே .. அப்போ எப்படி அவன் ப்ரொபோஸ் பண்ணனும்னு சொல்லு
மது : அஸ்குபுஸ்கு ... நான் உங்கிட்ட சொல்லமாட்டேன் .. அவனுக்கு எப்படி தோணுதோ அப்படி ,பட் யாரும் அப்படி ப்ரொபோஸ் பண்ணியிருக்கக்கூடாது . அந்த மாறி பண்ணனும். எல்லாத்தையும் விட எனக்குள்ள இருக்க பீலிங்ஸ் ஆஹ் புரிஞ்சுகிட்டு அவன் எனக்கு ப்ரொபோஸ் பண்ணனும். அப்படி பண்ணுறப்போ என்னால அடுத்த வார்த்தை பேசமுடியாம அவனை ஹக் பண்ணி என்னோட லவ் ஆஹ் சொல்லணும்..
அருண் : விளங்கும் .. அப்போ உன்ன கூட்டிட்டு போய் சுடுகாட்டுல நிக்கவைச்சுத்தான் லவ் ஆஹ் சொல்லணும். அப்போதான் யாரும் பண்ணதமாறி டிபரண்ட் ஆஹ் இருக்கும் .. ஆளப்பாரு .. பாவம் பசங்க .. அதுவும் உங்கிட்ட மாட்டிட்டு முழிக்க போறவன நினைச்ச கவலையாயிருக்கு ...
மது : நீ கஷ்டப்படாத ... அவர் எனக்கு பிடிச்சமாறி பண்ணுவார் .. அவர் அதை விரும்பி செய்வார் .. அது கஷ்டம்னு நினைக்கமாட்டார்.
அருண் : கஷ்டம் னு சொன்ன விட்டுடுவியாக்கும் .. போ போ போய் இன்னும் 10 டைரி எழுது ..
conversation over)
என்று அவர்களது உரையாடல்களை நினைத்து சிரித்துக்கொண்டே அவளுக்கு எப்படி ப்ரொபோஸ் செய்வது என்று திட்டமிட தொடங்கினான்..
அது என்ன பிளான்னு அடுத்த பார்ட் ல பார்க்கலாம் ...
💕💕நீயே என் இதயமடி -7💕💕
Reviewed by SaraThas
on
December 15, 2018
Rating:

No comments: