Saturday, December 8, 2018

நினைவெல்லாம் நீயே - பகுதி 3



கதையின் நாயகன்

தன்மீது வழிந்த வேர்வை துளிகளை துடைத்துவிட்டு புதிய ஷர்ட்டை அணிந்து கொண்டு அவனை கண்ணாடி முன் தயார்படுத்திக்கொண்டான்.. பின் தனது பையை திறந்து 2000 கட்டை எடுத்து தனது அருகில் இருந்த பெண் மீது வீசி எறிந்தான்.. அவள் பணத்தை பார்த்ததும் தனது உடலை தனது துணி கொண்டு மறைத்துக்கொண்டு அதை எடுத்து ஆர்வமாக எண்ணிக்கொண்டு இருந்தாள் உடை நழுவுவது கூட தெரியாமல்..
அவன் அருவெறுப்பாக அவளை பார்த்தான்..
"உனக்கு இன்னும் 5 நிமிடம் தான் இருக்கு" என்று அழுத்தத்துடன் கூற , அவள் கிளம்ப ஆரம்பித்தாள்..
 உடனே தான் சென்று கொண்டு இருந்த காரை நிறுத்தி அவளை நடுவழியில் இறக்கிவிட்டுட்டு கிளம்ப , அவளோ " வேற எப்போதுஎன்றாலும் கூப்பிடு " என்று ஒரு மார்க்கமாக பார்க்க , அதையும் அருவருத்து புழுவை பார்ப்பதுபோல் பார்த்தான்..
"எனக்கு ஒரு தடவை எச்சில் பட்டதை தொட பிடிக்காது " என்று கார் கதவை மூடிக்கொண்டு வேகமாக கிளம்பினான்..
டிரைவர் சீட்டில் இருந்தவர் , அவனை பார்க்க , " வண்டியை நேராக கிளப் க்கு விடு" என்று கூறினான்..
டிரைவர் , தனது மனநிலைமையை பார்த்து நொந்துகொண்டு வேகமாக அவன் சொன்ன இடத்தில் கொண்டு சேர்த்தார்.. நொந்துகொண்டு ஏன்னு யோசிக்குறீங்களா ? இருக்காதா பின்னே .. இரவு 12 மணிக்கு ஒரு பெண்ணுடன் காரிலேயே டிரைவர் இருக்கும்போதே சல்லாபித்துக்கொண்டு கிளப் போய் அங்கேயும் குடித்துவிட்டு , பெண்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்டுவிட்டு 3 அல்லது 4 மணி வரை அவனுக்காக காத்துஇருந்து வீட்டில் விடவேண்டும்..
பிறகு காலை உறங்கிவிட்டு மதியம் முதல் அடுத்த நாள் வரை அவனுக்கு இதே போல் சேவகம் செய்ய வேண்டும் ..ஐயா எவ்ளோ நல்ல மனிதர் .. அவருக்கு போய் இப்படி குணக்கேடான பிள்ளையா ? என்று நொந்து கொண்டு இருக்கிறார் டிரைவர் சண்முகம் ..
கிளப் சென்று நன்றாக குடித்துவிட்டு ஆட்டம் போட்டுவிட்டு , தள்ளாடியபடியே வண்டிக்கு வருகிறார் நம் ஹீரோ கவின் என்னும் கவின்குமார்.. 
ஷண்முகம் அவனை கைத்தாங்கலாக பிடித்து காரில் அமர வைத்துவிட்டு வீட்டிற்கு கொண்டு போய் சேர்த்து தனது கடமையை முடித்துக்கொண்டார்..
வீட்டில் உள்ள வேலைக்காரன் முருகன் , அவனை கைத்தாங்கலாக அழைத்துச்சென்று அவனது ரூமில் படுக்க வைத்து வந்துவிட்டு பால் வாங்க சென்றான் ..( அப்போ உங்களுக்கே தெரிஞ்சு இருக்கும் அவன் எப்போ வந்துஇருப்பானு )..
ஹீரோ குடும்பம் பற்றி சில வரிகள் ...
தாத்தா - ராஜமாணிக்கம் , பாட்டி - லட்சமி இருவருக்கும் ஆண் ஒன்று பெண் ஒன்று என இரு குழந்தைகள்.. ஆண்(கவின் அப்பா ) - ரகுநாத் , கவின் அம்மா - மைதிலி அவர்களுக்கு ஒரே பையன் கவின்.. பெண் தனக்கு பிடித்தவனை காதலித்து வீட்டைவிட்டு ஓடிவிட , பணத்திற்காக இப்படி செய்துவிட்டோம் என்று கவின் அவர்களை தவறாக நினைத்துக்கொள்கிறான்.. அவனுக்கு அத்தை என்றால் கொள்ளை பிரியம்..கவினுக்கு வயது 5 வரை அத்தையிடமே வளர்ந்தான் .. அதனால் அவனுக்கு அத்தை என்றால் உயிர்.. பணத்திற்காக அத்தையை அடித்துவிரட்டி விட்டார்கள் என்று உறவுகளுக்குள் பேச , அது அந்த பிஞ்சின் மனதில் ஆழப்பதிந்து போனது..
மகளின் கவலையிலே தாத்தாவும் பாட்டியும் உருக்குலைந்து போக , ரகுநாத் தொழிலை கவனிக்க , மைதிலி வீட்டை கவனித்துக்கொண்டு இருந்தாள்.. கவின் அத்தை இல்லாமல் சோகமாக இருக்கிறான் என்று நினைத்துக்கொண்டு அவனை தனித்துவிட , அதுவே இவர்களுக்கு எதிரியாகியது..
வயதுகோளாரும் , கெட்ட நண்பர்களின் சேர்க்கையும் அவனை இந்தமாறி படுகுழியில் தள்ளியது..பணம் தானே அத்தையை பிரிக்க காரணம் என்று அதை வைத்தே தனது குடும்பத்திற்கள்மீது வெறுப்பை உமிழ்ந்தான்.. மற்றவர்கள் கூறுவதை பிடிவாதத்தால் கேட்காமல் இருந்தான்.. பிறகு அவனுக்கு உரிய சேர்க்கை நடத்தையால் அவர்கள் கூறுவதை நம்பாமல் மறுத்து முன்னை விட மோசமாக நடந்துகொண்டான்
கவின் POV :
காலை கண்விழித்ததும் தலை பாரமாக இருந்தது.. குளித்துவிட்டு தயாராகி கீழே சென்று பார்த்தேன்.. அம்மா சமைத்துக்கொண்டு இருந்தார் மதிய உணவுக்காக.. இன்னிக்கு எனக்கு மனசு ஏனோ பாரமாக இருந்தது ..விக்கியை கால் செய்து இன்னொரு பெண்ணை ஏற்பாடு செய்ய சொன்னேன்..அவனும் என்னை திட்டிவிட்டு , சரி என்று சொன்னான்.. அவன் என்னுடைய நண்பன் .. அவனுக்கு நான் எங்கேயாவது சென்று நோயை வரவழைத்துகொள்வேனோ என்று பயம்.. என்னை திருத்த முயற்சிகள் மேற்கொண்ட , இப்போ வரை முயற்சி செய்கின்ற ஒரே ஆள் அவன்தான்.. மற்ற நண்பர்கள் எல்லாம் என்னுடைய பணத்திற்காக என்னை சுற்றி இருந்தனர்..
அத்தை பற்றி அவனுக்கு தெரிந்ததை கூறினான்.. அவனை நம்ப முடியவில்லை .. அவர்கள் எனது நண்பனையும் ஏமாற்றி விட்டார்கள் என்று நினைத்துக்கொண்டு அவனை இதை பற்றி பேசவேண்டாம் என்று எச்சரித்துவிட்டேன்..
பார் சென்று குடித்துவிட்டு , விக்கி சொன்ன அறைக்கு சென்றேன்.. அங்கே ஒரு பெண் ஒல்லியாக , வாடி போய் கிடந்தாள்..போதையில் அவளை பார்த்ததும் எனக்கு ஒருமாறியாக இருந்தது..
நான் இன்னும் மதுவை எடுத்து குடித்துவிட்டு அவள் அருகில் செல்ல , அவள் பயந்தபடியே 'பசிக்குது' என்று கூறினாள்.. நானும் அங்கே இருந்த சிக்கன் எடுத்து குடுத்தேன் .. அவளும் அதை வாங்கி சாப்பிட்டாள் .. மதுவை நானும் குடிக்க , பின் எழுந்து அவளை தொட போனேன்.. அவள் பயந்து பின்னால் நகர , நான் அவளை மீண்டும் தொட சென்றேன்.. அவள் என்னை தடுத்தாள் .. நான் கீழே விழுக , அவள் அறையின் மூலையில் போய் ஒண்டிக்கொண்டாள் .. எனக்கு இருந்த போதை , கோவத்தில் , அவளை அறைந்துவிட்டு மீண்டும் மதுவை எடுத்து குடிக்க ஆரம்பித்தேன்..
'அம்மாஆ ' என்று சுருண்டு விழுந்தாள்..
அடித்த அடியில் ,மயக்கத்தில் புலம்பிக்கொண்டு இருந்தாள் ..
 பின் அவளை இழுத்து வந்து பெட்மீது போட்டு அவளது ஆடைகளை களைய தொடங்கினேன்..
அவளது உடம்பை பார்த்ததும் எனக்குள் என்னை அறியாமல் கண்ணீர் வந்தது.. ஆங்காகே தீக்காயம் , வாடிய மலர் போல இருந்தாள்.. 'அம்மா எங்கமா இருக்க .. பயமாயிருக்குமா ' என்று அவளது உணர்வு மறந்த நிலையிலும் அவள் கூறியது எனது காதில் விழுந்தது..
அவள் அருகிலேயே நான் படுத்து உறங்கிவிட்டேன்.. காலை எழுந்து அவளை பார்க்க பாவமாக இருந்தது .. மீண்டும் உடைகளை அணிவித்து விட்டு , அவளை எழுப்பினேன்..
அவள் மலங்க விழித்துவிட்டு , என்னை பார்த்து பயந்தாள் ..
"பயப்படாதே .. உன்னோட பேர் என்ன "
"ஜோ ..ஜோ...ஜோதி "...........     

No comments:

Post a Comment